Nanban
01-05-2004, 06:44 PM
கைதூக்கி நிற்கும்
சுதந்திரா தேவியே..!
ஏந்திய துப்பாக்கிகள் முன்
சரணடைந்தாயா?
எத்தனை கோடி மக்கள்
இழந்துவிட்டனர் தங்கள் சுதந்திரத்தை?
உன்னைக் கும்பிடும்
உன் தேசத்தவரின் துப்பாக்கி முனையால்?
எல்லா தேசங்களிலும் சிலைகள் உண்டு..
பல பறவைகளும் அமர்ந்து எச்சமிட சுதந்திரமுண்டு.
பல பறவைகளும் வேண்டாம் -
ஒரு புறாவாவது பறக்குமா உன்னருகே?
சுதந்திரமே எங்கள் மூச்சென்று முழங்கும்
உங்கள் தேசத்தவருக்குத் தெரியுமா -
எத்தனை குழந்தைகளின் வாழும் சுதந்திரம்
பறிக்கப் பட்டது என்று?
நித்தம் நித்தம் பயத்தில் உறைந்து வாழும்
உன் மக்களுக்கு எந்த சுதந்திரத்தை தந்தாய்?
சிவப்புக் கொடிகளைக் கண்டு அஞ்சினாய்;
பின்னர் செஞ்சீனாவைக் கண்டு அஞ்சினாய்;
வியட்நாமிற்குள் கலகமூட்டினாய்;
கொமேனியைக் கண்டு நடுங்கினாய்;
கொமேனி அழிக்க சத்தாமிற்கு சாதமிட்டாய்;
இன்று சத்தாம் நாட்டையும் சவக்குழியில் இட்டாய்;
எல்லா மக்களையும் அழித்தொழிப்பதில்
உன் சுதந்திரா தாகம் ரத்தம் குடிக்கிறது போதும் -
உன் கைகளை இறக்கி விடு -
அவை சுதந்திரத் தீபத்தை
உயர்த்திப் பிடிக்கும் கைகளல்ல -
பிணமெரிக்கும் நெருப்புச் சுவாலை தான்....
என்ன -
ஏற்றிய உன் கைகளை
இறக்க முடியவில்லையா?
ஆம், துருப்பிடித்த மூட்டுகள் அசையாது -
யாராவது அறுவைச் சிகிச்சை செய்து
அந்த கையை கீழிறக்கி வைத்தால் தான் உண்டு....
அந்த மருத்துவனையும் நீ எப்படி அழைப்பாய்?
தீவிரவாதி என்று தானே?
சுதந்திரா தேவியே..!
ஏந்திய துப்பாக்கிகள் முன்
சரணடைந்தாயா?
எத்தனை கோடி மக்கள்
இழந்துவிட்டனர் தங்கள் சுதந்திரத்தை?
உன்னைக் கும்பிடும்
உன் தேசத்தவரின் துப்பாக்கி முனையால்?
எல்லா தேசங்களிலும் சிலைகள் உண்டு..
பல பறவைகளும் அமர்ந்து எச்சமிட சுதந்திரமுண்டு.
பல பறவைகளும் வேண்டாம் -
ஒரு புறாவாவது பறக்குமா உன்னருகே?
சுதந்திரமே எங்கள் மூச்சென்று முழங்கும்
உங்கள் தேசத்தவருக்குத் தெரியுமா -
எத்தனை குழந்தைகளின் வாழும் சுதந்திரம்
பறிக்கப் பட்டது என்று?
நித்தம் நித்தம் பயத்தில் உறைந்து வாழும்
உன் மக்களுக்கு எந்த சுதந்திரத்தை தந்தாய்?
சிவப்புக் கொடிகளைக் கண்டு அஞ்சினாய்;
பின்னர் செஞ்சீனாவைக் கண்டு அஞ்சினாய்;
வியட்நாமிற்குள் கலகமூட்டினாய்;
கொமேனியைக் கண்டு நடுங்கினாய்;
கொமேனி அழிக்க சத்தாமிற்கு சாதமிட்டாய்;
இன்று சத்தாம் நாட்டையும் சவக்குழியில் இட்டாய்;
எல்லா மக்களையும் அழித்தொழிப்பதில்
உன் சுதந்திரா தாகம் ரத்தம் குடிக்கிறது போதும் -
உன் கைகளை இறக்கி விடு -
அவை சுதந்திரத் தீபத்தை
உயர்த்திப் பிடிக்கும் கைகளல்ல -
பிணமெரிக்கும் நெருப்புச் சுவாலை தான்....
என்ன -
ஏற்றிய உன் கைகளை
இறக்க முடியவில்லையா?
ஆம், துருப்பிடித்த மூட்டுகள் அசையாது -
யாராவது அறுவைச் சிகிச்சை செய்து
அந்த கையை கீழிறக்கி வைத்தால் தான் உண்டு....
அந்த மருத்துவனையும் நீ எப்படி அழைப்பாய்?
தீவிரவாதி என்று தானே?