PDA

View Full Version : அது ஒரு மழைக்காலம்..



gans5001
29-08-2017, 01:49 PM
உனக்கு நினைவிருக்கிறதா?
அன்றொரு நாள் விருந்தினனாய்
உங்கள் வீட்டில் நான்...

மெல்லிய மழையில் நனைந்து
நான் இரவெல்லாம் ஜலதோசித்துக் கொண்டிருக்க
இருளில் யாருமறியாமல்
நீ இதமாய் தடவிய விக்ஸ்..

இப்பொதெல்லாம்
மழையும் ஜலதோசமும் மட்டுமே
மிஞ்சியிருக்கின்றன...
உனது விரல்கள்
வெகுதூரம் சென்று விட்டதால்!

ravisekar
12-11-2017, 01:21 AM
மருதாணி கழுவினாலும் வண்ணம் மிச்சமாய்... பாராட்டுக்கள்

murali12
12-11-2017, 10:57 AM
மருதாணி கழுவினாலும் வண்ணம் மிச்சமாய்.....

கவிதை அழகு. கவிதைக்கு ஒருவரியில் பின்னூட்டம் அழகு. அழகு அழகு என பாட்ஷா படத்தில் வரும் பாடல் நினைவிற்கு வருகிறது . .... " நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு ! அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு" ! ...... வாழ்த்துக்கள்

செல்வா
23-11-2017, 05:08 AM
அழகான கவிதை ... வாழ்த்துக்கள்..


மருதாணி கழுவினாலும் வண்ணம் மிச்சமாய்... பாராட்டுக்கள்

நச்.