Nanban
11-04-2003, 01:42 PM
அழகி.....
நானும் நீயும்
இணைந்து நடந்தோம் -
பல அடி இடைவெளி விட்டு,
காற்றில் பறக்கும்
உன் முந்தானைக்குத் தடையில்லை....
உன் உணவை
நீ பிசைந்து தந்தாய் -
உன் கைகள் வானத்தில் இருந்தது,
ஏந்திய என் கைகள்
பூமியில் இருந்தது.....
புத்தகங்களைப் பகிர்ந்து
கொண்டோம் -
உள்ளே கடிதங்கள்
இல்லாமலே....
உன் நினைவு இனிமையைத்
தந்தது எனக்கு -
என் தனிமையை
நான் என்றும் தொலைத்ததில்லை,
உன் நினைவில்....
உனக்குத் திருமணம்
என்ற பொழுது,
வாழை மரம் கட்டினேன் -
உன் வீட்டு வாசலில்.
நீ
உன் மணாளன் வீட்டிற்குப் போக...
ஓடினேன்,
வாகனம் பிடித்து வர.....
நான், இன்று உன்னை
மறந்து போனேன்.
மண்டப வாசலில்
உன் தாய்,
இனி என் மகளைத் தேடாதே
என்று மடியேந்திய பொழுது.
நானும் நீயும்
இணைந்து நடந்தோம் -
பல அடி இடைவெளி விட்டு,
காற்றில் பறக்கும்
உன் முந்தானைக்குத் தடையில்லை....
உன் உணவை
நீ பிசைந்து தந்தாய் -
உன் கைகள் வானத்தில் இருந்தது,
ஏந்திய என் கைகள்
பூமியில் இருந்தது.....
புத்தகங்களைப் பகிர்ந்து
கொண்டோம் -
உள்ளே கடிதங்கள்
இல்லாமலே....
உன் நினைவு இனிமையைத்
தந்தது எனக்கு -
என் தனிமையை
நான் என்றும் தொலைத்ததில்லை,
உன் நினைவில்....
உனக்குத் திருமணம்
என்ற பொழுது,
வாழை மரம் கட்டினேன் -
உன் வீட்டு வாசலில்.
நீ
உன் மணாளன் வீட்டிற்குப் போக...
ஓடினேன்,
வாகனம் பிடித்து வர.....
நான், இன்று உன்னை
மறந்து போனேன்.
மண்டப வாசலில்
உன் தாய்,
இனி என் மகளைத் தேடாதே
என்று மடியேந்திய பொழுது.