PDA

View Full Version : உனை நீங்காமல்



gokul anand
02-07-2017, 02:20 AM
காதலி:

பூங்காற்றோடு நான் பேசும் மொழிகளெல்லாம்
உன் காதோடு சொல்லாத காதல் சொல்லும்!
உன் மேகங்கள் மௌனம் கலைத்திடுமா? ஒரு
மழை வந்து என்னை நனைத்திடுமா? இனி
என் நெஞ்சம் என்னை நினைத்திடுமா? வரம்
கிடைத்தாலும் நீளும் தவம் போலே- உனை
நீங்காமல் வாழும் என் காதல்! முழு
நிலவாகும் பிறை நான் - உன்னாலே!

காதலன்:

என் மனதோடு நீ வந்தாய் - ஒரு மாற்றம்!
இனி இதயத்தில் உன்னாலே எடையேற்றம்!
என் உள்ளத்தில் உன் காதல் வெள்ளோட்டம்!
இனி என்னாகும் என் பாடு திண்டாட்டம்!

காதலி:

இதயத்தின் எடையேற்றம் தேகத்தையும் பாதிக்குதே!
கூந்தலில் சூடிய பூ பாரமாகி சோதிக்குதே!
மலர்களும் உனதழகில் மயங்கியதோ என்றெண்ணி
பூவை எந்தன் கூந்தலிலே பூவை நானும் சூடவில்லை!
இருள் வந்தாலே நீங்கும் நிழல் போலே
என் பின்னோடு நீயும் வருகின்றாய்!
ஒரு துணையாக இணைந்தே வருவாயா?
துயரெல்லாமே உன்னால் மறக்கிறதே!
உயிர் பூவில் இன்னும் தேன் சுரக்கிறதே!
பூந்தேகத்தின் காவல்! - உன் காதல்!

காதலன்:

அடி உன் கோயில் வாசலிலே
தவம் கிடந்தேன்!
என் உயிர் கொண்ட ஓசையிலே
எனை மறந்தேன்!
அது உன் பேரை உடல் முழுதும்
எதிரொலிக்கும்!
என் உடலெங்கும் நோகாமல்
உயிர் வலிக்கும்!

காதலி:

பிரிவின் துயரமெல்லாம்
மாலைகளில் அதிகரிக்கும்!
விடியலின் விளிம்பினிலே
உன் முகமே எனை எழுப்பும்!
இரு மனம் இணைந்து விட்டால்
இனி எவரால் பிரிந்து விடும்?
திருமணம் முடிந்து விட்டால்
தனிமையது மறைந்து விடும்!