PDA

View Full Version : ஏன் தாமதம் ?



முரளி
24-03-2015, 06:38 AM
நாளும் ஒரு காரணம் நவிலும் சகியே
நீளும் உன் பட்டியல் தேடி தேடியே
நேரம் கழித்து இன்றேன் வந்தாய் சொல்

நாடியே கேட்டதனால் நன்குரைப்பேன் நானே
ஓடியே வந்தேனா மூச்சிறைக்க படி ஏறி
தேடியேக் காரணம் காண மறந்தேன் சகியே !

M.Jagadeesan
05-04-2015, 05:32 AM
" நேரங்கழித்து ஏன்வந்தாய் ? " எனக்கேட்கும் காதலனே !
...நேரமுடன் வருவதற்கு ஈதென்ன அலுவலகமா ?
ஊரடங்கும் வரையினிலே காத்திருக்க வேண்டாமோ ?
...உற்றாரும் உறவினரும் தூங்கும்வரை பார்த்திருந்து
வீரமுடன் சுவரேறிக் குதித்தங்கே தெருவோரம்
...விளக்கொளியில் காணாது சேலையிலே முகம்புதைத்து
பாரமுள்ள மனதுடனே திருடனைப்போல் வருகின்றேன் !
...பாரினிலே காதலென்பது கொடுமையிலும் கொடுமையடா !

ஆதவா
21-04-2015, 07:49 AM
காரணமே இல்லாமல் ஒரு காரணமா???
அதுவும் நன்றுதான்..
கொஞ்சம் நவீன நடையிலும் முயற்சித்துப் பாருங்கள்.
தோழிகளின் உரையாடல் அருமை!!

ஓவியன்
22-04-2015, 02:40 AM
காதலில், ஊடலை கூட்டி
காதலைப் பெருக்கும் காரணம் பற்றிய உங்கள் கவிதை அருமை முரளி - வாழ்த்துகள்!