Nanban
11-04-2003, 03:34 PM
கால மயக்கத்தில் வீழ்ந்து
உறைந்து போய்
நிற்கும் மொழிப் போராளிகள் -
இங்கு ஆயிரமாயிரம்.
நிகழ் காலத்தைப் புதைத்து விட்டு,
இறந்த காலத்தை தொட்டிலிட்டு,
தாலாட்டுப் பாடும் பாவணர்கள் -
தாரளமுண்டு இவ்விடத்து.
கண்ணகியே, நீ
மீண்டும் இங்கு வந்து
பிறக்காதே.
முலையைத் திருகி எறிந்தால்
மதுரை எறியுமென்று
இன்னமும் நம்புகிறார்கள்
இங்கே.
பகையரசன் சுமந்த கற்களுக்கு
சுண்ணாம்பு அடித்து
வெறும் கல்லாக்கிவிட்டு
மாய்ந்து மாய்ந்து கவிதை
வாசித்தவர்கள்
மறந்து போனார்கள் -
ஆயிரம் ஆண்டுகள் அல்ல,
அய்ம்பது ஆண்டுகளுக்குப்
பின்னர் நினைத்துப் பார்க்க
தாங்கள் எதையும் விட்டுப்போக
முயற்சிக்கவில்லையென்று.
பழம் பெருமை போதும் நமக்கு
புதுப்பெருமை தேட......
புதுப்பாதை போட......
முயற்சிக்கலாம்.
உறைந்து போய்
நிற்கும் மொழிப் போராளிகள் -
இங்கு ஆயிரமாயிரம்.
நிகழ் காலத்தைப் புதைத்து விட்டு,
இறந்த காலத்தை தொட்டிலிட்டு,
தாலாட்டுப் பாடும் பாவணர்கள் -
தாரளமுண்டு இவ்விடத்து.
கண்ணகியே, நீ
மீண்டும் இங்கு வந்து
பிறக்காதே.
முலையைத் திருகி எறிந்தால்
மதுரை எறியுமென்று
இன்னமும் நம்புகிறார்கள்
இங்கே.
பகையரசன் சுமந்த கற்களுக்கு
சுண்ணாம்பு அடித்து
வெறும் கல்லாக்கிவிட்டு
மாய்ந்து மாய்ந்து கவிதை
வாசித்தவர்கள்
மறந்து போனார்கள் -
ஆயிரம் ஆண்டுகள் அல்ல,
அய்ம்பது ஆண்டுகளுக்குப்
பின்னர் நினைத்துப் பார்க்க
தாங்கள் எதையும் விட்டுப்போக
முயற்சிக்கவில்லையென்று.
பழம் பெருமை போதும் நமக்கு
புதுப்பெருமை தேட......
புதுப்பாதை போட......
முயற்சிக்கலாம்.