View Full Version : கவிமரம்
விஜயகுமார் வேல்முருகன்
18-03-2015, 07:47 PM
கவிமரத்தில்
கவிஞர்கள்
கிளைகளாய்
இலைகளாய் படர்ந்து
பாக்களெனும்
பூக்கள் படைத்து
கவிச்சுவை கனிகளாய்
காய்த்து உதிர்ந்தது
ஆணிவேராம் கவியார்வலர்களுக்கு..
விஜயகுமார் வேல்முருகன்..
ஓவியன்
22-04-2015, 04:17 AM
குறுங் கவி அழகு வேல்முருகன்..!!
உங்கள் கவிமரம், மன்றில் ஆழமாய் வேரூன்ற என் வாழ்த்துகளும்..!!
விஜயகுமார் வேல்முருகன்
27-04-2015, 07:18 PM
மிகவும் நன்றி அய்யா
தங்களைப் போன்ற
தமிழ்சான்றோர்களின்
துணையால் எனைப்போன்ற
எளியவர்களுக்கும் கவியெழுதும்
திறன் மென்மேலும் பெருகும் என்பதில்
எள்ளளவும் ஐயம் இல்லை..
நன்றிகளுடன்
விஜயகுமார் வேல்முருகன்
சின்ன திருத்தம்...
காய்த்தும் உதிராத மரம்
ஆணிவேராக மன்றம் இருந்தால் நலம்...
இன்னும் நிறைய எழுதுங்கள்!!
அமரன்
28-04-2015, 06:32 AM
நமக்கு இப்பொதைய தேவை மரங்கள்தாம்.
தோடர்ந்து நாட்டுங்க.
jaffy
29-04-2015, 06:20 AM
கவிமரம் நட்ட
கவிமகனே
தொடர்க உம் படைப்புக்களை
வாழ்த்துக்கள்