lavanya
12-02-2004, 10:14 PM
ஹெபடடைஸ் - பி
--------------------------------------------------------------
மனித குலத்தை தாக்கி வரும் நோய்களில் மிக மோசமானது என்று இதுநாள்வரை எய்ட்ஸ்
நோய்தான் குறிப்பிடப்பட்டுகொண்டிருந்தது.அந்த எய்ட்ஸ் நோயை விட கொடுமையான
நோய் என்று வல்லுனர்களால் குறிப்பிடுப்படுவது ஹெபடடைஸ் பி என்னும் மஞ்சள்காமாலை
நோய்தான்.. இது மஞ்சள் காமாலை நோயின் ஒரு வகைதான் என்று கூறுவதால் இந்த நோயை
மஞ்சள் காமாலை - பி என்றும் சொல்லலாம்.
ஹெபடடைஸ் என்ற ஆங்கில சொல்லுக்கு "ஈரலில் அழற்சி ஏற்படுதல்" என்று ஆங்கில அகர முதலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஹெபடடைஸ் பியால் இறப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் பேர் ஆகும்.உலகில் புற்றுநோய்க்கு அடுத்த
படியாக மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் ஹெபடடைஸ் - பியால் சுமார் ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர்.தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
ஆனால் அதற்கு சுமார் 2 லட்சம் வரை செலவாகும்.அதிலும் எல்லோரையும் குணப்படுத்த
முடியாது.சுமார் 20 முதல் 40 சதம்வரை மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்கிறார்கள்.
இதற்கான சிகிச்சை சுமார் 2 ஆண்டுகள் வரை நீடிக்கிறது.இதற்கு எய்ட்ஸ் போல திட்ட
வட்டமான மருந்து எதுவும் இல்லை.ஆனால் இந்த நோயை முன் கூட்டியே தடுக்க முடியும்.
விஞ்ஞான வளர்ச்சியால் இந்த நோயை கண்டுபிடிப்பது இப்போது எளிதாகி உள்ளது.ஆனால்
குணமாக்குவதுதான் கடினமாக உள்ளது.
ஹெபடடைஸ் எனப்படும் இந்த முக்கிய நோய் ஏ,பி,சி,டி,இ,எ·ப் என ஆறு வகைகள் உள்ளன.இவற்றுள் ஹெபபடைஸ் பி- தான் மிகவும் கடுமையான நோயாகும்.
ஹெபடைடஸ் ஏ - இதுவும் பாதிக்க கூடியதுதான் என்றாலும் இது மிகவும் கடுமையாக
மாறுவதில்லை.தற்போது இதற்கு தடுப்பு மருந்து உள்ளது.
ஹெபடடைஸ் பி - என்பது நீண்டகாலம் நீடிக்ககூடிய கடுமையான கல்லீரல் நோயை
உருவாக்க கூடியது.பெரும்பாலும் சிர்ரோஸிஸ் (கல்லீரல் இறுகிப்பழுதடைதல்) மற்றும் பிரைமரி ஹெபடோ- செல்லுலர்
கார்சினோமா (கல்லீரலீலேயே தோன்றும் புற்றுநோய்) போன்ற நோய்கள் ஏற்படும்.
ஹெபடடைஸ் சி - கடுமையான தொற்றுநோயாக தொடங்கி நீண்ட காலம் நீடிக்க கூடிய
நோயாக மாறுகிறது.
ஹெபடடைஸ் டி - இது ஹெபடடைஸ் பி இருக்கும்போது மட்டுமே ஏற்படுகிறது.இது ஹெபடடைஸ் பி யை மேலும் கடுமையாக்கி நிலமையை மோசமடைய செய்கிறது.
ஹெபடைடஸ் இ - இது பொதுவாக சிறிதளவே பாதிக்க கூடியது.இது நீண்ட கால நோயாக
நீடிப்பதில்லை.ஆனால் கர்ப்பிணிகளுக்கு இது ஆபத்தானது.மரணத்தை கூட ஏற்படுத்தி
விடும்.
ஹெபடடைஸ் எ·ப் - இந்த வகை அண்மையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது பற்றிய
ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஹெபடடைஸ் பி என்பது ஒரு டி.என்.ஏ வைரஸ் பெரும்பாலும் அது மனிதர்களை மட்டுமே
தாக்குகிறது.இதன் வைரஸ் இரண்டு பாகங்களை கொண்டுள்ளது.ஒன்று டி.என்.ஏ கொண்ட
உட்பகுதி.இரண்டாவது வெளியே உள்ள புரோட்டின் பூச்சு.
இந்த வகை நோய் பெரும்பாலும் ரத்தம் மூலமே தொற்றுகிறது.அது தவிர எச்சில்,வியர்வை,
கண்ணீர்,தாய்ப்பால்,சிறுநீர், உடலில் ஏற்படும் திரவங்கள் மூலமும் இந்நோய் தொற்றுகிறது.
பொதுவாக நான்கு வகைகளில் இந்நோய் தொற்றுகிறது.
1. வெர்ட்டிகல் ட்ரான்ஸ்மிஷன் எனப்படும் தாய்மூலம் குழந்தைக்கு பரவுதல்.பெரும்பாலும் இந்த நோய் தாய்க்கு இருப்பின் பிறக்கும் குழந்தையையும் இந்த நோய் தாக்கும்.
2. ஹரிசாண்டல் டிரான்ஸ்மிஷன் எனப்படும் குழந்தைகளுக்கு இடையிலும் பிற உறவினர்கள்
மூலமும் ஏற்படும் தொடர்புகளால் பரவ கூடியவை.நீர்,மலம் மூலம் ஏற்பட்டு வாய் மூலம்
பரவுதல்
3. பேரன்டரல் அல்லது பெர்குடேனியஸ் எனப்படும் ரத்தம் மூலம் தொற்றுதல்.எதிர்பாராமல்
ஊசி குத்துவதால் ஏற்படும் காயம்,பச்சை குத்துதல்,காது குத்துதல் போன்றவற்றில்
தொற்றுகள் உள்ள ஊசியை பயன்படுத்துவதால் தொற்ற கூடியது.
4. உடலுறவு மூலம் தொற்றக்கூடியவை.எதிர்பால் மட்டுமன்றி சுயபால் உறவு
கொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றும்.இதில் ஆண் மற்றும் ஆண் - பெண் மற்றும் பெண்
என்னும் சுயபால் உறவுகளிலேயே அதிகம் தொற்றுவதாக கண்டறிந்துள்ளார்கள்.
இந்த ஹெபடடைஸ் பி நோய் வெளியே தெரிய 90 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ·ப்ளூ காய்ச்சலையே ஒத்திருக்கின்றன.
முதன் முதலாக இதற்கான தடுப்பு மருந்து 1982 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் அல்லாத நிறமற்ற திரவமான பிளாஸ்மாவிலிருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டது.இது தயாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்து
கொள்வதோடு அதை பாதுகாத்து வைப்பதற்கும் கடினமாக இருந்தது.ஆனால் ஜெனடிக் எஞ்சினியரிங் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் உலகின் முன்னணி தடுப்பூசி மருந்து தயாரிப்பு
நிறுவனங்கள் பலவும்டி.என்.ஏ தொழில் நுட்பத்தில் மறு இணைப்பின் மூலம் காடி எனப்படும்
ஈஸ்ட்டிலிருந்து எடுக்கப்பட்ட தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து ஒரு ஊசிக்கு 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் 20 மைக்ரோ கிராம் என்ற அளவிலும் பிறந்த குழந்தை முதல் 10 வயது
குழந்தை வரை 10 மைக்ரோகிராம் என்ற அளவிலும் போடப்படுகிறது.இதன் தடுப்பூசி
காலத்தில் 3 தடுப்பூசிகள் போட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
--------------------------------------------------------------
மனித குலத்தை தாக்கி வரும் நோய்களில் மிக மோசமானது என்று இதுநாள்வரை எய்ட்ஸ்
நோய்தான் குறிப்பிடப்பட்டுகொண்டிருந்தது.அந்த எய்ட்ஸ் நோயை விட கொடுமையான
நோய் என்று வல்லுனர்களால் குறிப்பிடுப்படுவது ஹெபடடைஸ் பி என்னும் மஞ்சள்காமாலை
நோய்தான்.. இது மஞ்சள் காமாலை நோயின் ஒரு வகைதான் என்று கூறுவதால் இந்த நோயை
மஞ்சள் காமாலை - பி என்றும் சொல்லலாம்.
ஹெபடடைஸ் என்ற ஆங்கில சொல்லுக்கு "ஈரலில் அழற்சி ஏற்படுதல்" என்று ஆங்கில அகர முதலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஹெபடடைஸ் பியால் இறப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் பேர் ஆகும்.உலகில் புற்றுநோய்க்கு அடுத்த
படியாக மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் ஹெபடடைஸ் - பியால் சுமார் ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர்.தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
ஆனால் அதற்கு சுமார் 2 லட்சம் வரை செலவாகும்.அதிலும் எல்லோரையும் குணப்படுத்த
முடியாது.சுமார் 20 முதல் 40 சதம்வரை மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்கிறார்கள்.
இதற்கான சிகிச்சை சுமார் 2 ஆண்டுகள் வரை நீடிக்கிறது.இதற்கு எய்ட்ஸ் போல திட்ட
வட்டமான மருந்து எதுவும் இல்லை.ஆனால் இந்த நோயை முன் கூட்டியே தடுக்க முடியும்.
விஞ்ஞான வளர்ச்சியால் இந்த நோயை கண்டுபிடிப்பது இப்போது எளிதாகி உள்ளது.ஆனால்
குணமாக்குவதுதான் கடினமாக உள்ளது.
ஹெபடடைஸ் எனப்படும் இந்த முக்கிய நோய் ஏ,பி,சி,டி,இ,எ·ப் என ஆறு வகைகள் உள்ளன.இவற்றுள் ஹெபபடைஸ் பி- தான் மிகவும் கடுமையான நோயாகும்.
ஹெபடைடஸ் ஏ - இதுவும் பாதிக்க கூடியதுதான் என்றாலும் இது மிகவும் கடுமையாக
மாறுவதில்லை.தற்போது இதற்கு தடுப்பு மருந்து உள்ளது.
ஹெபடடைஸ் பி - என்பது நீண்டகாலம் நீடிக்ககூடிய கடுமையான கல்லீரல் நோயை
உருவாக்க கூடியது.பெரும்பாலும் சிர்ரோஸிஸ் (கல்லீரல் இறுகிப்பழுதடைதல்) மற்றும் பிரைமரி ஹெபடோ- செல்லுலர்
கார்சினோமா (கல்லீரலீலேயே தோன்றும் புற்றுநோய்) போன்ற நோய்கள் ஏற்படும்.
ஹெபடடைஸ் சி - கடுமையான தொற்றுநோயாக தொடங்கி நீண்ட காலம் நீடிக்க கூடிய
நோயாக மாறுகிறது.
ஹெபடடைஸ் டி - இது ஹெபடடைஸ் பி இருக்கும்போது மட்டுமே ஏற்படுகிறது.இது ஹெபடடைஸ் பி யை மேலும் கடுமையாக்கி நிலமையை மோசமடைய செய்கிறது.
ஹெபடைடஸ் இ - இது பொதுவாக சிறிதளவே பாதிக்க கூடியது.இது நீண்ட கால நோயாக
நீடிப்பதில்லை.ஆனால் கர்ப்பிணிகளுக்கு இது ஆபத்தானது.மரணத்தை கூட ஏற்படுத்தி
விடும்.
ஹெபடடைஸ் எ·ப் - இந்த வகை அண்மையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது பற்றிய
ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஹெபடடைஸ் பி என்பது ஒரு டி.என்.ஏ வைரஸ் பெரும்பாலும் அது மனிதர்களை மட்டுமே
தாக்குகிறது.இதன் வைரஸ் இரண்டு பாகங்களை கொண்டுள்ளது.ஒன்று டி.என்.ஏ கொண்ட
உட்பகுதி.இரண்டாவது வெளியே உள்ள புரோட்டின் பூச்சு.
இந்த வகை நோய் பெரும்பாலும் ரத்தம் மூலமே தொற்றுகிறது.அது தவிர எச்சில்,வியர்வை,
கண்ணீர்,தாய்ப்பால்,சிறுநீர், உடலில் ஏற்படும் திரவங்கள் மூலமும் இந்நோய் தொற்றுகிறது.
பொதுவாக நான்கு வகைகளில் இந்நோய் தொற்றுகிறது.
1. வெர்ட்டிகல் ட்ரான்ஸ்மிஷன் எனப்படும் தாய்மூலம் குழந்தைக்கு பரவுதல்.பெரும்பாலும் இந்த நோய் தாய்க்கு இருப்பின் பிறக்கும் குழந்தையையும் இந்த நோய் தாக்கும்.
2. ஹரிசாண்டல் டிரான்ஸ்மிஷன் எனப்படும் குழந்தைகளுக்கு இடையிலும் பிற உறவினர்கள்
மூலமும் ஏற்படும் தொடர்புகளால் பரவ கூடியவை.நீர்,மலம் மூலம் ஏற்பட்டு வாய் மூலம்
பரவுதல்
3. பேரன்டரல் அல்லது பெர்குடேனியஸ் எனப்படும் ரத்தம் மூலம் தொற்றுதல்.எதிர்பாராமல்
ஊசி குத்துவதால் ஏற்படும் காயம்,பச்சை குத்துதல்,காது குத்துதல் போன்றவற்றில்
தொற்றுகள் உள்ள ஊசியை பயன்படுத்துவதால் தொற்ற கூடியது.
4. உடலுறவு மூலம் தொற்றக்கூடியவை.எதிர்பால் மட்டுமன்றி சுயபால் உறவு
கொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றும்.இதில் ஆண் மற்றும் ஆண் - பெண் மற்றும் பெண்
என்னும் சுயபால் உறவுகளிலேயே அதிகம் தொற்றுவதாக கண்டறிந்துள்ளார்கள்.
இந்த ஹெபடடைஸ் பி நோய் வெளியே தெரிய 90 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ·ப்ளூ காய்ச்சலையே ஒத்திருக்கின்றன.
முதன் முதலாக இதற்கான தடுப்பு மருந்து 1982 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் அல்லாத நிறமற்ற திரவமான பிளாஸ்மாவிலிருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டது.இது தயாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்து
கொள்வதோடு அதை பாதுகாத்து வைப்பதற்கும் கடினமாக இருந்தது.ஆனால் ஜெனடிக் எஞ்சினியரிங் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் உலகின் முன்னணி தடுப்பூசி மருந்து தயாரிப்பு
நிறுவனங்கள் பலவும்டி.என்.ஏ தொழில் நுட்பத்தில் மறு இணைப்பின் மூலம் காடி எனப்படும்
ஈஸ்ட்டிலிருந்து எடுக்கப்பட்ட தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து ஒரு ஊசிக்கு 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் 20 மைக்ரோ கிராம் என்ற அளவிலும் பிறந்த குழந்தை முதல் 10 வயது
குழந்தை வரை 10 மைக்ரோகிராம் என்ற அளவிலும் போடப்படுகிறது.இதன் தடுப்பூசி
காலத்தில் 3 தடுப்பூசிகள் போட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.