PDA

View Full Version : நதிநேசன் - தென்பாண்டி தூறல்- கடைசி தலைமுறை



nathinesan
26-11-2014, 11:28 AM
பனித்துளி போர்த்திய பகல் கண்ட கர்வமும்
பட்டன் செல்போன் பார்த்த ஆர்வமும்
ஒனிடா மண்டையன் விளம்பர உருவமும்
ஒளீயும் ஒலியும் பார்க்க காத்த பருவமும்

கொண்ட அந்த வெள்ளை நாட்களை
கண்ட கடைசி தலைமுறை நாம் தான்…

மஞ்சள் பூசிய மங்கலப் பெண்களை
மகிழ்ந்து நோக்கி களித்த காலமும்
கொஞ்சம் பேசி, நெஞ்சில் குளிர் தென்றல் வீசி
திகழ்ந்த கன்னியர் போட்ட காலை கோலமும்….

கொண்ட அந்த வெள்ளை நாட்களை
கண்ட கடைசி தலைமுறை நாம் தான் …..

நாள்காட்டி அட்டையில் தேர்வெழுதிய நேரமும்
தாள்மறைத்து, மயிலிறகை மனம் வளர்த்த ஈரமும்
கட்டிப் போட்ட கிளியாய் கணினியில் அடையாது
வெட்டிய நுங்கினால் வண்டியோட்டிய வீரமும் !

கொண்ட அந்த வெள்ளை நாட்களை
கண்ட கடைசி தலைமுறை நாம் தான் …..

பந்தியில் பரிமாறி பின்பு உண்ட பாந்தமும்
தந்தியில் மரணமும், தந்திக்கே மரணமும்,
அந்தியில் அரை விளக்கில் அறிவியல் படித்ததும்
தொந்தி குறைய தெப்ப குளத்தில் நீச்சலும்

கொண்ட அந்த வெள்ளை நாட்களை
கண்ட கடைசி தலைமுறை நாம் தான் …..

காதலை கனிவிக்க கடிதம் தந்த நாட்களும்
கடவுளாய் தபால்காரர் வரவு காத்த காலமும்
காதலி கண்பார்வைக்கு கட்டுரை எழுதிய ஆட்களும்
அட அவள் நோக்கிய பின் மடைதிறக்கும் கவிதையும்….

கொண்ட அந்த வெள்ளை நாட்களை
கண்ட கடைசி தலைமுறை நாம் தான் …..


முறைத்து பார்க்க பல முறை பெண்கள் இருந்ததும்
அறையில் அங்கங்கு சில தமிழ் புத்தகங்கள் தெரிந்ததும்-
தாய் தகப்பன் கால் விழுந்து வணங்கிய பண்டிகைகளும்
'போய் சேர்ந்து கடிதம் போடு' என அவர் சொன்ன உரைகளும்….

கொண்ட அந்த வெள்ளை நாட்களை
கண்ட கடைசி தலைமுறை நாம் தான் …..

..நதிநேசன்
( whatsup ஊடகத்தில் கண்ட செய்தியால் உருவானது )

ravisekar
16-08-2015, 03:38 AM
பனங்காய் வண்டி, கோலம், மஞ்சள் முகங்கள்..அடடா. நினைத்தாலே இனிக்கும்.

வாட்ஸ் அப்பில் நானுந்தான் படித்தேன்.. ஆனால் நீங்கள் சொன்ன விதம் சேதியை அழகு கவிதை ஆக்கியதே.

நதிநேசனுக்கு பாராட்டுக்கள்