PDA

View Full Version : புரியாத புதிர்...????



manivannan samikkannu
10-03-2017, 07:43 AM
நிலையில்லாத வாழ்க்கையில் நிலையென்று
எண்ணும் ஆசைகள் .....
மனிதனை மதம்கொள்ள செய்யுது இயற்க்கைக்கு
எதிரான ஏவல்களை செய்கிறான் .......!!!!

கடமை கண்ணீயம் கட்டுபாடு கடவுச்சொல்லாக மாறி
காலப்போக்கில் மறைகிறது .........!!!!!

எதிர்மறை எண்ணங்கள் ஏனோ விதையில்லா
கருவேல மரமாய் வேறூன்றி இதயத்தின்
இரம்வரையில் உறிகிறது உயிரைமட்டும் விட்டு.....!!!!!

எதற்கு படைக்கப்பட்டேனென்று எழும் வினாக்கு...
விடை தெரியாமலேயே விதிவந்து கொண்டுசென்றது ....!!!!
பாவம் மனிதனாய்ய் பிறந்து மனிதமின்றி
மிருகமாய் முடிகிறது என் வாழ்க்கை ......!!!!!

எதையோ சொல்லவந்தது எதையோ சொல்லும்
என்கவிதை என்று நன் புலம்பும் என்
புலம்பல்களும் புரியாத புதிரே......!!!!?????????