PDA

View Full Version : ஹெபடடைஸ் - பி



lavanya
12-02-2004, 10:14 PM
ஹெபடடைஸ் - பி
--------------------------------------------------------------

மனித குலத்தை தாக்கி வரும் நோய்களில் மிக மோசமானது என்று இதுநாள்வரை எய்ட்ஸ்
நோய்தான் குறிப்பிடப்பட்டுகொண்டிருந்தது.அந்த எய்ட்ஸ் நோயை விட கொடுமையான
நோய் என்று வல்லுனர்களால் குறிப்பிடுப்படுவது ஹெபடடைஸ் பி என்னும் மஞ்சள்காமாலை
நோய்தான்.. இது மஞ்சள் காமாலை நோயின் ஒரு வகைதான் என்று கூறுவதால் இந்த நோயை
மஞ்சள் காமாலை - பி என்றும் சொல்லலாம்.

ஹெபடடைஸ் என்ற ஆங்கில சொல்லுக்கு "ஈரலில் அழற்சி ஏற்படுதல்" என்று ஆங்கில அகர முதலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஹெபடடைஸ் பியால் இறப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் பேர் ஆகும்.உலகில் புற்றுநோய்க்கு அடுத்த
படியாக மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் ஹெபடடைஸ் - பியால் சுமார் ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர்.தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
ஆனால் அதற்கு சுமார் 2 லட்சம் வரை செலவாகும்.அதிலும் எல்லோரையும் குணப்படுத்த
முடியாது.சுமார் 20 முதல் 40 சதம்வரை மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்கிறார்கள்.
இதற்கான சிகிச்சை சுமார் 2 ஆண்டுகள் வரை நீடிக்கிறது.இதற்கு எய்ட்ஸ் போல திட்ட
வட்டமான மருந்து எதுவும் இல்லை.ஆனால் இந்த நோயை முன் கூட்டியே தடுக்க முடியும்.
விஞ்ஞான வளர்ச்சியால் இந்த நோயை கண்டுபிடிப்பது இப்போது எளிதாகி உள்ளது.ஆனால்
குணமாக்குவதுதான் கடினமாக உள்ளது.

ஹெபடடைஸ் எனப்படும் இந்த முக்கிய நோய் ஏ,பி,சி,டி,இ,எ·ப் என ஆறு வகைகள் உள்ளன.இவற்றுள் ஹெபபடைஸ் பி- தான் மிகவும் கடுமையான நோயாகும்.

ஹெபடைடஸ் ஏ - இதுவும் பாதிக்க கூடியதுதான் என்றாலும் இது மிகவும் கடுமையாக
மாறுவதில்லை.தற்போது இதற்கு தடுப்பு மருந்து உள்ளது.

ஹெபடடைஸ் பி - என்பது நீண்டகாலம் நீடிக்ககூடிய கடுமையான கல்லீரல் நோயை
உருவாக்க கூடியது.பெரும்பாலும் சிர்ரோஸிஸ் (கல்லீரல் இறுகிப்பழுதடைதல்) மற்றும் பிரைமரி ஹெபடோ- செல்லுலர்
கார்சினோமா (கல்லீரலீலேயே தோன்றும் புற்றுநோய்) போன்ற நோய்கள் ஏற்படும்.

ஹெபடடைஸ் சி - கடுமையான தொற்றுநோயாக தொடங்கி நீண்ட காலம் நீடிக்க கூடிய
நோயாக மாறுகிறது.

ஹெபடடைஸ் டி - இது ஹெபடடைஸ் பி இருக்கும்போது மட்டுமே ஏற்படுகிறது.இது ஹெபடடைஸ் பி யை மேலும் கடுமையாக்கி நிலமையை மோசமடைய செய்கிறது.

ஹெபடைடஸ் இ - இது பொதுவாக சிறிதளவே பாதிக்க கூடியது.இது நீண்ட கால நோயாக
நீடிப்பதில்லை.ஆனால் கர்ப்பிணிகளுக்கு இது ஆபத்தானது.மரணத்தை கூட ஏற்படுத்தி
விடும்.

ஹெபடடைஸ் எ·ப் - இந்த வகை அண்மையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது பற்றிய
ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஹெபடடைஸ் பி என்பது ஒரு டி.என்.ஏ வைரஸ் பெரும்பாலும் அது மனிதர்களை மட்டுமே
தாக்குகிறது.இதன் வைரஸ் இரண்டு பாகங்களை கொண்டுள்ளது.ஒன்று டி.என்.ஏ கொண்ட
உட்பகுதி.இரண்டாவது வெளியே உள்ள புரோட்டின் பூச்சு.

இந்த வகை நோய் பெரும்பாலும் ரத்தம் மூலமே தொற்றுகிறது.அது தவிர எச்சில்,வியர்வை,
கண்ணீர்,தாய்ப்பால்,சிறுநீர், உடலில் ஏற்படும் திரவங்கள் மூலமும் இந்நோய் தொற்றுகிறது.

பொதுவாக நான்கு வகைகளில் இந்நோய் தொற்றுகிறது.

1. வெர்ட்டிகல் ட்ரான்ஸ்மிஷன் எனப்படும் தாய்மூலம் குழந்தைக்கு பரவுதல்.பெரும்பாலும் இந்த நோய் தாய்க்கு இருப்பின் பிறக்கும் குழந்தையையும் இந்த நோய் தாக்கும்.

2. ஹரிசாண்டல் டிரான்ஸ்மிஷன் எனப்படும் குழந்தைகளுக்கு இடையிலும் பிற உறவினர்கள்
மூலமும் ஏற்படும் தொடர்புகளால் பரவ கூடியவை.நீர்,மலம் மூலம் ஏற்பட்டு வாய் மூலம்
பரவுதல்

3. பேரன்டரல் அல்லது பெர்குடேனியஸ் எனப்படும் ரத்தம் மூலம் தொற்றுதல்.எதிர்பாராமல்
ஊசி குத்துவதால் ஏற்படும் காயம்,பச்சை குத்துதல்,காது குத்துதல் போன்றவற்றில்
தொற்றுகள் உள்ள ஊசியை பயன்படுத்துவதால் தொற்ற கூடியது.

4. உடலுறவு மூலம் தொற்றக்கூடியவை.எதிர்பால் மட்டுமன்றி சுயபால் உறவு
கொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றும்.இதில் ஆண் மற்றும் ஆண் - பெண் மற்றும் பெண்
என்னும் சுயபால் உறவுகளிலேயே அதிகம் தொற்றுவதாக கண்டறிந்துள்ளார்கள்.

இந்த ஹெபடடைஸ் பி நோய் வெளியே தெரிய 90 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ·ப்ளூ காய்ச்சலையே ஒத்திருக்கின்றன.

முதன் முதலாக இதற்கான தடுப்பு மருந்து 1982 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் அல்லாத நிறமற்ற திரவமான பிளாஸ்மாவிலிருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டது.இது தயாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்து
கொள்வதோடு அதை பாதுகாத்து வைப்பதற்கும் கடினமாக இருந்தது.ஆனால் ஜெனடிக் எஞ்சினியரிங் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் உலகின் முன்னணி தடுப்பூசி மருந்து தயாரிப்பு
நிறுவனங்கள் பலவும்டி.என்.ஏ தொழில் நுட்பத்தில் மறு இணைப்பின் மூலம் காடி எனப்படும்
ஈஸ்ட்டிலிருந்து எடுக்கப்பட்ட தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த தடுப்பு மருந்து ஒரு ஊசிக்கு 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் 20 மைக்ரோ கிராம் என்ற அளவிலும் பிறந்த குழந்தை முதல் 10 வயது
குழந்தை வரை 10 மைக்ரோகிராம் என்ற அளவிலும் போடப்படுகிறது.இதன் தடுப்பூசி
காலத்தில் 3 தடுப்பூசிகள் போட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

நிலா
12-02-2004, 10:31 PM
மீண்டும் ஒரு உன்னதப்பதிவு!பாராட்டுகள்+நன்றி லாவ்!



இந்த ஹெபடடைஸ் பி நோய் வெளியே தெரிய 90 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ·ப்ளூ காய்ச்சலையே ஒத்திருக்கின்றன.

·ப்ளு காய்ச்சலுக்கு என்ன அறிகுறிகள்?

சொல்லுங்களேன்!இதன் அறிகுறிகள் தெரிந்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்!

இளசு
12-02-2004, 10:40 PM
சின்ன தம்பி: என்னண்ணே விக்கித்து நிக்கிறீங்க?

பெரிய தம்பி : இல்ல, போன மாசந்தான் இதுக்காக பூஸ்டர் வேக்ஸீன் போட்டுக்கிட்டு நோய் எதிர்ப்பு டைடர் ஏறிடுச்சான்னு டெஸ்ட் பண்ணிக்கிட்டு, சுயநலமா நானிருக்க, லாவ் இங்கே பொறுப்பா, அழகா, விளக்கமா.....

சின்னதம்பி : எங்கண்ணே கெளம்பிட்டீங்க?

பெரிய தம்பி : உம்..லைப்ரரிக்கு... ஒரு கணினிக் கட்டுரை பதிச்சாத்தான் மனசு
ஆறும்..

சின்னதம்பி : பதிப்பீங்க சரி, படிக்கணுமில்ல நாங்க...

லாவ், என் வீட்டுக்கு வந்து நான் கவனிக்காத சிட்டுக்குருவிக்கூட்டைக்
காட்டி, அதனுடன் சிநேகம் கொண்ட நண்பனைப்போல்
உங்களை மதிப்போடு பார்க்கிறேன்..
வாழ்த்த வார்த்தையில்லை..

lavanya
12-02-2004, 10:46 PM
மீண்டும் ஒரு உன்னதப்பதிவு!பாராட்டுகள்+நன்றி லாவ்!

·ப்ளு காய்ச்சலுக்கு என்ன அறிகுறிகள்?
சொல்லுங்களேன்!இதன் அறிகுறிகள் தெரிந்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்!

இந்த கேள்விக்கு நம் மன்ற மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்..
நன்றி நிலா....

lavanya
12-02-2004, 10:47 PM
நன்றி இளசு அவர்களே.....நிலாவின் கேள்விக்கு பதில் அளிக்க
அன்புடன் வேண்டி கொள்கிறேன்.

thiruarul
12-02-2004, 11:03 PM
பின்வருவன வைரசுக் காய்ச்சலின் (Influenza/Flu) அறிகுறிகளாகலாம்.

1 நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் -- 104 F வரை செல்லும்
2 தலையிடி
3 தசைகளில் வலி மற்றும் தசைப்பிடிப்பு (muscle aches and stiffness)
4 தடிமன் அல்லது மூக்கிலிருந்து நீர் வடிதல்
5 இருமல்
6 உடல்உழைவு மற்றும் அசெளகரிய உணர்வு ( fatigue & malaise)
7 உணவில் நாட்டம் குறைதல் (loss of appetite)
8 தொண்டை நோவு (sore throat)

அன்புடன் திருவருள்

இளசு
12-02-2004, 11:04 PM
·ப்ளூ என்பது கடுமையான ஜலதோஷம் போல
திருவருள் தந்த பறவைக்காய்ச்சல் படித்தீர்களா?

கடும் உடல்/தலைவலி (படுக்கையை விட்டு எழுந்தால் அது சாதாக் காய்ச்சல்)
மூக்கடைப்பு, தொண்டை அழற்சி, இருமல், சிலருக்கு நிமோனியா
பலவித நோய்களுக்கும் பொது அறிகுறிகள் இவை.

பெரும்பாலும் சாதா கிருமிகளால் வருவனதான் இந்த காய்ச்சல் எல்லாம்.

முதல் ஓரிருவாரங்களில் பாராசிட்டாமால் அல்லது பாட்டிவைத்தியம் போதும்
90 சதவீத சந்தர்ப்பங்களில்..
நல்லவர் போலவே வில்லன்களும் தோற்றமளிக்கும் உலகில்
பொல்லாத சில நோய்களும் இதே போர்வையில் வருவதுதான் வம்பே..

எல்லாக் காய்ச்சலுக்கும் எல்லா டெஸ்ட்டும் பண்ணுவது வீண் செலவு.
தலைவலி அதிகரிப்பது, வலிப்பு வருவது, மூச்சுத்திணறல், மஞ்சள் காமாலை,
மயக்கம், உணர்விழத்தல் போன்ற கூடுதல் அபாயக் குறிகள் சேர்ந்தால்
அவசர மருத்துவ ஆலோசனை அவசியம்.

நிலா
12-02-2004, 11:08 PM
மிக்க நன்றி நண்பர் திருவருள் அவர்களே!
நன்றி தலை!

lavanya
12-02-2004, 11:11 PM
....நம் மன்றத்தில் மருத்துவர்கள் இருப்பதால் உடனடியாக
கேள்விக்கு விடை கிடைத்தது...நன்றி திருவருள் மற்றும் இளசு அவர்களே.

இளசு
12-02-2004, 11:14 PM
அட ஆமாம் , பதிச்ச பின் பார்த்தால் நண்பர் திருவருள்
அழகா பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார்.

என் நன்றி அவருக்கு..

puppy
12-02-2004, 11:14 PM
இங்கே போய் ஒருவாட்டி பார்த்துக்குங்க
http://www.nfid.org/library/influenza/

sara
12-02-2004, 11:17 PM
இப்பதிவை தந்திருக்கும் நட்புக்களுக்கு பாராட்டுக்கள்.

பப்பி, அதானே பார்த்தேன்.. இவ்வளவு பரிச்சயமான விஷயத்துக்கு உங்களுடைய சுட்டி இல்லாமல் போலாமா..!

இளசு
12-02-2004, 11:17 PM
ஆஹா பப்பி அவர்கள்.. சுட்டி தந்தார். நன்றி பப்பி அவர்களே.

(சந்தேகம் தீர்ந்ததா நிலா?)

நிலா
12-02-2004, 11:27 PM
(சந்தேகம் தீர்ந்ததா நிலா?)

தெளிவாயிருச்சு தலை!மிக்க நன்றி!
(ஏற்கனவே ஒருவாட்டி நன்றி சொல்லியாச்சுல்ல..:D அப்புறமென்ன?)

இளசு
12-02-2004, 11:29 PM
இது பப்பி சுட்டி ஒட்டிய கேள்வி!!!!!

நிலா
12-02-2004, 11:31 PM
இது பப்பி சுட்டி ஒட்டிய கேள்வி!!!!!

சுட்டியை இன்னும் படிக்கலை தலை!படிக்கறேன்!
நன்றி!

puppy
12-02-2004, 11:37 PM
லாவ் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்....சரியான கேள்வி கேட்ட நிலாவுக்கு பாராட்டுக்கள்...

ஹெபடடிஸ் -பி தடுப்பு ஊசி இப்போ பிறக்கிற எல்லா குழந்தைகளுக்கு போட்டுடாறாங்க இல்லையா.....

இளசு
12-02-2004, 11:57 PM
நம் நாட்டில் பணம் ஒரு பிரச்னை பப்பி அவர்களே.

தன்னார்வக்குழுக்கள் (வைகோ போல் சில அரசியல்வாதிகளும் உண்டு) இலவசம்/ குறைந்த விலைக்கு ஏற்பாடு செய்கிறார்கள்..

முற்றிலும் இலவசமாய் வழங்க இந்தியா இன்னும் தயாராக இல்லை.

இது எல்லக்குழந்தைகளுக்கும் இலவசமாய் தைவானில் வழங்கப்பட்டபின்
ஈரல் புற்று ஏறக்குறைய காணாமல் போய்விட்டது.

karikaalan
13-02-2004, 07:18 AM
லாவண்யாஜி, அருமையான விளக்கம். நன்றிகள்.

இதற்கான தடுப்பு மருந்தை GlaxoSmithKline Pharmaceuticals தயார் செய்து மிக அதிகவிலையில் விற்கத் துவங்கினர். ஹைதராபாதைச் சேர்ந்த ஷாந்தா பையோடெக், தன்னுடைய ஆராய்ச்சியினால் ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விற்கத் தொடங்கியவுடன், க்ளாக்ஸோவும் விலை குறைப்பு செய்தது. கூடவே ஒரு வதந்தியையும் கிளப்பிவிட்டது. அதாவது ஷாந்தா பையோடெக் மருந்துக்கு உத்தரவாதம் இல்லை என்று. எல்லாம் கழுத்தறுக்கும் போட்டிதான்.

===கரிகாலன்

இளசு
13-02-2004, 11:00 PM
கூடுதல் தகவலுக்கு நன்றி அண்ணலே.

ஸ்பிக் ·பார்மா மூலம் விநியோகம் ஆகும் கீழாநெல்லியில் தயாரிக்கப்பட்ட
மருந்து ஏனோ பெரிய அளவில் ஆராய்ச்சிகளால் நிரூபணம் செய்யப்படாமல்
இன்னும் சவலையாகவே உள்ளது.

poo
17-02-2004, 04:39 PM
உபயோகமான கட்டுரை..

எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கும் உங்கள் நல்ல மனங்கள் வாழ்க..

அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும்!!

karikaalan
18-02-2004, 08:30 AM
கூடுதல் தகவலுக்கு நன்றி அண்ணலே
ஸ்பிக் ·பார்மா மூலம் விநியோகம் ஆகும் கீழாநெல்லியில் தயாரிக்கப்பட்ட
மருந்து ஏனோ பெரிய அளவில் ஆராய்ச்சிகளால் நிரூபணம் செய்யப்படாமல்
இன்னும் சவலையாகவே உள்ளது.

இளவல்ஜி,

இதற்கான Process Knowhow, அவர்கள் CSIR (Council of Scientific and Industrial Research) லாபரடரி ஒன்றிலிருந்து பெற்றார்கள் எனக்கேள்வி.

கம்பெனி தள்ளாடும் நிலையில் இருந்ததால் -- இப்போது ஒன்றும் ஓஹோன்னு இல்லை -- இதனை இவர்கள் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்ய இயலதவர்கள் ஆனார்கள். வேறு யாரிடமாவது விற்றிருக்கலாமே, அதையும் செய்யவில்லை.

===கரிகாலன்

lavanya
18-02-2004, 10:51 PM
நன்றி அண்ணலே....நல்ல தகவல்கள்...

kavitha
29-05-2004, 09:37 AM
இதன் தடுப்பூசி
காலத்தில் 3 தடுப்பூசிகள் போட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
_________________
- லாவண்யா

நானும் ஏற்கனவே டாக்டர் கொடுத்த முன்னெச்செரிக்கையின் பெயரில் போட்டு விட்டேன் லாவ்! ஆனால் எப்படி வருகிறது..இதன் வகைகள் என்ன என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி!

பாரதி
03-05-2008, 10:42 AM
மஞ்சல் காமாலை குறித்த விபரங்களைத் தெளிவாக்கிய இந்தத்திரியை ஒருங்குறியாக்குவதன் மூலம், இந்நோய் குறித்து மன்ற உறவுகளின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

நல்லதொரு திரியைத் தந்த லாவண்யாவிற்கு மிக்க நன்றி.

அனுராகவன்
07-05-2008, 12:14 AM
மஞ்சகாமாலை பற்றி நன்கு அறிந்த முடிகிறது..
நல்லதொரு செய்திக்கு லாவணியாவிற்கு என் நன்றி..
மிக தெளிவான விளக்கம் ..
எல்லொருக்கும் பயன்படும் என் வாழ்த்துக்கள்!