PDA

View Full Version : கண்ணால் பேசி வந்தாள்



gokul anand
01-07-2017, 11:46 PM
ஏதோ ஒரு மின்னல்
பெண்ணாய் என்னை தொடுமே!
கண்ணால் பேசி வந்தாள்!
கண்ணை பறித்துச் சென்றாள்!

சாவின் விளிம்பில் கடைசி மூச்சா நீ!
பாஷை மறந்து போனதே!
வாசம் தரும் பூக்கள் எல்லாமே -உன்
கேசம் தொட தவம் செய்யுதே!
ஊமை காணும் கனா போலவே
எந்தன் காதல் கானல் ஆகுமோ?
கூந்தல் கொண்ட பூவே!
நீதான் காதல் தூது!

ஒருதலைக் காதல் கொண்டேனே! நான்
இருதலைக் கொள்ளியானேன்!
விடுதலை விரும்பாத நெஞ்சம்-உன்
விரல் தொட மோட்சம் கொள்ளும்!
ஏழாம் அறிவாய் காதல் வந்தது!
ஐந்து புலனும் எங்கே போனது?
ஒளியைத் தேடும் விழிகள்
என்றும் உந்தன் வழியில்!

இதயத்தை களவாடிச் சென்றாய்! என்
இழப்பினை ஈடு செய்வாய்!
இயல்பாக நான் இன்று இல்லை!உன்
இமைத் துடிப்பில் வாழ்கிறேன்!
உன்னால் தானே காதல் அறிந்தேன்!
என்னை நானே ஏனோ மறந்தேன்!
காதல் சொல்லும் வரைக்கும்
நீரும் என்னை தகிக்கும்!

dellas
20-07-2017, 11:29 AM
காதல் சொல்லும் வரைக்கும்
நீரும் என்னை தகிக்கும்!

நன்று..