poo
13-04-2004, 06:12 PM
சாறுபிழிந்த சக்கையாய்
சாதிச்சாக்கடையில்
சருகாய் மிதக்கும் அப்பா..
கிழிந்த சேலையில்
மானத்தை தைத்துவைத்த அம்மா...
மூணுவேளை சோறில்லை...
முகம்கோணவில்லை..இந்த விரதம்தான்
என் தாவணிக்கனவுகளை
தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது....
இருண்ட வீட்டில் அடைந்திருந்தேன்
கண்கள் கூசின...
விளக்குகள் ஒளிர்கிறது...
விவரம்கேட்டு ஓடினேன்..
விடியலைத்தேடி..விட்டிலானேன்..
கோடிசெலவில் கோடித்துணி..
சாதிச்சாக்கடையில்
சருகாய் மிதக்கும் அப்பா..
கிழிந்த சேலையில்
மானத்தை தைத்துவைத்த அம்மா...
மூணுவேளை சோறில்லை...
முகம்கோணவில்லை..இந்த விரதம்தான்
என் தாவணிக்கனவுகளை
தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது....
இருண்ட வீட்டில் அடைந்திருந்தேன்
கண்கள் கூசின...
விளக்குகள் ஒளிர்கிறது...
விவரம்கேட்டு ஓடினேன்..
விடியலைத்தேடி..விட்டிலானேன்..
கோடிசெலவில் கோடித்துணி..