இளசு
29-03-2004, 07:30 PM
மீண்டும் தம்பிமார் உரையாடல்...
நீ...ண்ட இடைவெளிக்குப்பிறகு இன்று கொஞ்சம் அவகாசம் கிடைக்கவே
திடீர் மழை நேற்று பெய்து கொஞ்சம் வெக்கை தணிந்த மாலைப்பொழுதில்
தம்பிமார் வீட்டுக்கு விஜயம் செய்தேன்...
பக்கத்து வீடுதான்..பட்டணத்துப் பரபரப்பில் சந்திப்புகள் அத்தனை துர்லபம்..
வியப்பும் மகிழ்ச்சியுமாய் வரவேற்று டிபன் வேளையில் சரியாகச் சென்ற
என்னையும் உடன் சேர்த்து உபசரித்தார்கள்...
சி.த.: சரியான டயத்துக்குத்தான் வந்தீங்க சார்.. அண்ணன்கிட்ட அறிவுபூர்வ (!!!)
கேள்விகளாக் கேட்டு குடாய்ஞ்சிக்கிட்டிருந்தேன்... நீங்களும் கலந்துக்குங்க சார்..
பெ.த: ஹிஹி..அப்படி எல்லாம் இல்ல சார்.. தத்து பித்துன்னு முட்டாத்தனமா
இவன் பினாத்திட்டிருக்கான்.. அவன் கூட சேர்ந்து நானும்....
நாரோட சேர்ந்த பூ மாதிரி நாறிட்டிருக்கேன்..
எனக்கு நேற்று தம்பி முத்து மன்றத்தில் பதித்த கையெழுத்து ஏனோ
சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது...
இவ்வுலகத்தில் முட்டாள்தனமான கேள்வி என்று எதுவுமே இல்லை...
ஆனாலும் சில சமயங்களில் முட்டாள்தனமான பதில்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு
போனமுறை பசை போல் சாப்பிட்டு வாய் சீல் வைக்கப்பட்டு அவஸ்தைப்பட்ட நான்
இந்த முறை கொஞ்சம் உஷாராகவே ஒரு ஸ்வீட் அயிட்டத்தை கையாளும் மிரட்சி
கண்டு தம்பிகள் மந்தகாசம் பூத்தபடி பேச்சைத் தொடர்ந்தனர்..
சி.த: காதல்ன்னா என்னதான் அண்ணா?
பெ.த: எரிக் சீகல் "லவ் ஸ்டோரி" நாவலில் சொன்ன டெ�பனிஷன் தான் காதல் பத்தி
என் கருத்தும்..
LOVE is where you never got to say "I'm sorry"
என்னை மன்னிச்சிடுன்னு கேட்க அவசியமில்லா ஓர் உறவுதான் காதல்..
அன்பு வச்சவங்கள மனசறிஞ்சி புண்படுத்த முடியாது.
அப்படி தவறி நடந்துட்டா, இன்னொரு மனசு அதைப் பெரிசுபடுத்தி
மன்னிப்பு கேட்கட்டும்னு எதிர்பார்க்காது...
சி.த.: நட்புன்னா?
பெ.த: A FRIEND is One who knows everything about you and still loves you..
உன்னைப்பத்தின எல்லாம் தெரிஞ்சும் உன்னை நேசிக்கிறதுதான் நட்பு..
எனக்கு புரைக்கேறியது.. நண்பன் புதுசு என்னை நினைக்கிறானோ..?
சி.த: நட்பு வேறு, காதல் வேறுதானேண்ணே..?
பெ.த.: நிச்சயமா, ஆனா உண்மையான காதலின் உள்ளடக்கம் நட்பும் பரஸ்பர மரியாதை,
நம்பிக்கையும்..
சி.த: அண்ணே நீங்கதானே சொல்வீங்க..
உங்களப் பொருத்தவரைக்கும் பெண்கள் இரண்டு வகை...
ஒண்ணு : அழகுப் பெண்கள்
ரெண்டு : மிக அழகுப்பெண்கள்..ன்னு:)
அழகுன்றது... பார்வைக்குப் பார்வை மாறுபடுதே... உண்மையான அழகுன்னா என்னண்ணே?
பெ.த: எழுத்தாளர் ஜேகே சொல்வார் : எதை அப்புறமா நினைச்சுப்பார்த்தா சுகமா இருக்கோ
அவை எல்லாமே அழகானவைதான்...
சி.த: இந்த ஆண் - பெண் உறவில் ஈகோ சிக்கல் வராமல் இருக்க என்ன வழி?
பெ.த: நாப்பது வருசமா நல்ல குடித்தனம் பண்ணி, இன்னும் காதலோட இருக்கிற
நம்ம சாலமன் பாப்பையா அய்யா சொல்றதுதான் வழி :
இல்லறம்ற அகராதியில கண்டிப்பா இருக்க வேண்டிய சொற்கள்:
பாசம்
பொறுமை
விட்டுக்கொடுப்பது
உண்மை
நம்பிக்கை
நேர்மை
அதுலருந்து நீக்கவேண்டிய சொற்கள்:
சுயகவுரவம்
துரோகம்
ஆணாதிக்கம்
பெண்ணியம்
வற்புறுத்துதல்
கோபம்
சந்தேகம்
சி.த: மனிதர்கள் எப்பவும் திருப்தி இல்லாம இருக்காங்களே ஏண்ணே..?
பெ.த: அப்படி சொல்ல முடியாது.. திருப்தி என்பது தற்காலிக உணர்ச்சி..
அதான் அடுத்த திருப்தி தேடி அலையுறோம்..
ஒரு விருந்தில் உணவுக்குழாய்க்கு ஒரு இஞ்ச் கம்மியாய் வயிற்றை ரொப்பினால்
"ஒண்ணும் சொகமில்லே.."
உணவுக்குழாயில் ஒரு இன்ச் ஏறும் அளவுக்கு முங்கிட்டான்னா
"அடா அடா .. இதுல்ல விருந்து.. வாயத் தொறந்தா காக்கா கொத்தும் போல"
அதிருப்திக்கும் திருப்திக்கும் இடைவெளி கொஞ்சம்..
ஆனா திருப்தி என்பது நிரந்தரம் இல்லை என்பதே நிரந்தரம்.
நான் ஸ்நாக்ஸ் கொறிப்பதை நிறுத்திவிட்டேன்.. காபியை கையில் எடுத்தேன்..
சி.த: அண்ணே உங்க மிகப்பெரிய ஆசை என்னண்ணே?
பெ.த: நல்லா நடமாடிட்டு இருக்கும்போதே தூக்கத்தில் பொட்டுன்னு போயிடணும்..
இழுத்துப்பறிச்சி யாருக்கும் பாரமா இல்லாம.. :D .
இது தீவிர முனைப்பும் திடமான நம்பிக்கையும் உள்ள ஆசை.
அப்படி நான் நெனச்சது எல்லாமே நடந்திருக்கு.. இதுவும் நடக்கும். :D
சி.த: வாழ்க்கையின் வெற்றி என்னண்ணா?
பெ.த: அடடா, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்னு ஆடியன்ஸ் நினைக்கும்போது
ஒரு பேச்சாளர் நிறுத்துறார் பாரு..அதான் வெற்றி ஃபார்முலா..
முடிச்சுத் தொலைடா டேய்ன்ற நிலை தவிர்ப்பதுதான் வெற்றி..
ஆனா முந்தின நாள் கிடைச்ச கைதட்டலில் இன்னிய நிலையை மனுசன்
மறந்துடுறான் பாரு.. அதுதான் அதுல விசேஷம்..
அந்த வகையில் பார்த்தா... பாரதி, பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், எழுதறதை நிறுத்தின
ஜெயகாந்தன் வெற்றி...
ரஜினி இடைவேளை கழிச்சி வரும்வரை தியேட்டர் காலியடிக்கும் படத்தில் நடிச்ச சிவாஜி,
பெரியார், காமராஜர், அண்ணாவில் தொடங்கி, எம்ஜிஆருடன் நின்று, இன்று ஜெயலலிதாவுடன் சரிக்குச்சமமா
நிக்கும் "தலைவர்" கலைஞர்,
பராசக்தி எழுதிய பேனாவால் மீண்டும் பராசக்தி, மதுரை மீனாட்சின்னு குப்பை அள்ளிய எழுத்தாளர் கலைஞர்,
பாண்டியன் பரிசை படமாய் எடுக்க பட்டணம் போய், பட்டு, பட்டுப்போன பாவேந்தர்,
வாராந்தர ராணியில் அரங்கமும் அந்தரங்கமும் எழுதிய கவியரசு,
முக்காப்லா, லாலாக்கு டோல்டப்பி, பென்ஸ் கார்,ஜூராஸிக் பார்க் தரும் வாலி -
இவங்க எத்தனையோ சாதிச்சவங்க.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க.
ஆனாலும் என்னைப் பொருத்தவரைக்கும் ஒருவகையில் இவங்க தோல்வி. அடைஞ்சவங்கதான்..
நான் காபி குடிப்பதையும் நிறுத்திவிட்டு புறப்பட்டுவிட்டேன்...
தமிழ்மன்றத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறேன்..
அதைப்பற்றி தலைவரிடம் பேச வேண்டும்... :)
நீ...ண்ட இடைவெளிக்குப்பிறகு இன்று கொஞ்சம் அவகாசம் கிடைக்கவே
திடீர் மழை நேற்று பெய்து கொஞ்சம் வெக்கை தணிந்த மாலைப்பொழுதில்
தம்பிமார் வீட்டுக்கு விஜயம் செய்தேன்...
பக்கத்து வீடுதான்..பட்டணத்துப் பரபரப்பில் சந்திப்புகள் அத்தனை துர்லபம்..
வியப்பும் மகிழ்ச்சியுமாய் வரவேற்று டிபன் வேளையில் சரியாகச் சென்ற
என்னையும் உடன் சேர்த்து உபசரித்தார்கள்...
சி.த.: சரியான டயத்துக்குத்தான் வந்தீங்க சார்.. அண்ணன்கிட்ட அறிவுபூர்வ (!!!)
கேள்விகளாக் கேட்டு குடாய்ஞ்சிக்கிட்டிருந்தேன்... நீங்களும் கலந்துக்குங்க சார்..
பெ.த: ஹிஹி..அப்படி எல்லாம் இல்ல சார்.. தத்து பித்துன்னு முட்டாத்தனமா
இவன் பினாத்திட்டிருக்கான்.. அவன் கூட சேர்ந்து நானும்....
நாரோட சேர்ந்த பூ மாதிரி நாறிட்டிருக்கேன்..
எனக்கு நேற்று தம்பி முத்து மன்றத்தில் பதித்த கையெழுத்து ஏனோ
சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது...
இவ்வுலகத்தில் முட்டாள்தனமான கேள்வி என்று எதுவுமே இல்லை...
ஆனாலும் சில சமயங்களில் முட்டாள்தனமான பதில்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு
போனமுறை பசை போல் சாப்பிட்டு வாய் சீல் வைக்கப்பட்டு அவஸ்தைப்பட்ட நான்
இந்த முறை கொஞ்சம் உஷாராகவே ஒரு ஸ்வீட் அயிட்டத்தை கையாளும் மிரட்சி
கண்டு தம்பிகள் மந்தகாசம் பூத்தபடி பேச்சைத் தொடர்ந்தனர்..
சி.த: காதல்ன்னா என்னதான் அண்ணா?
பெ.த: எரிக் சீகல் "லவ் ஸ்டோரி" நாவலில் சொன்ன டெ�பனிஷன் தான் காதல் பத்தி
என் கருத்தும்..
LOVE is where you never got to say "I'm sorry"
என்னை மன்னிச்சிடுன்னு கேட்க அவசியமில்லா ஓர் உறவுதான் காதல்..
அன்பு வச்சவங்கள மனசறிஞ்சி புண்படுத்த முடியாது.
அப்படி தவறி நடந்துட்டா, இன்னொரு மனசு அதைப் பெரிசுபடுத்தி
மன்னிப்பு கேட்கட்டும்னு எதிர்பார்க்காது...
சி.த.: நட்புன்னா?
பெ.த: A FRIEND is One who knows everything about you and still loves you..
உன்னைப்பத்தின எல்லாம் தெரிஞ்சும் உன்னை நேசிக்கிறதுதான் நட்பு..
எனக்கு புரைக்கேறியது.. நண்பன் புதுசு என்னை நினைக்கிறானோ..?
சி.த: நட்பு வேறு, காதல் வேறுதானேண்ணே..?
பெ.த.: நிச்சயமா, ஆனா உண்மையான காதலின் உள்ளடக்கம் நட்பும் பரஸ்பர மரியாதை,
நம்பிக்கையும்..
சி.த: அண்ணே நீங்கதானே சொல்வீங்க..
உங்களப் பொருத்தவரைக்கும் பெண்கள் இரண்டு வகை...
ஒண்ணு : அழகுப் பெண்கள்
ரெண்டு : மிக அழகுப்பெண்கள்..ன்னு:)
அழகுன்றது... பார்வைக்குப் பார்வை மாறுபடுதே... உண்மையான அழகுன்னா என்னண்ணே?
பெ.த: எழுத்தாளர் ஜேகே சொல்வார் : எதை அப்புறமா நினைச்சுப்பார்த்தா சுகமா இருக்கோ
அவை எல்லாமே அழகானவைதான்...
சி.த: இந்த ஆண் - பெண் உறவில் ஈகோ சிக்கல் வராமல் இருக்க என்ன வழி?
பெ.த: நாப்பது வருசமா நல்ல குடித்தனம் பண்ணி, இன்னும் காதலோட இருக்கிற
நம்ம சாலமன் பாப்பையா அய்யா சொல்றதுதான் வழி :
இல்லறம்ற அகராதியில கண்டிப்பா இருக்க வேண்டிய சொற்கள்:
பாசம்
பொறுமை
விட்டுக்கொடுப்பது
உண்மை
நம்பிக்கை
நேர்மை
அதுலருந்து நீக்கவேண்டிய சொற்கள்:
சுயகவுரவம்
துரோகம்
ஆணாதிக்கம்
பெண்ணியம்
வற்புறுத்துதல்
கோபம்
சந்தேகம்
சி.த: மனிதர்கள் எப்பவும் திருப்தி இல்லாம இருக்காங்களே ஏண்ணே..?
பெ.த: அப்படி சொல்ல முடியாது.. திருப்தி என்பது தற்காலிக உணர்ச்சி..
அதான் அடுத்த திருப்தி தேடி அலையுறோம்..
ஒரு விருந்தில் உணவுக்குழாய்க்கு ஒரு இஞ்ச் கம்மியாய் வயிற்றை ரொப்பினால்
"ஒண்ணும் சொகமில்லே.."
உணவுக்குழாயில் ஒரு இன்ச் ஏறும் அளவுக்கு முங்கிட்டான்னா
"அடா அடா .. இதுல்ல விருந்து.. வாயத் தொறந்தா காக்கா கொத்தும் போல"
அதிருப்திக்கும் திருப்திக்கும் இடைவெளி கொஞ்சம்..
ஆனா திருப்தி என்பது நிரந்தரம் இல்லை என்பதே நிரந்தரம்.
நான் ஸ்நாக்ஸ் கொறிப்பதை நிறுத்திவிட்டேன்.. காபியை கையில் எடுத்தேன்..
சி.த: அண்ணே உங்க மிகப்பெரிய ஆசை என்னண்ணே?
பெ.த: நல்லா நடமாடிட்டு இருக்கும்போதே தூக்கத்தில் பொட்டுன்னு போயிடணும்..
இழுத்துப்பறிச்சி யாருக்கும் பாரமா இல்லாம.. :D .
இது தீவிர முனைப்பும் திடமான நம்பிக்கையும் உள்ள ஆசை.
அப்படி நான் நெனச்சது எல்லாமே நடந்திருக்கு.. இதுவும் நடக்கும். :D
சி.த: வாழ்க்கையின் வெற்றி என்னண்ணா?
பெ.த: அடடா, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்னு ஆடியன்ஸ் நினைக்கும்போது
ஒரு பேச்சாளர் நிறுத்துறார் பாரு..அதான் வெற்றி ஃபார்முலா..
முடிச்சுத் தொலைடா டேய்ன்ற நிலை தவிர்ப்பதுதான் வெற்றி..
ஆனா முந்தின நாள் கிடைச்ச கைதட்டலில் இன்னிய நிலையை மனுசன்
மறந்துடுறான் பாரு.. அதுதான் அதுல விசேஷம்..
அந்த வகையில் பார்த்தா... பாரதி, பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், எழுதறதை நிறுத்தின
ஜெயகாந்தன் வெற்றி...
ரஜினி இடைவேளை கழிச்சி வரும்வரை தியேட்டர் காலியடிக்கும் படத்தில் நடிச்ச சிவாஜி,
பெரியார், காமராஜர், அண்ணாவில் தொடங்கி, எம்ஜிஆருடன் நின்று, இன்று ஜெயலலிதாவுடன் சரிக்குச்சமமா
நிக்கும் "தலைவர்" கலைஞர்,
பராசக்தி எழுதிய பேனாவால் மீண்டும் பராசக்தி, மதுரை மீனாட்சின்னு குப்பை அள்ளிய எழுத்தாளர் கலைஞர்,
பாண்டியன் பரிசை படமாய் எடுக்க பட்டணம் போய், பட்டு, பட்டுப்போன பாவேந்தர்,
வாராந்தர ராணியில் அரங்கமும் அந்தரங்கமும் எழுதிய கவியரசு,
முக்காப்லா, லாலாக்கு டோல்டப்பி, பென்ஸ் கார்,ஜூராஸிக் பார்க் தரும் வாலி -
இவங்க எத்தனையோ சாதிச்சவங்க.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க.
ஆனாலும் என்னைப் பொருத்தவரைக்கும் ஒருவகையில் இவங்க தோல்வி. அடைஞ்சவங்கதான்..
நான் காபி குடிப்பதையும் நிறுத்திவிட்டு புறப்பட்டுவிட்டேன்...
தமிழ்மன்றத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறேன்..
அதைப்பற்றி தலைவரிடம் பேச வேண்டும்... :)