PDA

View Full Version : நான் கர்ப்பத்தில் கவியானேன் !



M.Jagadeesan
10-08-2014, 08:12 AM
அன்னை கர்ப்பத்தில் உருவான நாள்முதலாய்
...ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும்
என்னை அறியாமல் என்காதில் விழுந்ததுவே
...எதுகையும் மோனையும் என்னைக் கவர்ந்ததுவே
முன்னை நான்செய்த தவத்தின் பயனாக
...முத்தமிழும் கேட்டேனே தாய்வயிற்றில் இருக்கையிலே
பின்னை பிறந்தேனே புலவனாய் இம்மண்ணில்
...தாய்க்கு மட்டுமல்ல தமிழுக்கும் மகனாக !
...

Sabeekshana
10-08-2014, 04:38 PM
தங்கள் கவித்திறத்துக்கு பின்னால் உள்ள ரகசியத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

அனுராகவன்
11-08-2014, 02:43 PM
அழகிய கவிதை..பாராட்டுக்கள்