lavanya
12-02-2004, 10:16 PM
எய்ட்ஸை விட கொடிய ஹெபடடைஸ் - பி - 2
நோயின் அறிகுறிகள்:
1.இந்நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறுநீர் மஞ்சளாகவும் மலம் வெள்ளையாகவும் மாறும்
2.பசியின்மை,உற்சாகமின்மை இருக்கும்
3.கண்கள் படிப்படியாக மஞ்சளாக இருக்கும்
4.சோர்வு,தளர்ச்சி ஏற்படும்,சிலருக்கு சாப்பிட பிடிக்காது.
5.சிலர் சிறுநீரில் சோற்றை இரவில் போட்டு வைத்து சோதிப்பார்கள்.இதுவும் பலன்
அளிக்கும்.சோறு மஞ்சளாக மாறினால் அது பெரும்பாலும் மஞ்சள் காமாலையாகத்தான்
இருக்கும்.உடனே டாக்டரை அணுக வேண்டும்.
6. முதலில் சிறுநீர் பரிசோதனையும் பின்பு அதன் கடுமையை சோதிக்க இரத்தப்பரி
சோதனையும் செய்ய வேண்டும்.
மஞ்சள் காமாலை சியும் கடுமையானதுதான்.ஏ மற்றும் ஈ வகைகள் மலம்,நிலம் வழியாக பரவும் கிருமிகள் வாய் வழியாக சென்று தாக்கும். தூய்மையின்மையால் இது பரவுகிறது.
இந்நோய் தன்னைத்தானே கட்டுபடுத்திக்கொள்ளகூடியது.இது 95 சதவீதம் தீங்கு
விளைவிப்பதில்லை. 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளவர்க்கு இந்நோய் கல்லீரலை தாக்கி
அதை செயல் இழக்க செய்கிறது.
ஹெபடடைஸ் பி ரத்தத்தின் மூலம் உடலில் பரவி ஈரலை தாக்குகிறது.ஒருவருக்கு போட்ட
ஊசியை கிருமி நீக்கம் செய்யாமல் இன்னொருவருக்கு போடுதல்,ரத்த தானம் போன்றவற்றில்
மஞ்சள் காமாலை நோய்க்கிருமி உள்ளவரிடம் இருந்து பரவுகிறது.இதை சீரம் ஹெபடடைஸ்
என்று கூறுவர்.இந்த கிருமி உள்ள் ரத்தம் .00001 மி.லி அளவுக்கு ரத்தத்தில் கலந்தால் கூட
மஞ்சள் காமாலையை உண்டாக்கும் வீரியம் அதற்கு உண்டு.
குழந்தை பருவத்திலேயே இது ஏற்படுகிறது.எனினும் வந்து விட்டு போய் விடும்.சளி,மூட்டுவழி
பசியின்மை போன்றவை இருக்கும்.இதனால் ஈரல் புற்று நோயும் ஏற்படும்.இந்நோய் 60% முதல் 70 % வரை பெரியவர்களிடமே உருவாகிறது.குழந்தைகளில் 20 % முதல் 25 % வரை
உருவாகிறது.நீண்ட நாள் கல்லீரல் அலர்ஜி காரணமாக 20 % முதல் 30 % வரை மரணம்
விளைவிக்கும்.80 % கல்லீரலில் ஈடுபடும் புற்றுநோய்க்கு ஹெபடடைஸ் பி தான் காரணம்.
இந்த நோய் பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும்போது நோய் அறிகுறி தெரிவதில்லை.ஆனால் 90 சதவீதம் பேருக்கு கேரியர் எனப்படும் நோய்க்கிருமி உடலிலேயே தங்கியிருக்க வாய்ப்புண்டு.தாய்க்கு இருந்தால் 25 சதவீதம் குழந்தைக்கும் வர
வாய்ப்பு இருக்கிறது.30,40 வயது ஆகும்போது இது ஏற்படக்கூடும்.100 பேருக்கு இந்நோய்
ஏற்பட்டால் 90 பேருக்கு குணமாகிவிடுகிறது.5 முதல் 10 சதவீதம் பேர்தான் கேரியராக
இருக்கிறார்கள்.
குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் வர 50 சதவீதம்
வாய்ப்பு இருக்கிறது.அறுவை சிகிச்சை சாதனங்கள்,போதை மருந்து,அக்குபஞ்சர் போன்ற
ஊசி பயன்படும் எல்லாவகையிலும் இது பரவும்.
தடுப்பு முறைகள்:
குழந்தை பிறந்த உடனே 6 வாரங்களுக்கு பிறகும்,மூன்றரை மாதங்களுக்கு பிறகு மூன்றாவது ஊசியும் என்று 3 தடுப்பூசிகள் போட்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக
இருக்கும்.உலக சுகாதார நிறுவனம் 'பூஸ்டர் டோஸ் ' தேவை இல்லை என்று சொல்லி
விட்டது. வேண்டுமானால் முத்தடுப்பு ஊசியோடு இணைந்த தடுப்பூசியாக போட்டு
கொள்ளலாம்
தாய்க்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தால் பிறந்தவுடன் தடுப்பூசி போடவேண்டும்.
தாய்க்கு நோய்க்கிருமி இல்லாவிட்டால் ஒன்றரை மாதம் இரண்டரை மாதம் மூன்றரை
மாதங்களில் தடுப்பூசி போட்டால் போதுமானது.ஆனால் அத்தகைய்ய சோதனைகள் கருவுற்ற
காலத்தில் செய்யப்படாததால் குழந்தை பிறந்தவுடன் இந்த தடுப்பூசி எல்லா குழந்தைகளுக்கும் போட்டு விட வேண்டும்.
விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக தொண்டை அடைப்பான்,கக்குவான் இருமல்,ரண ஜன்னி,மஞ்சள் காமாலை - பி,ஹிப் என்னும் நுண்கிருமியால் ஏற்படும் மூளைகாய்ச்சல் நோய்
ஆகியவற்றையும் ஒரு சேரத்தடுக்கும் ஒரே தடுப்பூசியை மேலை நாடுகளில் இருப்பது போல
இந்தியாவிலும் போட்டுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
எனவே இந்நோய் வந்தால் தானே போய்விடும் என இல்லாமல்,நீரை காய்ச்சி குடிப்பதும்,
சூடான உணவை சாப்பிடுவதும் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக உரிய
தடுப்பு மருதை எடுத்துக்கொள்வது அவசியம்.
நோயின் அறிகுறிகள்:
1.இந்நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறுநீர் மஞ்சளாகவும் மலம் வெள்ளையாகவும் மாறும்
2.பசியின்மை,உற்சாகமின்மை இருக்கும்
3.கண்கள் படிப்படியாக மஞ்சளாக இருக்கும்
4.சோர்வு,தளர்ச்சி ஏற்படும்,சிலருக்கு சாப்பிட பிடிக்காது.
5.சிலர் சிறுநீரில் சோற்றை இரவில் போட்டு வைத்து சோதிப்பார்கள்.இதுவும் பலன்
அளிக்கும்.சோறு மஞ்சளாக மாறினால் அது பெரும்பாலும் மஞ்சள் காமாலையாகத்தான்
இருக்கும்.உடனே டாக்டரை அணுக வேண்டும்.
6. முதலில் சிறுநீர் பரிசோதனையும் பின்பு அதன் கடுமையை சோதிக்க இரத்தப்பரி
சோதனையும் செய்ய வேண்டும்.
மஞ்சள் காமாலை சியும் கடுமையானதுதான்.ஏ மற்றும் ஈ வகைகள் மலம்,நிலம் வழியாக பரவும் கிருமிகள் வாய் வழியாக சென்று தாக்கும். தூய்மையின்மையால் இது பரவுகிறது.
இந்நோய் தன்னைத்தானே கட்டுபடுத்திக்கொள்ளகூடியது.இது 95 சதவீதம் தீங்கு
விளைவிப்பதில்லை. 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளவர்க்கு இந்நோய் கல்லீரலை தாக்கி
அதை செயல் இழக்க செய்கிறது.
ஹெபடடைஸ் பி ரத்தத்தின் மூலம் உடலில் பரவி ஈரலை தாக்குகிறது.ஒருவருக்கு போட்ட
ஊசியை கிருமி நீக்கம் செய்யாமல் இன்னொருவருக்கு போடுதல்,ரத்த தானம் போன்றவற்றில்
மஞ்சள் காமாலை நோய்க்கிருமி உள்ளவரிடம் இருந்து பரவுகிறது.இதை சீரம் ஹெபடடைஸ்
என்று கூறுவர்.இந்த கிருமி உள்ள் ரத்தம் .00001 மி.லி அளவுக்கு ரத்தத்தில் கலந்தால் கூட
மஞ்சள் காமாலையை உண்டாக்கும் வீரியம் அதற்கு உண்டு.
குழந்தை பருவத்திலேயே இது ஏற்படுகிறது.எனினும் வந்து விட்டு போய் விடும்.சளி,மூட்டுவழி
பசியின்மை போன்றவை இருக்கும்.இதனால் ஈரல் புற்று நோயும் ஏற்படும்.இந்நோய் 60% முதல் 70 % வரை பெரியவர்களிடமே உருவாகிறது.குழந்தைகளில் 20 % முதல் 25 % வரை
உருவாகிறது.நீண்ட நாள் கல்லீரல் அலர்ஜி காரணமாக 20 % முதல் 30 % வரை மரணம்
விளைவிக்கும்.80 % கல்லீரலில் ஈடுபடும் புற்றுநோய்க்கு ஹெபடடைஸ் பி தான் காரணம்.
இந்த நோய் பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும்போது நோய் அறிகுறி தெரிவதில்லை.ஆனால் 90 சதவீதம் பேருக்கு கேரியர் எனப்படும் நோய்க்கிருமி உடலிலேயே தங்கியிருக்க வாய்ப்புண்டு.தாய்க்கு இருந்தால் 25 சதவீதம் குழந்தைக்கும் வர
வாய்ப்பு இருக்கிறது.30,40 வயது ஆகும்போது இது ஏற்படக்கூடும்.100 பேருக்கு இந்நோய்
ஏற்பட்டால் 90 பேருக்கு குணமாகிவிடுகிறது.5 முதல் 10 சதவீதம் பேர்தான் கேரியராக
இருக்கிறார்கள்.
குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் வர 50 சதவீதம்
வாய்ப்பு இருக்கிறது.அறுவை சிகிச்சை சாதனங்கள்,போதை மருந்து,அக்குபஞ்சர் போன்ற
ஊசி பயன்படும் எல்லாவகையிலும் இது பரவும்.
தடுப்பு முறைகள்:
குழந்தை பிறந்த உடனே 6 வாரங்களுக்கு பிறகும்,மூன்றரை மாதங்களுக்கு பிறகு மூன்றாவது ஊசியும் என்று 3 தடுப்பூசிகள் போட்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக
இருக்கும்.உலக சுகாதார நிறுவனம் 'பூஸ்டர் டோஸ் ' தேவை இல்லை என்று சொல்லி
விட்டது. வேண்டுமானால் முத்தடுப்பு ஊசியோடு இணைந்த தடுப்பூசியாக போட்டு
கொள்ளலாம்
தாய்க்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தால் பிறந்தவுடன் தடுப்பூசி போடவேண்டும்.
தாய்க்கு நோய்க்கிருமி இல்லாவிட்டால் ஒன்றரை மாதம் இரண்டரை மாதம் மூன்றரை
மாதங்களில் தடுப்பூசி போட்டால் போதுமானது.ஆனால் அத்தகைய்ய சோதனைகள் கருவுற்ற
காலத்தில் செய்யப்படாததால் குழந்தை பிறந்தவுடன் இந்த தடுப்பூசி எல்லா குழந்தைகளுக்கும் போட்டு விட வேண்டும்.
விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக தொண்டை அடைப்பான்,கக்குவான் இருமல்,ரண ஜன்னி,மஞ்சள் காமாலை - பி,ஹிப் என்னும் நுண்கிருமியால் ஏற்படும் மூளைகாய்ச்சல் நோய்
ஆகியவற்றையும் ஒரு சேரத்தடுக்கும் ஒரே தடுப்பூசியை மேலை நாடுகளில் இருப்பது போல
இந்தியாவிலும் போட்டுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
எனவே இந்நோய் வந்தால் தானே போய்விடும் என இல்லாமல்,நீரை காய்ச்சி குடிப்பதும்,
சூடான உணவை சாப்பிடுவதும் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக உரிய
தடுப்பு மருதை எடுத்துக்கொள்வது அவசியம்.