PDA

View Full Version : புரிந்து கொள்வாயா..?



அனுராகவன்
16-08-2014, 06:26 AM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQTh0CulDwGZtbjUEeGc4ea5cDIzKk_ozL4EKtyQa5DbP7dVMNo

அன்பே….
நிலாக் கால இரவொன்றில்
நீயும் நானும்…
உன் விழிகள் காட்டும்
அன்பில் நான்
வியந்து போகிறேன்….
-
உன் செவ்விதழின்
அசைவில் நான்
வேதம் படிக்கிறேன்…
உன் அருகாமையின்
விளைவாய் நான்
அறிஞனாகிறேன்…
-
உன் அணைப்பின்
சுகத்தில் நான்
கவிஞனாகிறேன்…
உன் தீண்டலின்
தயவால் நான்
தங்கம் ஆகிறேன்….
-
நீ என்னை நெருங்குகிற பொழுதுகளில்
நொறுங்கிப் போகிறது
என் வார்த்தைகள்…..
அறுந்து போன
முத்து மாலையின்
முத்துக்களைப் போல,
தேடுகிறேன், வார்த்தைகளை….
-
தொலைத்துவிட்ட தவிப்பில் நான்…
உன் புன்னகையால் என்னைத்
தொலைத்துக் கொண்டிருக்கும் நீ…..
வார்த்தைகள் வந்தும்
வரிசைப்படுத்தத் தெரியாதவனாய்
நான்….
-
ஊமையின் கையில்
அகப்பட்டுக்கொண்ட பாடலாய்
என் வார்த்தைகள்…..
பேச வார்த்தைகளிருந்தும்
பேச முடியாதவனாய்
நான்……
-
மனித வார்த்தைகளை விட
உணர்வுகளுக்கு
சக்தி அதிகமாம்……
கருவிலிருக்கும் போது
யாரோ ஒரு
குரு சொல்லக் கேட்டது……
-
சரி……….
என் உணர்வுகளால்
உன்னை அழைக்கிறேன்….
“அம்மா” என்று…..
புரிந்து கொள்வாயா, நீ…….?!
-===================

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 12:06 PM
கவிதை அருமை ..மேம்படட்டும் இன்னும் ...வாழ்த்துகள் அச்சலா...