rambal
11-04-2003, 07:21 AM
நிலவு....(ருத்ரா)
சூரியன்
அரிதாரம் பூசி
அவதாரம்
செய்தவள் நீ.
இந்த
சினிமாக்கவிஞர்களின்
பாட்டுகளா
உனக்கு 'பட்டா' போடுவது?
****************************
நிலவைக் கிழித்து
காதலிக்கு
ரவிக்கை தைத்தான்.
அவன் மட்டும்
கந்தலாகிக் கிடந்தான்.
****************************
அந்தச் சன்னலில்
அவள்
முகம் அழுத்தி
நின்று விட்டுப்போனதும்
அதை
நீ ஒற்றியெடுத்துக் கொண்டு
காட்சி தருகிறாய்.
*****************************
உன் அசுரப்பசிக்கு
அளவே இல்லையா?
எத்தனை 'அம்பிகாபதிகளை'
தின்றிருப்பாய் நீ?
*****************************
மூளியாய்
ஒரு வட்டம் வரைந்து
பெண்ணென்று
வானத்தில் எறிந்தான்
பிக்காஸோ.
அன்றிலிருந்து இன்று வரை
ஒவ்வொரு தேவதாசுக்கும்
இதுதான் பார்வதி...
******************************
கவிதையைக்
குடித்து விட்டு எறிந்த
உமர்க்கயாமின் காலிக்கிண்ணம் நீ.
அவன்
உதட்டுத் தடங்களில்
ஊறும்
நூறு நிலவுகள்.
*******************************
பூமி சுற்றுவது
ஏன் என்று
இப்போது புரிகிறது.
மதுக் கிண்ணமாய்
நீ அருகில் இருப்பதுதான்.
*******************************
இவர்கள் உன்னை
அமாவாசை
என்று அழைத்தாலும்
நீ எனக்கு
'பர்தா' அணிந்த
பௌர்ணமி.
*********************************
அவள் முகத்தில்
நீ
முகம் பார்த்துக் கொள்கிறாய்.
அவள் முகம்
கிடைக்காத் போது
உன் பெயர்
அமாவாசை...
சூரியன்
அரிதாரம் பூசி
அவதாரம்
செய்தவள் நீ.
இந்த
சினிமாக்கவிஞர்களின்
பாட்டுகளா
உனக்கு 'பட்டா' போடுவது?
****************************
நிலவைக் கிழித்து
காதலிக்கு
ரவிக்கை தைத்தான்.
அவன் மட்டும்
கந்தலாகிக் கிடந்தான்.
****************************
அந்தச் சன்னலில்
அவள்
முகம் அழுத்தி
நின்று விட்டுப்போனதும்
அதை
நீ ஒற்றியெடுத்துக் கொண்டு
காட்சி தருகிறாய்.
*****************************
உன் அசுரப்பசிக்கு
அளவே இல்லையா?
எத்தனை 'அம்பிகாபதிகளை'
தின்றிருப்பாய் நீ?
*****************************
மூளியாய்
ஒரு வட்டம் வரைந்து
பெண்ணென்று
வானத்தில் எறிந்தான்
பிக்காஸோ.
அன்றிலிருந்து இன்று வரை
ஒவ்வொரு தேவதாசுக்கும்
இதுதான் பார்வதி...
******************************
கவிதையைக்
குடித்து விட்டு எறிந்த
உமர்க்கயாமின் காலிக்கிண்ணம் நீ.
அவன்
உதட்டுத் தடங்களில்
ஊறும்
நூறு நிலவுகள்.
*******************************
பூமி சுற்றுவது
ஏன் என்று
இப்போது புரிகிறது.
மதுக் கிண்ணமாய்
நீ அருகில் இருப்பதுதான்.
*******************************
இவர்கள் உன்னை
அமாவாசை
என்று அழைத்தாலும்
நீ எனக்கு
'பர்தா' அணிந்த
பௌர்ணமி.
*********************************
அவள் முகத்தில்
நீ
முகம் பார்த்துக் கொள்கிறாய்.
அவள் முகம்
கிடைக்காத் போது
உன் பெயர்
அமாவாசை...