Nanban
11-04-2003, 03:52 PM
சமைஞ்ச பொண்ணு
படபடப்புடனும், தவிப்புடனும்
உன்னருகிலே நின்றிருந்தேன் -
மாலையும் கழுத்துமாக.
நீ நேசத்துடன் புன்னகைத்து
என் நண்பர்களுடன்
கை குலுக்கினபொழுதிலே
நான் உன்னை மதித்தேன்.
மோதிர விரலின் எடை
குறைவென்று
உன் சொந்தம் ஒன்று
குதித்த பொழுது
ஒரு கடைக் கண் பார்வையால்
நீ கீழடக்கிய பொழுது
உன்னிடத்தில்
நான் நன்றியுடையவளானேன்.
நெருப்பின் வெக்கையில்
வேர்த்துப் போன மேனியும்
புகையின் கரிச்சலில்
கலங்கிப் போன கண்களுமான
என்னைத் தொல்லை செய்யாது
முதலிரவிலே எனக்கு ஓய்வு தந்த
உன்மீது காதலுடையவளானேன்.
உன்னவளான பின்பு
முதன்முதலாய்
என் முதல்தேதியின் வரவை
எனக்கே
நீ திருப்பித் தந்த பொழுது
உன்னை
நான் மனிதனாக உணர்ந்தேன்.
இவையத்தனையும்
இணைந்தென்னை
உணரச் செய்தது
என்னை,
உனக்காக
சமைஞ்ச பொண்ணாக.
படபடப்புடனும், தவிப்புடனும்
உன்னருகிலே நின்றிருந்தேன் -
மாலையும் கழுத்துமாக.
நீ நேசத்துடன் புன்னகைத்து
என் நண்பர்களுடன்
கை குலுக்கினபொழுதிலே
நான் உன்னை மதித்தேன்.
மோதிர விரலின் எடை
குறைவென்று
உன் சொந்தம் ஒன்று
குதித்த பொழுது
ஒரு கடைக் கண் பார்வையால்
நீ கீழடக்கிய பொழுது
உன்னிடத்தில்
நான் நன்றியுடையவளானேன்.
நெருப்பின் வெக்கையில்
வேர்த்துப் போன மேனியும்
புகையின் கரிச்சலில்
கலங்கிப் போன கண்களுமான
என்னைத் தொல்லை செய்யாது
முதலிரவிலே எனக்கு ஓய்வு தந்த
உன்மீது காதலுடையவளானேன்.
உன்னவளான பின்பு
முதன்முதலாய்
என் முதல்தேதியின் வரவை
எனக்கே
நீ திருப்பித் தந்த பொழுது
உன்னை
நான் மனிதனாக உணர்ந்தேன்.
இவையத்தனையும்
இணைந்தென்னை
உணரச் செய்தது
என்னை,
உனக்காக
சமைஞ்ச பொண்ணாக.