PDA

View Full Version : சுமை



M.Jagadeesan
05-04-2015, 06:32 AM
குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது !


கொடையும் ஒரு சுமைதான்
யாசகன் இல்லாத போது !


படையும் ஒரு சுமைதான்
பகைவன் இல்லாத போது !


விடையும் ஒரு சுமைதான்
வினாக்கள் இல்லாத போது !

ஓவியன்
22-04-2015, 02:33 PM
பிறவிப் பயனை அடையாது போனால் எல்லாமே சுமைதான் என்று உணர்த்திய கவி அருமை!

வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களே!

பென்ஸ்
22-04-2015, 05:43 PM
ஜகதீசன்..

நல்ல கவிதை...

புத்திசாலி...
தேவையில்லாத ஒன்று
சுமை என அறிந்தவான்..

பயந்தவன்...
சுமையானலும்
இழுத்து கொண்டு நடப்பான்...

ஆதவா
23-04-2015, 10:54 AM
நல்ல கவிதைங்க ஜகதீசன்...




ஜகதீசன்..

நல்ல கவிதை...

புத்திசாலி...
தேவையில்லாத ஒன்று
சுமை என அறிந்தவான்..

பயந்தவன்...
சுமையானலும்
இழுத்து கொண்டு நடப்பான்...

வாங்க பென்ஸ் அண்ணா, நலமா?
இப்படியெல்லாம் விமர்சனக் கருத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது