poo
12-04-2004, 11:48 AM
அங்குமிங்குமாய்
அலைந்துகொண்டிருந்தென்னை
அடைத்துவைத்தாய்..
அடைகாத்த சுகத்தை அனுபவிக்கவைத்தாய்..
பாசப்போர்வைக்குள் சுருட்டிக்கொண்டு
உன் சுவாசத்தில் வாசம்பிடிக்கச்செய்து
உண்மை உறக்கத்தை வரவழைத்தாய்..
ப்ரியங்களை பரிமாற
மொழியேதுமில்லையென
உன் மௌன பாஷையினால் புரியவைத்தாய்..
சிரிப்பும்-அழுகையும்
எதிரும்-புதிருமல்லவென உறைக்கச்செய்தாய்..
ஸ்பரிசங்களை
சுவாசிக்க கற்றுக்கொடுத்தாய்...
பேதமில்லா நேசத்தை போதித்தாய்..
உன் புரியாத மொழிகளை
காற்றில் வடித்துவைக்கும்
கவிதைகளாய் கற்பனையில் சிலிர்க்கச்செய்தாய்..
அந்திநேர அமைதியில்...தென்றலின் தழுவலில்..
உன் கவிதைவரிகள் ஞாபகக்குளத்தில்
வளையங்களாய் வலம்வருவதையெண்ணி
வசந்தமே உன் பெயர் குழந்தை-யாவென
கூச்சலிட்டு......
கீச்சென.. என்னை கிண்டலடித்து
பறந்துபோகும் மாலைப்பறவைகளை
மனதினுள் ரசித்தபடி...
உன்னை மடிதனில் சுகமாய் படுக்கவைக்க...
உன் விரல்தனில் செல்லமாய் சொடுக்கெடுக்க...
உன் பாதங்களில் இதமாய் இதழ்பதிக்க...
இல்லம் விரைகிறேன்.. மீண்டும்..மீண்டும்..
வேதனைப்புயலில் சுழல்கையில்
உன் வெட்கப்புன்னகை வழியே
வேண்டிய வரத்தை அளித்த ஆண்டவனை
மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்..
புதையலேதும் வேண்டாம்.. இப்புன்னகைவிடுத்தென..
மீண்டும் ...மீண்டும்..
எனதருமை மகளே..
உனக்காகவே உயிர்வாழ்கிறேன்...
உன்னை ஈன்றவளும்
எனக்குள் புதைந்து இதுபோல்
புலம்புவதை புரிகிறாய்தானே?!!
அலைந்துகொண்டிருந்தென்னை
அடைத்துவைத்தாய்..
அடைகாத்த சுகத்தை அனுபவிக்கவைத்தாய்..
பாசப்போர்வைக்குள் சுருட்டிக்கொண்டு
உன் சுவாசத்தில் வாசம்பிடிக்கச்செய்து
உண்மை உறக்கத்தை வரவழைத்தாய்..
ப்ரியங்களை பரிமாற
மொழியேதுமில்லையென
உன் மௌன பாஷையினால் புரியவைத்தாய்..
சிரிப்பும்-அழுகையும்
எதிரும்-புதிருமல்லவென உறைக்கச்செய்தாய்..
ஸ்பரிசங்களை
சுவாசிக்க கற்றுக்கொடுத்தாய்...
பேதமில்லா நேசத்தை போதித்தாய்..
உன் புரியாத மொழிகளை
காற்றில் வடித்துவைக்கும்
கவிதைகளாய் கற்பனையில் சிலிர்க்கச்செய்தாய்..
அந்திநேர அமைதியில்...தென்றலின் தழுவலில்..
உன் கவிதைவரிகள் ஞாபகக்குளத்தில்
வளையங்களாய் வலம்வருவதையெண்ணி
வசந்தமே உன் பெயர் குழந்தை-யாவென
கூச்சலிட்டு......
கீச்சென.. என்னை கிண்டலடித்து
பறந்துபோகும் மாலைப்பறவைகளை
மனதினுள் ரசித்தபடி...
உன்னை மடிதனில் சுகமாய் படுக்கவைக்க...
உன் விரல்தனில் செல்லமாய் சொடுக்கெடுக்க...
உன் பாதங்களில் இதமாய் இதழ்பதிக்க...
இல்லம் விரைகிறேன்.. மீண்டும்..மீண்டும்..
வேதனைப்புயலில் சுழல்கையில்
உன் வெட்கப்புன்னகை வழியே
வேண்டிய வரத்தை அளித்த ஆண்டவனை
மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்..
புதையலேதும் வேண்டாம்.. இப்புன்னகைவிடுத்தென..
மீண்டும் ...மீண்டும்..
எனதருமை மகளே..
உனக்காகவே உயிர்வாழ்கிறேன்...
உன்னை ஈன்றவளும்
எனக்குள் புதைந்து இதுபோல்
புலம்புவதை புரிகிறாய்தானே?!!