PDA

View Full Version : ஈரம்



முரளி
29-10-2015, 09:55 AM
தகவல் வந்தது தங்கள் தனயன்
தீரன் வீரன் அசகாய சூரன்
தண்ணீரில் தவித்தவனை அவன்
தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்

மறுநாள் மீண்டும் வந்த தகவல்
மீட்டவன் உதவி வியர்த்தமே
மீண்டவன் இன்று மாண்டான்
மனநோய் ! மாட்டியே தொங்கினான்

அரண்டான் என் மகன் ! ஆகாது ஆகாதே
அவனாகவா தொங்கினான் ? பொய்தானே !
அன்பாய் உலர்த்தினேனே ஈரம் காய !
அவனை தூக்கில் மாட்டியதே நான்தானே !


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSo9kdzbROs-932FoVZTYQcMMGP7DX3DcHUTTYZX-Z6_9s967MoUA

ravisekar
30-10-2015, 01:20 AM
அடடா.. துணிந்து காப்பாற்றி, பின் ஈரம் காய துணிபோல் 'தொங்க,விட்டானா? சித்தம் கலங்கியவர் அபரித/ அபத்த செயல்வீச்சை நச்சென்று சொல்லும் கவிதை, முரளிக்குப் பாராட்டுக்கள்.

முரளி
30-10-2015, 04:02 AM
நன்றி ரவி சேகர் ! :)