rambal
13-05-2004, 05:22 PM
பூனையின் பச்சை நிறக்கண்கள்..
இருளில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது பூனையின் கண்கள்... பூனையின் பச்சை நிற கண்கள்...
அவளுக்கும் பூனையின் பச்சை நிறக் கண்கள்தான்.. பூனையின் பச்சை நிறக் கண்களை நேருக்கு நேராய் பார்ப்பது
என்பது சாத்தியம் இல்லாத செயல்.. அந்தக் கண்கள் உடலை காகிதமாய் கிழித்து ஊடுருவிச் செல்லும்
பிணத்தின் மூக்கில் நுழையும் சிற்றெறும்புகளைப் போல்.. பின் அடி வயிற்றில் கையை விட்டுத் துளாவும்
சாப்பாட்டை பிசையும் கரம் போல். அந்தக் கண்களை சந்திக்க எனக்கு பயம். பூனையின் பச்சை நிறக் கண்களைப்
பார்ப்பதென்றால் என்னால் முடியாத காரியம்.. ஆனாலும், இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு என்னை ஊடுருவிப் பார்க்கின்றன பூனையின் பச்சை நிறக்கண்கள்.
எந்தப் பக்கம் தாவிச் செல்வது என்பது பற்றி எந்தவொரு தீர்மானத்திற்கும் வராமல் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.
"இன்னும் முடிவு பண்ணலையா?"
"இல்லை.."
"அப்ப ஏன் என்னைக் காதலிச்ச?"
"தெரியலை.."
"வேணுன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?"
"எனக்கு இஷ்டம் இல்லை.."
"அப்படின்னா உன் வீட்ல பாத்த பொண்ணையே கட்டிக்க வேண்டியதுதான?"
"என்னை வார்த்தையால கொல்லாத.. ப்ளீஸ்"
"ஸீ ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. இப்படி மதில் மேல் பூனையா நின்னுட்டிருந்தா என்ன அர்த்தம்?"
"அதான் எனக்கும் புரியலை.."
"அப்ப நான் சொன்னமாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ்.."
"அது முடியாது.."
"அதான் ஏன்?"
"வீட்டை விட்டு வந்து வீட்டுக்குத் தெரியாம கல்யாணம்.. என்னால நினைச்சுப் பாக்கக் கூட முடியாது.."
"அப்படீன்னா என்ன பண்ணலாம்னு சொல்லு.."
...................
...................
"பேசாம என்னை மறந்திடு.."
"ஏன்?"
"உன்னை எங்க வீட்டில பிடிக்கலை.. நிறைய பிரச்சினை.." நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்கள் கலங்கின..
பூனையின் பச்சை நிறக்கண்கள்..
நாடகம் ஆடி மயக்கப் பார்க்கிறது.. திசைகளைக் குழப்பிவிட்டு ஞாபக அடுக்குகளை சிதைக்கப்பார்க்கிறது. பூனையின் பச்சை நிறக்கண்கள்..
ஜன்னலில் பூனையைக் காணவில்லை.
பூனையின் பச்சை நிறக்கண்கள் மாத்திரம் கண்களின் முன் பிம்பமாய் நின்றுவிட்டது. தண்ணீர் கொண்டு கழுவியும் போகவில்லை.
பார்க்குமிடமெல்லாம் பூனையின் பச்சை நிறக்கண்கள்.
அடுக்குகள் கலைய ஆரம்பித்தன.. தூசி வெளியேறி தும்மல் வந்தது. அடுக்குத் தும்மல் வர ஆரம்பித்தது.
அத்தனைக்கும் காரணம் பூனையின் பச்சை நிறக்கண்கள்..
இப்போது பூனை எங்கிருந்தோ திரும்பி வந்து மீண்டும் ஜன்னல் கம்பியில் அமர்ந்தது. பின், என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தது.
"ஒரு வேளை உனக்கு என் மேல் பாதர்லி இமேஜாக இருக்கலாம்? இல்லியா?"
"இப்ப இருக்கணும்னு சொல்றீங்களா? இருக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா?"
"இங்க பாரு.. எனக்கு சரியான நேரத்துல மேரேஜ் ஆகியிருந்தா இந்நேரத்துக்கு உன் வயசுல எனக்கு ஒரு பொண்ணு இருந்திருக்கும்.."
"பொண்ணு இருந்திருக்கும்.. ஆனால், இல்லை.. அப்புறம் அதப் பத்தி ஏன் யோசிக்கிறீங்க?"
"முடிவா நீ என்னதான் சொல்ல வற்ற?"
"ஐ லைக் யூ... உங்களுக்கு என்னை பிடிக்கலை?"
பச்சை நிறக் கண்கள் பள பளக்க பூனை கேட்டது..
ஜன்னல் கம்பியில் அமர்ந்திருந்த பூனை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது..
"நான் ஐ லைக் யூ சொல்லிட்டதால என்னைய என்ன வேண்ணா பண்ணலாம்னு உங்க பிளானா?..
நமக்குள்ள பந்தம் இன்னியோட அத்து போச்சு.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.. பை.."
பூனை கோபமாய் வெளியேறியது..
பூனையின் பச்சை நிறக்கண்கள்.. மிருதுவானவை. அழகானவை. ஆபத்தானவை.
அவளுடைய கண்களின் நிறமும் பச்சை நிறக் கண்கள்தான் பூனைக் கண்களைப் போலவே..
ஜன்னலில் இருந்த பூனை இப்போது அமைதியாய் ஜன்னலை விட்டு இறங்கி அடுப்படிப் பக்கம் சென்று விட்டுத் திரும்பியது.
அது சாப்பிடுவதற்கான பொருட்கள் ஏதும் இங்கில்லை என்பது அதற்கெப்படித் தெரியும்?
மீண்டும் ஜன்னல் கம்பியில் ஏறி அமர்ந்து கொண்டு என்னை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தது.
"இந்த வயசுல உங்க புத்தி ஏன் இப்படி கெட்டுப் போச்சு?"
"ஏய் என்ன நடந்துச்சுன்னு இபடி குதிக்கிற?"
"மகள் வயசுல இருக்கிற பொண்ணோட ஏன் இப்படி சுத்துறீங்க? பாக்றவங்க என்ன நினைப்பாங்க.."
இவளுக்கு இதெல்லாம் யார் சொன்னது? கோபம் தலைக்கேற
"அப்படித்தான் சுத்துவேன்.. உனக்கென்ன?"
அன்று இந்த வீட்டை விட்டுப் போனவள்தான்.. இன்னும் திரும்பி வரவில்லை..
பூனை ஜன்னலில் இருந்து வெளிப்புறம் குதித்து என் கண்களில் இருந்து மறைந்தது.
இருளில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது பூனையின் கண்கள்... பூனையின் பச்சை நிற கண்கள்...
அவளுக்கும் பூனையின் பச்சை நிறக் கண்கள்தான்.. பூனையின் பச்சை நிறக் கண்களை நேருக்கு நேராய் பார்ப்பது
என்பது சாத்தியம் இல்லாத செயல்.. அந்தக் கண்கள் உடலை காகிதமாய் கிழித்து ஊடுருவிச் செல்லும்
பிணத்தின் மூக்கில் நுழையும் சிற்றெறும்புகளைப் போல்.. பின் அடி வயிற்றில் கையை விட்டுத் துளாவும்
சாப்பாட்டை பிசையும் கரம் போல். அந்தக் கண்களை சந்திக்க எனக்கு பயம். பூனையின் பச்சை நிறக் கண்களைப்
பார்ப்பதென்றால் என்னால் முடியாத காரியம்.. ஆனாலும், இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு என்னை ஊடுருவிப் பார்க்கின்றன பூனையின் பச்சை நிறக்கண்கள்.
எந்தப் பக்கம் தாவிச் செல்வது என்பது பற்றி எந்தவொரு தீர்மானத்திற்கும் வராமல் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.
"இன்னும் முடிவு பண்ணலையா?"
"இல்லை.."
"அப்ப ஏன் என்னைக் காதலிச்ச?"
"தெரியலை.."
"வேணுன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?"
"எனக்கு இஷ்டம் இல்லை.."
"அப்படின்னா உன் வீட்ல பாத்த பொண்ணையே கட்டிக்க வேண்டியதுதான?"
"என்னை வார்த்தையால கொல்லாத.. ப்ளீஸ்"
"ஸீ ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. இப்படி மதில் மேல் பூனையா நின்னுட்டிருந்தா என்ன அர்த்தம்?"
"அதான் எனக்கும் புரியலை.."
"அப்ப நான் சொன்னமாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ்.."
"அது முடியாது.."
"அதான் ஏன்?"
"வீட்டை விட்டு வந்து வீட்டுக்குத் தெரியாம கல்யாணம்.. என்னால நினைச்சுப் பாக்கக் கூட முடியாது.."
"அப்படீன்னா என்ன பண்ணலாம்னு சொல்லு.."
...................
...................
"பேசாம என்னை மறந்திடு.."
"ஏன்?"
"உன்னை எங்க வீட்டில பிடிக்கலை.. நிறைய பிரச்சினை.." நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்கள் கலங்கின..
பூனையின் பச்சை நிறக்கண்கள்..
நாடகம் ஆடி மயக்கப் பார்க்கிறது.. திசைகளைக் குழப்பிவிட்டு ஞாபக அடுக்குகளை சிதைக்கப்பார்க்கிறது. பூனையின் பச்சை நிறக்கண்கள்..
ஜன்னலில் பூனையைக் காணவில்லை.
பூனையின் பச்சை நிறக்கண்கள் மாத்திரம் கண்களின் முன் பிம்பமாய் நின்றுவிட்டது. தண்ணீர் கொண்டு கழுவியும் போகவில்லை.
பார்க்குமிடமெல்லாம் பூனையின் பச்சை நிறக்கண்கள்.
அடுக்குகள் கலைய ஆரம்பித்தன.. தூசி வெளியேறி தும்மல் வந்தது. அடுக்குத் தும்மல் வர ஆரம்பித்தது.
அத்தனைக்கும் காரணம் பூனையின் பச்சை நிறக்கண்கள்..
இப்போது பூனை எங்கிருந்தோ திரும்பி வந்து மீண்டும் ஜன்னல் கம்பியில் அமர்ந்தது. பின், என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தது.
"ஒரு வேளை உனக்கு என் மேல் பாதர்லி இமேஜாக இருக்கலாம்? இல்லியா?"
"இப்ப இருக்கணும்னு சொல்றீங்களா? இருக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா?"
"இங்க பாரு.. எனக்கு சரியான நேரத்துல மேரேஜ் ஆகியிருந்தா இந்நேரத்துக்கு உன் வயசுல எனக்கு ஒரு பொண்ணு இருந்திருக்கும்.."
"பொண்ணு இருந்திருக்கும்.. ஆனால், இல்லை.. அப்புறம் அதப் பத்தி ஏன் யோசிக்கிறீங்க?"
"முடிவா நீ என்னதான் சொல்ல வற்ற?"
"ஐ லைக் யூ... உங்களுக்கு என்னை பிடிக்கலை?"
பச்சை நிறக் கண்கள் பள பளக்க பூனை கேட்டது..
ஜன்னல் கம்பியில் அமர்ந்திருந்த பூனை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது..
"நான் ஐ லைக் யூ சொல்லிட்டதால என்னைய என்ன வேண்ணா பண்ணலாம்னு உங்க பிளானா?..
நமக்குள்ள பந்தம் இன்னியோட அத்து போச்சு.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.. பை.."
பூனை கோபமாய் வெளியேறியது..
பூனையின் பச்சை நிறக்கண்கள்.. மிருதுவானவை. அழகானவை. ஆபத்தானவை.
அவளுடைய கண்களின் நிறமும் பச்சை நிறக் கண்கள்தான் பூனைக் கண்களைப் போலவே..
ஜன்னலில் இருந்த பூனை இப்போது அமைதியாய் ஜன்னலை விட்டு இறங்கி அடுப்படிப் பக்கம் சென்று விட்டுத் திரும்பியது.
அது சாப்பிடுவதற்கான பொருட்கள் ஏதும் இங்கில்லை என்பது அதற்கெப்படித் தெரியும்?
மீண்டும் ஜன்னல் கம்பியில் ஏறி அமர்ந்து கொண்டு என்னை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தது.
"இந்த வயசுல உங்க புத்தி ஏன் இப்படி கெட்டுப் போச்சு?"
"ஏய் என்ன நடந்துச்சுன்னு இபடி குதிக்கிற?"
"மகள் வயசுல இருக்கிற பொண்ணோட ஏன் இப்படி சுத்துறீங்க? பாக்றவங்க என்ன நினைப்பாங்க.."
இவளுக்கு இதெல்லாம் யார் சொன்னது? கோபம் தலைக்கேற
"அப்படித்தான் சுத்துவேன்.. உனக்கென்ன?"
அன்று இந்த வீட்டை விட்டுப் போனவள்தான்.. இன்னும் திரும்பி வரவில்லை..
பூனை ஜன்னலில் இருந்து வெளிப்புறம் குதித்து என் கண்களில் இருந்து மறைந்தது.