PDA

View Full Version : கவிமரம்



விஜயகுமார் வேல்முருகன்
18-03-2015, 07:47 PM
கவிமரத்தில்
கவிஞர்கள்
கிளைகளாய்
இலைகளாய் படர்ந்து
பாக்களெனும்
பூக்கள் படைத்து
கவிச்சுவை கனிகளாய்
காய்த்து உதிர்ந்தது
ஆணிவேராம் கவியார்வலர்களுக்கு..


விஜயகுமார் வேல்முருகன்..

ஓவியன்
22-04-2015, 04:17 AM
குறுங் கவி அழகு வேல்முருகன்..!!

உங்கள் கவிமரம், மன்றில் ஆழமாய் வேரூன்ற என் வாழ்த்துகளும்..!!

விஜயகுமார் வேல்முருகன்
27-04-2015, 07:18 PM
மிகவும் நன்றி அய்யா
தங்களைப் போன்ற
தமிழ்சான்றோர்களின்
துணையால் எனைப்போன்ற
எளியவர்களுக்கும் கவியெழுதும்
திறன் மென்மேலும் பெருகும் என்பதில்
எள்ளளவும் ஐயம் இல்லை..
நன்றிகளுடன்
விஜயகுமார் வேல்முருகன்

ஆதவா
28-04-2015, 05:26 AM
சின்ன திருத்தம்...
காய்த்தும் உதிராத மரம்

ஆணிவேராக மன்றம் இருந்தால் நலம்...

இன்னும் நிறைய எழுதுங்கள்!!

அமரன்
28-04-2015, 06:32 AM
நமக்கு இப்பொதைய தேவை மரங்கள்தாம்.

தோடர்ந்து நாட்டுங்க.

jaffy
29-04-2015, 06:20 AM
கவிமரம் நட்ட
கவிமகனே
தொடர்க உம் படைப்புக்களை

வாழ்த்துக்கள்