PDA

View Full Version : தேர்தல் கவிதை-5



poo
21-02-2004, 10:44 AM
வரதட்சனை வாங்கினால்
கிரிமினல் குற்றம்....
செய்தித்தாளை மேய்கையில்
முளைத்துக்கொண்டது சந்தேகப்பயிர்..
அந்த அரசு ஊழியனுக்கு...

"ஆமாம்..
அலுவலகத்தில் வைத்தா..
வீட்டில் வைத்தா?!!"

karikaalan
21-02-2004, 11:56 AM
கிரிமினல் மூளைதான் அவருக்கு! மனைவியிடம் கூட லஞ்சம் வாங்கத் துணிகிறாரே!

===கரிகாலன்

இக்பால்
21-02-2004, 01:45 PM
மண்டபம்தான். :)

poo
22-02-2004, 04:25 AM
வரதட்சனைக்கு தடாபோடுவோர் லஞ்சத்தை கண்டுகொள்ளாமலிருப்பதேனோ?!!

பரஞ்சோதி
22-02-2004, 12:37 PM
முதல் ஒன்று பழகாத ஒன்று
மற்றதோ நன்கு பழகியது.
இது தான் பழக்க தோஷமா?

இளசு
22-02-2004, 11:07 PM
ஆடிய காலும் பாடிய வாயும்...

பாராட்டுகள் பூ..