View Full Version : தமிழில் பங்கு வர்த்தகம்
leomohan
09-08-2014, 04:41 PM
வணக்கம் நண்பர்களே. தமிழில் பங்கு வர்த்தகம் பயில பல பேருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் மிகவும் குறைந்த இணைய தளங்களே உள்ளன. முன்பே இந்த மன்றத்தில் பல மூத்த உறுப்பினர்கள் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்கள். இருப்பினும் மீண்டும் ஒரு முயற்சி.
புத்தகங்களும் இந்த தலைப்பில் அதிகம் வெளி வரவில்லை.
பிரபல தமிழ் நாளிதழ்களும், பத்திரிக்கைகளும் தமிழ் வணிகத்திற்கு அதிக பக்கங்கள் ஒதுக்குவதில்லை.
இதனால் நாம் பெரும்பாலும் பங்கு தரகர்களையே நம்பியிருந்தோம். இப்போது இணையம் மூலம் நாமே நேரிடியாக பங்கு சந்தையில் இறங்கும் வசதிகள் வந்துள்ளன. அதனால் இந்த துறையில் நாமே இறங்கி கூடுதல் வருமானம் செய்யும் ஆர்வமும் வரக்கூடும்.
இந்த வலைப்பூவில் நான் அறிந்த கற்றுவரும் சில தகவல்களை தமிழ் வாசிக்கும் நல்லுகத்திற்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். சுட்டிக் காட்டவும்.
முதலில் அனைத்து பங்கு வர்த்தக தளங்களைப் போல சில Disclaimer இங்கு தருகிறேன்.
இங்கு இடப்படும் கருத்துகள் தகவல்கள் உங்களை பங்கு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே.
இது முற்றிலும் இலவசமான திரி
இதை நடத்த எனக்கு எந்த நிறவனமும் எந்த விதமான ஊக்கத் தொகையும் தரவில்லை
இதில் குறிபிடப்பட்ட பங்குகளை நீங்கள் வாங்கினாலோ விற்றாலோ அது உங்களுடைய தனிப்பட்ட முடிவு. அதனால் ஏற்படும் லாப நட்டங்களுக்கு என்னை பொறுப்பாக்க இயலாது.
இந்த அடிப்படை தகவல்களை வைத்து நீங்கள் பங்கு வர்த்தகத்தில் பெரிய வல்லுனராக ஆக இயலாது. அவ்வாறு யாராவது வல்லுனர் என்று கூறிக் கொண்டால் அதை நீங்கள் ஏற்க வேண்டாம்.
மேற்படி தகவல்களை படித்துவிட்டு பங்கா வேண்டவே வேண்டாம் என்று ஓடிவிடாதீர்கள்.
மேலும் பேசலாம்……
leomohan
09-08-2014, 04:43 PM
பங்கு வர்த்தகம் - முன்னுரை
நண்பர்களே Whatsapp, Twitter, Facebook போன்ற பல சமூக பிணைய முறைகள் பிரபலமாகி இருக்கும் இந்த காலத்தில் அனைவரும் பல நல்ல அறிவுரைகளை தினமும் பகிர்ந்துக் கொள்கிறோம்.
பலரும் வாழ்கை வாழ்வதற்கே, தினமும் நன்கொடை வழங்குங்கள், ஏழைகளை காப்பாற்றுங்கள், அநாதைகளக்கு உதவுங்கள் என்று அறிவுரைகளை பிறருக்கு forward செய்கிறார்கள். இது நல்ல விடயம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் என்றோ தனக்கு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கிறது என்றோ யாரும் சொல்லிக் கொள்வதில்லை. அவ்வாறு யாராவது சொன்னால் சமூகத்தில் அவர்களை தவறாக எண்ணி விடுவார்களோ என்று நினைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது.
முதல் மந்திரம்
அதிக பணம் சம்பாதிக்க விரும்பவதோ நல்ல வாழ்கை வாழ வேண்டும் என்று நினைப்பதோ பாவம் இல்லை. நேர்மையான எந்த வழியில் நீங்கள் பணம் சம்பாதித்தாலும் அதைக் கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு நல்ல வாழ்கை அமைத்துக் கொடுக்க நினைப்பதும் எந்த தவறும் இல்லை. அதனால் இந்த ஆசை உள்ளவர்கள் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டாம்.
அவ்வாறாக அறிவுரை அனுப்பும் பல நல்ல உள்ளங்கள் பயன்படுத்தும் WhatsApp திறன் கொண்ட கைப்பேசிகள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல். ஒரு ஏழை குடும்பத்தின் வருடாந்திர வருமானம். ஏன் இவர்கள் இந்த கைப்பேசியின் செலவை அவர்களுக்கு அளித்திருக்கக் கூடாது? ஆகையால் இந்த போலியானவர்களை நம்ப வேண்டும்.
நிறைய சம்பாதிக்கவும். அதைக் கொண்டு உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும். எஞ்சியவை தான தர்மம் செய்யவும். இன்று தான தர்மங்கள் செய்துவிட்டு நாளை உங்கள் சந்ததி நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் நீங்கள் தான் அதற்கு பொறுப்பாவீர்கள்.
எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம்:
நிலம்
வீடு
தங்கம்
வெள்ளி
வங்கி சேமிப்பு
மேலும் பேசுவோம்….
selvaaa
09-08-2014, 07:30 PM
நல்லத் தலைப்பு, அதுவும் பிடித்தத் தலைப்பு...
தொடரட்டும்
leomohan
10-08-2014, 05:38 AM
நன்றி செல்வா அவர்களே
leomohan
10-08-2014, 05:39 AM
முதலீட்டு வகைகள்
மேலும் அதைப் பற்றி பேசுவதற்கு முன் சில விடயங்கள் பேசுவது அவசியமாகிறது.
முதலீடு என்றாலே நம்மிடம் தேவைக்கு அதிகமாக சற்றே பணம் இருப்பதாக தானே பொருள் என்று நினைக்கலாம். அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின் வரும் பதிவகளில் அறிவீர்கள்.
பணம் இருப்பவன் தானே அதிகம் பணம் பண்ண முடியும் என்றும் நினைக்க வேண்டாம்.
இரண்டாவது மந்திரம்
உங்கள் வருமானத்திற்கும் உங்கள் செலவகுகளிற்கும் சரியாக குறிப்பேட்டில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். எந்த செலவு தண்டமாக போகிறது என்பதை அடிக்கடி பார்த்து அதை தவிர்த்து வாருங்கள். ஒரு நாளைக்கு 20 ரூபாய் எங்காவது நீங்கள் சேமிக்க முடிந்தால் அதை வைத்து நீங்கள் ஒரு கோடி ரூபாய் செய்யலாம். இதனை மறக்க வேண்டாம்.
எப்போது முதலீட்டை துவங்க வேண்டும்?
உங்கள் முதல் சம்பளத்திலிருந்தே முதலீட்டு சேமிப்பு இவற்றை துவங்க வேண்டும். அட நான் தான் திருமணமாகாதவனாயிற்றே சற்றே வாழ்கையை அனுபவித்து போகிறேன் என்று ஊதாரியாக செலவு செய்யும் எண்ணத்தை விட வேண்டும்.
இன்னிக்க செத்தா நாளைக்குப் பால். என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போவோம் இவ்வாறாக பேசுபவர்களை தவிர்க்கவும். கடைசியில் இடுகாட்டில் கூட செலவு இருக்கிறது என்பதை அறியாத வீணர்கள் இவர்கள்.
ஆக சேமிப்பையே நினைத்து இன்றைய வாழ்கை அனுபவிக்காமல் விட வேண்டுமா என்று கேட்டால் நான் இல்லை என்பேன். அதற்கு நீங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவது எது என்று பட்டியலிடுங்கள். நிரந்த மகிழ்ச்சி எது தற்காலிக மகிழ்ச்சி எது என்று வரையறை செய்யுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள்.
மாதாந்திர செலவுப் பட்டியல்:
வீட்டு வாடகை
மின்சாரம்
தண்ணீர்
மளிகை
பால் மற்றும் பழங்களை
காய் கறிகள்
எரிபொருள் (Petrol, Gas Cylinder, Kerosene)
வீட்டுத் தொலைப்பேசி
கைப்பேசி
பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம்
குடும்பத்துடன் சினிமா மற்றும் வெளியே சென்ற உணவு உண்டு ஆகும் செலவு
பணியாட்டகளின் சம்பளம்
தொலைகாட்சி மாதாந்திர கட்டணம்
இஸ்திரி செலவு
முடிவெட்டும் செலவு
உடற்பயிற்சி கூட கட்டணம்
இதர செலவுகள்
இது ஒரு மாதிரிப் பட்டியல் தான். இன்னும் ஏதாவது விடுப்பட்டிருந்தால் அதையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
மொத்த வருமானம் – 20,000 (எடுத்துக்காட்டாக)
மொத்த செவு – 18,000
மீதம் – 2,000
மேலும் பேசுவோம்…..
leomohan
10-08-2014, 05:42 AM
பங்கு வர்த்தகத்தில் செல்வந்தராகலாமா
என்னடா இது பங்கு வர்த்தகம் பயில வந்த இடத்தில் என் வீட்டுக் கணக்கை கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.
பெரும்பாலும் நான் பேசியவர்களிடம் அறிந்தது என்னவென்றால் என்ன ஐயா வீட்டு செலவிற்கே வருமானம் போதவில்லை நீங்கள் பங்கு வர்த்தகம் பண்ணு சேமிப்பு பண்ணு முதலீடு பண்ணு அப்படியெல்லாம் பேசறீங்க என்று சொன்னவர்களே அதிகம்.
அதனால் தான் இந்த முன்னேற்பாடு.
நீங்கள் தினமும் செய்யும் செலவுகளை குறிப்பெடுத்து வந்தால் மாத முடிவில் எது அவசிய செலவு எது அநாவசிய செலவு என்பதை விரைவில் அறிந்து விடுவீர்கள். அதை தவிர்த்தாலே அந்த மீதம் உள்ள பணத்தை என்ன செய்யலாம் என்பதை அறிவீர்கள்.
நாம் முதலீட்டை பற்றி பேசினோம் அல்லவா.
நமக்கு கூடுதல் வருமானம் வரத்தானே நாம் முதலீட்டை பற்றி பேசினோம். அவ்வாறான கூடுதல் வருமானம் எப்போது வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
- நான் ஓய்வு பெற்ற பிறகு அமைதியாக வாழ ஒரு வீடு வேண்டும்
- நான் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர வருமானம் வேண்டும்
- என் மகளுக்கு இன்னும் 20 வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
- என் மகனை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
- வாகனம் வாங்க வேண்டும். எத்தனை நாள் தான் பேருந்தில் செல்வது.
எத்தனை வேண்டும். எப்போது வேண்டும் என்பதை வைத்தே நமது சேமிப்பு முறைகளும் நிர்ணயமாகிறது.
நிலம்
- குறுகிய கால முதலீட்டிற்கு உகந்தது அல்ல.
- எத்தனை மடங்கு அந்த முதலீடு பெருகிறது என்பது நீங்கள் வாங்கிய இடத்தை பொறுத்தது.
- நினைத்தவுடன் விற்க இயலாது
- மாதாந்திர வருமானம் கிடைக்காது
- நிலம் இருக்கும் இடத்தை பொறுத்து ஆக்கரமிப்பு பிரச்சனை, அரசியல் குறுக்கீடு, நிலம் அபகரிக்கும் முதலைகளிடம் சிக்குதல், வழக்கு என்று பிரச்சனைகள் இல்லாது இருக்க வேண்டும்
- நிலம் வாங்க முதலீடு தேவை. பெருந்தொகை அல்லது வங்கிக் கடன். அதற்கு கட்ட வேண்டிய தவணைகள். அதற்கான வட்டி விகிதம். (EMIs and Interest Rates).
மேலும் பேசுவோம்….
நாஞ்சில் த.க.ஜெய்
10-08-2014, 02:10 PM
பங்கு வர்த்தகம் அருமையான துவக்கம் தொடரட்டும் ..
leomohan
10-08-2014, 06:07 PM
பணமும் பங்கு வர்த்தகமும் பிரச்சனையும்
அதெல்லாம் எனக்கு தெரியும். நேரா மேட்டருக்கு வா என்று சிலர் அவசரப்படுவது நியாயமே.
அது போன்றவர்களுக்கு நேரிடையாக சில விடயங்கள் சொல்கிறேன். பிறகு முன் பதிவின் இறுதியிலிருந்து தொடர்கிறேன்.
பாதுகாப்பாக பங்கு வர்த்தகம் பயிலும் வழி முறைகள்:
முதலில் http://moneybhai.moneycontrol.com எனும் தளத்தில் இலவசமாக ஒரு கணக்கை துவக்கவும்.
http://i61.tinypic.com/2epjcy9.jpg
Courtesy: http://www.moneycontrol.com
இத்தளத்தில் பங்கு வணிக விளையாட்டு என்று ஒன்று உண்டு. உங்களுக்கு முதலில் ஒரு கோடி ரூபாய் தருகிறார்கள். ஹா ஹா மெய்யான பணம் இல்லை. இது இ-பணம்.
நீங்கள் நிஜமான சந்தைகளில் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் வாங்கிய பங்குகளின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியை அறியலாம்.
இதனால் நீங்கள் சரியான பங்குகளை வாங்குகிறீர்களா என்பதையும் உங்கள் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்ளலாம்.
உங்கள் கடினமான உழைப்பில் சம்பாதித்த பணத்தை போட்டு பங்கு வர்த்தகம் பயில்வதை விட சில மாதங்கள் இந்த தளத்தில் விளையாடி பயிலவும்.
மேலும் பேசுவோம்….
leomohan
10-08-2014, 06:11 PM
NSE, BSE அறிமுகம்
Bombay Stock Exchange
http://www.bseindia.com
http://i57.tinypic.com/eg6a6b.jpg
National Stock Exchange
http://www.nseindia.com
http://i59.tinypic.com/35lvlvn.jpg
இந்தியாவில் பல வங்கு சந்தைகள் இருந்தாலும் தேசிய பங்குச் சந்தை மற்றும் பம்பாய் பங்குச் சந்தை இவை இரண்டிலும் தான் அதிக வியாபாரம் நடக்கிறது.
பம்பாய் பங்குச் சந்தை இயங்கும் நேரம் காலை 9.15 ல் இருந்து 3.30 வரை. இந்த நேரத்தில் நீங்கள் பங்குகளை வாங்கலாம் விற்கலாம். பங்குச் சந்தையின் குறியீட்டு எண் என்று சொல்லப்படும் SENSEX ஏறுவதும் இறங்குவதும் இந்த நேரத்தில் தான். இதனைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம் பிறகு.
தேசிய பங்குச் சந்தையும் இதே நேரத்தில் தான் இயங்குகிறது. 15-நிமிடங்கள் pre-open என்று கூறுகிறார்கள். இதைப்பற்றியும் பிறகு பார்க்கலாம்.
மேலும் பேசுவோம்….
நாஞ்சில் த.க.ஜெய்
11-08-2014, 03:07 AM
உபயோகமான பதிவு ..தொடரட்டும் ..
leomohan
11-08-2014, 06:50 AM
பங்கு வர்த்தகம் அருமையான துவக்கம் தொடரட்டும் ..
நன்றி நண்பரே.
leomohan
11-08-2014, 07:07 AM
ICICI Direct, Sharekhan, India Infoline, HDFC Securities அறிமுகம்
நீங்கள் மெய்யான பணத்தில் முதலீடு செய்ய இன்னும் நேரம் வரவில்லை. அவ்வாறு வரும்போது நீங்கள் பங்கு வியாபாரம் செய்ய ஒரு கணக்கு துவக்க வேண்டும். இதனை Demat account என்கிறார்கள். சில கலைச்சொற்களை தமிழ்படுத்தாமல் விடுகிறேன். இவ்வாறு இருப்பதே நல்லது. ஏனென்றால் நீங்கள் இணையத்தில் மேலதிக விபரங்களை தேடும் போது தமிழ் கலைச் சொற்கள் உதவிக்கு வராது. அதனால் நீங்கள் concept ஐ மட்டும் தமிழில் நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள். ஆங்கில சொற்களுக்கு தமிழ் பொருள் புரிந்துக் கொள்ளுங்கள்.
http://i57.tinypic.com/71nwg9.jpg
எந்த தளங்களில் நீங்கள் Demat Account துவக்கலாம்:
http://www.icicidirect.com
http://www.hdfcsec.com/
http://www.sharekhan.com/
http://www.indiainfoline.com/
image
ICICI Direct Website
இன்னும் பலர் உள்ளனர். ஆனால் மேற் சொன்ன தளங்கள் பிரபலமானவை. எந்த ஒரு இணையத்தளத்திலும் கணக்கை துவக்குவதற்கு முன் அவை SEBI (Securities and Exchange Board of India – http://www.sebi.gov.in) ஆல் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை அறிய வேண்டும்.
இப்போதைக்கு பங்க வர்த்தகம் பற்றி பயிலும் போது http://www.moneycontrol.com தளத்தில் விளையாடி பயின்றால் போதும். அதன் பிறகு நீங்கள் தயார் என்றால் இந்த கணக்கை துவக்க மேற்படி நிறுவனங்களை அணுகி உங்கள் விபரங்கள், புகைப்படம், வங்கி விபரம், PAN அட்டை இவற்றை தந்தால் இந்த கணக்கை துவக்கி உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லையும் தருவார்கள்.
குறிப்ப – வருடாந்திர கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 1000 வரையில் இருக்கும். மேலும் நீங்கள் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் Brokerage எனும் தரகு கட்டணமும் வசூலிக்கப்படும். இது சுமார் 0.25% லிருந்து 0.75% வரையிலும் இருக்கலாம். நல்ல இணையத்தரகர்களில் குறைந்த தரகு வாங்கும் நிறுவனமாக பார்த்து கணக்கு துவக்குதல் நல்லது.
மேலும் நீங்கள் வாங்கும் போதோ விற்கும் போது பத்திரப்பதிவு, மற்றும் வருமானவரி போன்றவை உங்கள் வருமானத்திலிருந்து கழிக்கப்படும். அதனால் எந்த விலையில் வாங்கி எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை அறிவது அவசியம்.
மேலும் பேசுவோம்…..
leomohan
11-08-2014, 09:30 AM
பங்குச் சந்தை அறிமுகம்
Stock Exchange என்பது பங்குச் சந்தை. பங்குகளை வாங்க விற்க ஒரு இடம். அதாவது எந்த நிறவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படிருக்கிறதோ அந்த சந்தைகளில்.
யாருக்கு வேண்டும் பங்குச் சந்தை?
நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளி. நீங்கள் தான் அதன் நிறுவனர் உரிமையாளர். ஆனால் உங்கள் சொந்த முதலீட்டில் அந்த நிறவனத்தை இன்னும் வளர்ச்சியடைய செய்ய முடியவில்லை. உங்களுக்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. அப்போது ஒருவர் உங்கள் நிறவனத்தில் பணம் போட முன்வருகிறார். அவரை Partner என்கிறோம்.
மேலும் பணம் தேவைப்படும்போது உங்கள் இருவரின் சொத்துகளும் சேர்ந்தும் உங்கள் தேவைக்கு குறைவாக இருக்கும் போது, வங்கிக் சென்று கடன் வாங்குவீர்கள்.
அல்லது பொது மக்களிடம் சென்று பணம் வாங்குவீர்கள். என்னது பொது மக்களா, அவர்கள் ஏன் எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கலாம்.
இந்த முறையை Intial Public Offering (IPO) என்கிறோம். நீங்கள் முறையான அனுமதிகளை பெற்ற பின்பே IPO செய்யலாம். அதாவது பாருங்கள் மக்களே, நான் ஒரு நிறுவனம் துவங்கியுள்ளேன். சில ஆண்டகளாக நன்றாக நடத்தி வருகிறேன். ஆனாலும் ஒரு கோடி நிறுவனமாகவே என் நிறுவனம் உள்ளது. இதை நூறு கோடியாக ஆக்கும் திறன் எங்களிடம் உண்டு. ஆனால் அதற்கு பெருத்த முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் எல்லாம் சேர்ந்த இதல் முதலீடு செய்தால் நீங்கள் இந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆகலாம். வரும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று சொல்வதே IPO.
ஒவ்வொரு பங்கின் விலை சுமார் 1, 10, அல்லது 100 என்று துவங்கலாம். சுமார் ஒரு லட்சம் பேர் உங்கள் பங்கை 10 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் அடுத்த ஆண்டில் உங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தால் 20 சதவீதம் லாபம் அடைந்திருந்தால் ஒவ்வொருவரின் பங்கும் 12 ரூபாயாக உயர்ந்து அவர்கள் இரண்டு ரூபாய் சம்பாதிக்க வழி வகுக்கிறீர்கள். ஒரு வேளை உங்கள் நிறுவனம் நட்டமடைந்தாலும் அந்த நட்டமும் பங்குதாரர்களுடன் பங்கு பிரிக்கப்பட்டுவிடுகிறது.
இதனை Primary Market அல்லது முதன்மை சந்தை என்கிறார்கள்.
ஆனால் இவ்வாறாக முதன்மை சந்தையிலிருந்து பங்குகளை வாங்கியவர்களுக்கு ஏதாவது காரணத்தினால் பங்கை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது இரண்டாம் சந்தைக்கு வருகிறது. இதனை Secondary Market என்கிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.
மேலும் பேசுவோம்…..
leomohan
11-08-2014, 09:31 AM
Online Stock Trading–இணைய பங்கு வர்த்தகம்
15 வருடங்களுக்கு முன்பு பங்குச் சந்தை என்றால் வெறும் பணக்காரர்கள் மட்டும் புழங்கும் இடமாக இருந்தது. திரைப்படங்கள் Shares என்று சொல்வார்கள் செல்வந்தர்கள். பல வங்கிகளிலும் பொது இடங்களிலும் விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கும். அதில் தரகர்களின் பெயர் முகவரி எல்லாம் முத்திரை குத்தியிருக்கும். 20 பக்களுக்கு மேல் சிறிய எழுத்துக் களில் இருப்பதால் பலரும் படிக்க மாட்டார்கள்.
பிறகு கணினிமயமாக்கலின் மூலமாக இப்போது குறைந்த பணம் உள்ளவர்களும் பங்கு சந்தைகள் வியாபாரம் செய்ய ஏதுவானது.
தரகர்கள் தேவையில்லை. தொலைபேசியில் பேசத்தேவையில்லை. அவர்களுக்கு Cheque, DD என்றுத் தரத்தேவையில்லை. பிறகு வந்து சேரும் பங்குப் பத்திரங்களை பாதுகாக்க தேவையில்லை. அனைத்தும் இணைய வழி மூலம் இப்போது நடைபெறுகிறது.
முறையில் வரைமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பழைய முறையின் தாமதம், தவறுகள் களையப்பட்டிருகிறது தற்போது.
T+2 Settlement – நீங்கள் திங்கட்கிழமை வாங்கும் பங்குகள் உங்கள் கணக்கில் புதன் கிழமை அதாவது இரண்டு நாட்களில் சேர்க்கப்படும். நடுவில் சனி ஞாயிறு வந்தாலோ அல்லது சந்தை விடுமுறை இருந்தாலோ அவை கணக்கில் இல்லை.
இந்த Demat Account மூலம் நீங்கள் என்னென் வாங்கலாம்:
IPO
Mutual Fund
Equity
Exchange Traded Funds (ETF)
இன்னும் சில நிறுவனங்கள் மேற்படி சொன்னவைக்கும் மேலாக சில முதலீட்டு திட்டங்களில் பணம் போடு வாய்ப்பு செய்து தருகின்றன. அவற்றை பற்றி பின்பு பேசலாம்.
மேலும் பேசுவோம்….
அனுராகவன்
11-08-2014, 03:20 PM
நல்ல பதிவு.....
leomohan
12-08-2014, 08:38 AM
நல்ல பதிவு.....
நன்றி அச்சலா அவர்களே.
leomohan
12-08-2014, 08:40 AM
Mutual Fund–அறிமுகம்
Mutual Fund அல்லது பரஸ்பர நிதி என்பது நாம் நேரிடையாக எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் வேறு வகையில் முதலீடு செய்வது.
Asset Management Company (AMC) எனும் நிறவனங்கள் இவ்வாறான Mutual Fund Schemes அதாவது பரஸ்பத நிதி திட்டங்களை அவ்வபோது அறிவிக்கிறார்கள்.
இவ்வாறான திட்டங்கள் Fund Manager என்பவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
இம்மாதிரியான திட்டங்களலில் நீங்கள் மொத்தமாகவோ அல்லது மாதாமாதம் ரூ 500 லிருந்தோ சேமிப்பை துவக்கலாம். இவ்வாறாக மாதாமாதம் செய்யும் முறையை Systematic Investment Plan (SIP) என்கிறார்கள்.
இதில் Entry Load and Exit Load எனும் இருவகை கட்டணங்கள் உள்ளது. Entry Load பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளது. அதவாது நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 1% நுழைவுக் கட்டணமாக கட்ட வேண்டும். அதுபோலவே இந்த திட்டத்தை விட்டு வெளியேறி நீங்கள் போட்ட பணத்தை எடுக்க முயலும் போதும் கட்ட வேண்டும்.
இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் உங்களைப் போல பலரும் இந்த திட்டத்தில் பணம் போடுவார்கள். அந்த மொத்த பணத்தையும் அந்த Fund Manager அவருக்கு சரியென்று படும் நிறவனத்தின் பங்குகள் மீது முதலீடு செய்வார். அவற்றால் வரும் லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
அவர் இஷ்டத்திற்கு எதிலும் பணம் போட முடியாது. அவர் எந்தெந்த நிறவனத்தில் பணம் போடுகிறார் என்பது அந்த திட்டத்தின் Fact Sheet மூலம் அறியலாம்.
முற்றிலும் Equityயிலோ அல்லது அரசாங்க பத்திரங்களிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறையிலோ (Sector) அவர் அந்த பணத்தை முதலீடு செய்வார்.
http://i60.tinypic.com/34sqgbs.jpg
http://www.moneycontrol.com/mutualfundindia/
மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படும் பரஸ்பர நிதி திட்டங்களை காணலாம்.
மேலும் பேசுவோம்….
நாஞ்சில் த.க.ஜெய்
12-08-2014, 09:21 AM
முன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்லை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..
leomohan
12-08-2014, 09:43 AM
முன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்லை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..
நன்றி ஜெய்.
leomohan
13-08-2014, 06:30 AM
Exchange Traded Fund (ETF)–அறிமுகம்
http://i59.tinypic.com/4hs18m.png
http://www.moneycontrol.com/mf/etf/
ETF என்பது ஒரு குறியீட்டின் மீது பணம் போடுவதற்கு சமம். அதாவது பம்பாய் பங்குச் சந்தையின் குறியீடு SENSEX இன்று 25,000 எனும் நிலை அடைந்திருக்கிறது என்று கொள்வோம். நீங்கள் SENSEXஐ அடிப்படையாக கொண்ட ETF மீது பணம் முதலீடு செய்கிறீர்கள். சில மாதங்களுக்கு பிறகு இந்த புள்ளி 30,000 தொட்டது என்றால் நீங்கள் முதலீடு செய்த பணமும் அதே சதவீததில் வளர்ச்சியடையும்.
பங்குச் சந்தையின் குறியீட்டிலோ அல்லது தங்கத்திலோ அல்லது வங்கிகளின் வளர்ச்சியை காட்டும் வங்கி குறியீட்டிலோ இவ்வாறான முதலீடுகள் செய்யலாம்.
இப்போதைக்கு இதில் நீங்கள் பணம் போட வேண்டாம். இந்த துறையை நன்கு அறிந்த பிறகு இதைப் பற்றி பேசுவோம்.
இப்போதைக்கு இதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் வர்த்தகர்கள் மட்டும்.
மேலும் பேசுவோம்…..
leomohan
14-08-2014, 05:50 AM
ICICI Direct தரும் இலவச பாடங்கள்
1. Equities - http://content.icicidirect.com/newsiteContent/FinancialEducation/Learning/LearningCenter/Module1.htm
2. Mutual Fund - http://content.icicidirect.com/newsiteContent/FinancialEducation/Learning/mutualfund/intro.htm
3. Technical Analysis - http://content.icicidirect.com/newsiteContent/FinancialEducation/Learning/technicalanalysis/technical-analysis.html
மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் நீங்கள் அடிப்படை கல்வி பெறலாம். ஆங்கிலத்தில் எளிமையாக பங்கு வர்த்தகம் தொடர்பான விடயங்களை விளக்கியுள்ளார்கள்.
மேலும் Youtubeல் ICICI Direct Channel தேடி இன்னும் பல காணொளி பாடங்களில் நேரம் செலவிடலாம்.
உங்கள் சுற்றத்தில் உள்ள B.Com, M.Com, BA/MA Economics, CA, CS, ICWA, MBA Finance, PG Diploma in Financial Markets பட்டதாரிகளிடம் பங்கு வர்த்தகம் பற்றியும் உலக பொருளாதாரம் பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி உங்கள் ஞானத்தை வளர்த்துக் கொண்டால் இந்த துறையில் நீங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
மூன்றாவது மந்திரம்
சிறுக சிறுக முதலீடு செய்யுங்கள்
தொடர்ந்து செய்யுங்கள்
தொலை நோக்கு பார்வையுடன் முதலீடு செய்யுங்கள்.
இந்த வியாபாரத்தில் நட்டம் அடைந்தவர்களை நீங்கள் அதிகம் சந்திக்க நேரிடுகிறது. இதனால் பலரும் விலகியே இருக்கிறோம்.
ஏன் நட்டம் அடைந்தார்கள் என்பதை ஆராய்ந்து உணர வேண்டும்.
மரம் நட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டும். பலரும் பங்கு வர்த்தகத்தில் பணம் போட்டுவிட்டு ஹாயாக அமர்ந்துவிடுகிறார்கள்.
பெரும்பாலோனோர் செய்யும் தவறுகள்.
பேராசை – அதிகம் வாங்கும், நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது அதுவும் குறுகிய காலத்தில்
பயம் – நாம் வாங்கியுள்ள பங்கின் விலை வீழ்ச்சி காணத்துவங்கியதும் பயத்தில் சட்டென்று நட்டத்திலே விற்க துவங்குதல்.
அறியாமை – இது என்னெவென்றே அறியாமல் பிறர் சொன்னார்கள் என்று பணம் போட்டவர்கள்.
பிறர் சொன்னதை கேட்டு தான் சிந்திக்காமல் ஆராயாமல் பணம் போடுதல்.
இதை சூதாட்டமாக நினைத்து பணம் போடுபவர்கள்
தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு பணம் ஒதுக்காமல் முழுவதையும் பங்கில் போடுதல்
சில மணி நேர உழைப்பு தொடர்ந்து கண்காணித்தல் சிறுக சிறுக முன்னேறுதல் என்பது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.
மேலும் பேசுவோம்…..
leomohan
17-08-2014, 06:22 AM
தமிழில் பங்குச் சந்தை தொடுப்பு
பாலாஜி என்பவர் தமிழ் மீடியா தளத்திற்காக Technical Analysis பற்றி எளிமையாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். இதனை நினைவில் வைத்துக் கொண்டு அடிப்படை பாடங்களை அறிந்தப் பின் இந்த தளத்திற்கு சென்று மேலும் பயன் பெறலாம்.
http://www.4tamilmedia.com/knowledge/essays/4065-pajilvom-panku1
குறிப்பு – இப்போதே படித்தால் மிகவும் கடினமோ என்று எண்ணத் தோன்றும். அதனால் சற்றே தேர்ச்சி பெற்றப் பின் இந்த தளத்திற்கு செல்லும்.
பிற தளங்கள்
http://www.onworkindia.com/2013/08/blog-post.html
http://sharemakt.blogspot.com/p/blog-page_16.html
பல வலைப்பூக்களும் இணைய தளங்களும் ஆர்வமாக தமிழில் பங்குச் சந்தைப் பற்றி எழுதவேண்டும் என்று துவக்கப்பட்டு பிறகு நின்றுப் போய்விட்டன. அந்த கதி இந்த வலைப்பூவிற்கும் ஏற்படலாம். துவக்கியவர்களுக்கு நேரமின்மையோ அல்லது அதிக பங்களிப்புக்கள் கருத்துக்கள் வராத காரணங்களாலோ அல்லது இன்னும் பங்குச் சந்தை தமிழகத்தில் பிரபலமாகததோ காரணங்களாக இருக்கலாம்.
தமிழில் பங்குச் சந்தை பற்றி வெளியாகும் ஒரு சிறப்பு இதழ் நாணயம் விகடன் தான். ஏனோ மற்றவர்கள் இந்த பகுதிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
http://www.vikatan.com
http://i61.tinypic.com/2vs20sl.jpg
மேலும் பேசுவோம்…..
leomohan
19-08-2014, 06:37 AM
எங்கு முதலீடு செய்யலாம்
முன்பு பேசியதிலிருந்து தொடர்ந்து பேசுவோம்.
நிலம், வீடு, தங்கம், வெள்ளி, வங்கி சேமிப்பு என்று பார்த்தோம்.
நிலம் வாங்குவதின் நிலை பற்றி பேசினோம்.
அதுபோல
வீடு
வாங்கும் வீட்டில் நாமே குடியிருந்தால் வாடகை மிச்சமாகும்
வங்கி கடன் மூலம் வீடு வாங்கியிருந்தால் தவணை மற்றும் மிச்சமாகும் வாடகை இரண்டையும் கூட்டி கழித்து பார்க்க வேண்டும்
நாம் ஒரு வீட்டில் இருந்துக் கொண்டு இன்னொரு வீட்டை முதலீடாக நினைத்து வாங்கினால் அதன் வாடகை விகிதம் என்ன செலவுகள் என்ன என்று கணக்கு பார்க்க வேண்டும். எடுத்துக் காட்டாக 20 லட்சம் ரூபாயில் வீடு வாங்கி மாதம் 10,000 ரூபாய் விகிதம் 1,20,000 வருமானம் வந்ததென்றால் இதில் ஆகும் செலவுகள்
வீடு பராமரிப்பு செலவு
சொத்து வரி
வருமான வரி
இந்த 20 லட்சம் Fixed Depositல் போட்டிருந்தால் சுமார் 1,80,000 கிடைத்திருக்கும். வருமான வரி தவிர்த்து வேறு வரி இல்லை.
இந்த வீடு பன்மாடி குடியிருப்பாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதன் விற்ப்பனை விலை ஏறும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. தனி வீடுாக இருந்தால் வாடகையும் கிடைக்கும் விற்கும் போது குறைந்த பட்சம் இரண்டு மடங்காக திரும்பி வரும். ஆனாலும் நாம் வாங்கிய இடத்தையும் பொருத்திக்கிறது. மனைக்குதான் மதிப்பு. நாம் கட்டிய வீட்டின் மதிப்பு அதிகம் இல்லை.
மேலும் ஊரை விட்டுத்தள்ளி வாங்கியிருந்தால் அடிக்கடி சென்று பராமரிப்புகள் செய்ய வேண்டும்.
மேலும் நினைத்த மட்டில் வீட்டை விற்க முடியாது. அவசரமாக பணம் வேண்டும் என்றால் விற்க முடியாது. வங்கியில் அடமானம் வைப்பதும் சுலபத்தில் நடப்பதில்லை. எதிர்பார்த்த பணமும் கிடைப்பதில்லை.
எனக்கு வருமானம் வேண்டாம். எதிர்கால சந்ததிக்காக ஒரு வீடு மனையுடன் வாங்கி வைக்கிறேன் என்று நினைத்தால் அதற்கு வீட்டை கட்டி பணம் முடிக்கத்தேவையில்லை. வெறும் மனை வாங்கியே விட்டிருக்கலாம்.
இவ்வாறாக பணம் முடிக்கப்பட்டுவிடுகிறதா அல்லது பணம் மேலும் பணம் பண்ணுகிறதா என்று பார்க்கவேண்டும். அதனூடே வரும் தொல்லைகளையும் பார்க்க வேண்டும்.
தங்கம்
நகையாக வாங்குவதில் வீட்டில் உள்ள பெண்டிருக்கு சுகம், பெருமை, மகிழ்ச்சி.
ஆனால் முதலீட்டாக வாங்குகிறேன் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
நகைகளாக வாங்கும் போது செய்கூலி சேதாரம் என்று 100க்கு 20 போய்விடுகிறது. மேலும் விற்கும்போது இன்னும் கொஞ்சம் போய்விடுகிறது.
1 கிராம், 5 கிராம், 10 கிராம் கட்டிகளா 24-கேரட் வாங்கி வைக்கலாம். ஆனால் பாதுகாப்பிற்கு கவலைப் பட வேண்டும். திடீரென்று விற்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.
இ-கோல்ட் அல்லது Gold ETFல் பணம் போடலாம். சுலபமானது. வேண்டும் போது விற்கலாம். பாதுகாப்பிற்கு பஞ்சமில்லை.
அதிலும் யோசிக்க வேண்டியது தங்க விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. அதில் போட்ட பணம் நமக்கு எத்தனை விகிதத்தில் லாபம் ஈட்டித் தருகிறது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
வெள்ளி
வெள்ளி பாத்திரங்கள், பூஜை பாத்திரங்கள் என்று வாங்குகிறோம். அது எந்த அளவில் பயன்படுகிறது என்பதை உணரவேண்டும். அது ஒரு முதலீட்டு சாதனமாக இன்னும் பிரபலமடையவில்லை.
Gold ETF போல இன்னும் Silver ETF வரவில்லை.
Returns என்ன என்பதை யோசிக்க வேண்டும்.
வங்கி சேமிப்பு பற்றி அடுத்த பதிவில் பேசலாம்.
மேலும் பேசுவோம்….
leomohan
22-08-2014, 06:05 AM
வங்கி சேமிப்பு சாதனங்கள்
State Bank of Indiaவின் வட்டி விகிதங்கள்
image
http://i58.tinypic.com/1z3uhj9.png
http://www.sbi.co.in
ஒரு வருடத்திற்கு மேலாக வைத்திருந்தால் 9% கிடைக்கிறது. சில கூட்டறுவு வங்கிகள் 12 சதவீதம் கூட தருகிறார்கள். எல்லா வங்கிகளிலும் பணம் போட முடியாது. தனியார் வங்கிகள் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் அதிக வட்டி தருகிறார்கள் என்று பணம் போட்டு ஏமாந்தவர்கள் தொலைகாட்சியில் வந்து புலம்புவதை பார்த்திருக்றோம். ஆனாலும் நாம் விடாமல் ஏமார்ந்து வருகிறோம்.
சராசரியாக நம் முதலீடு வகைகளில் எது சிறந்த வருமானத்தை தருகிறது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். அவ்வாறாக மனை வீடு வியாபாரம் தவிர்த்து மற்ற சாதனங்களை ஆராய்ந்து இந்த அட்டவணை வெளியிட்டிருக்கிறார்கள்.
image
http://i59.tinypic.com/259wjev.png
Courtesy: http://moneyexcel.com/4406/sensex-vs-gold-silver-fd-ppf-from-1981-to-2013
தங்கம் 9.08
வெள்ளி 8.84
வங்கி சேமிப்பு 9.25
பம்பாய் பங்கு சந்தை 15.27
இதிலிருந்து பங்கு வர்த்தகம் அதிக வருமானம் ஈட்டித்தந்திருப்பதை அறியலாம்.
மேலும் பேசுவோம்…
leomohan
24-08-2014, 12:16 PM
TVS Motor நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி
http://i58.tinypic.com/i1a990.png
http://i57.tinypic.com/28lfcz.png
Charts from Moneycontrol.com: http://www.moneycontrol.com/india/stockpricequote/auto23wheelers/tvsmotorcompany/TVS
ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன்பு சில அடிப்படை தகவல்களை நாம் அறிய வேண்டும்.
முதலில் ஒரு பங்கின் விலை. CMP என்றால் தற்போதைய விலை Current Market Price.
TVS Motoro Companyயின் 5-வருட Chart – விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது. August 2009ல் சுமார் ரூ 22 இருந்த ஒரு பங்கின் விலை நடப்பு ஆண்டில் August 2014ல் 173 ஆக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதாவது சுமார் 7 மடங்கு. இந்த வளர்ச்சி உங்களுக்கு வேறு எந்த முதலீட்டிலிருந்தும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா.
பொதுவாக 52-week LOW/HIGH என்று பார்க்கலாம். அதாவது ஒரு வருடத்தில் அந்த பங்கின் உச்சக் கட்ட விலையும் குறைந்த பட்ச விலையும்.
மேலும் வர்த்தகம் நடக்கும் நாளில் Open/Close அதாவது எந்த விலையில் துவங்கியது எந்த விலையில் முடிந்தது என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் பேசுவோம்…..
leomohan
24-08-2014, 12:18 PM
நல்ல செய்தி நாணயத்தின் ஒரு பக்கம்
சரி. சென்ற பதிவில் பார்த்த பங்கு 7-8 மடங்கு உயர்ந்ததாக நினைத்து நாம் இந்த பங்கில் பணம் போட்ட சாமார்த்தியத்தை நினைத்து நம்மையே மெச்சிக் கொண்டோம்.
அதே படத்தை இன்னொரு முறை பாருங்கள்.
நீங்கள் நவம்பர் 2009த்தில் வாங்கியிருந்தால் சுமார் 80 ரூபாயக்கு வாங்கியிருப்பீர்கள். ஆனால் பிப்ரவரி 2013ல் அது 40 ரூபாய்க்கு விழுந்து விட்டது.
அடப்பாவி நன்றாக ஏறிக் கொண்டிருந்த பங்காயிற்றே. அட இதென்ன சோதனை என்று நினைப்போம்.
பொறுத்தவர்கள் 173 ரூபாய்க்கு விற்று பூமி ஆண்டுவிட்டார்கள். பொறுமையில்லாதவர்கள் 50 சதவீதம் நட்டத்தில் விற்றுவிட்டு அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்கை ஒரு சக்கரம். மேலே சென்றது கீழே வரவேண்டும். ஏறுவது இறங்கும். இறங்குவது ஏறும்.
ஒரு முறை நீங்கள் நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கிவிட்டால் நீங்கள் நிர்ணயத்திருந்த அல்லது எதிர்பார்த்திருந்த லாபம் வரும் வரையில் விற்க வேண்டிய கட்டாய நிலைக்கு வராதீர்கள்.
முன்பு சொன்னது போல தொலைநோக்கு பார்வையுடன் காய்களை நகற்ற வேண்டும்.
அதற்கு பங்கு வர்த்தகத்தின் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வாழ்கையின் ஆதாரமாக தினசரி வாழ்கைக்காக வரும் வருமானமாக கொள்ளக் கூடாது.
மேலும் விபரமாக கூறுகிறேன்.
உங்கள் வாழ்கையின் தேவைகளை Essential, Desirable and Luxury என்று மூன்று வகையாக பிரித்துக் கொள்ளுங்கள்.
இன்றைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வது Essential
இருக்கும் நிலையிலிருந்து சற்ற வசதியாக இருப்பது Desirable
முற்றிலும் வசதியாக படோடோபமாக வாழ வேண்டுவது Luxury
எடுத்துக் காட்டாக நீங்கள் உங்கள் மனைவி உங்கள் ஒரு மகள் மூவரும் தான் உங்கள் குடும்பம் என்றால் 1-Bed Roomல் வாழ்கை நடத்தலாம். வீட்டில் விருந்தினர் தங்குவது போல் வந்தால் கடினம் தான். ஹாலில் யாராவது படுக்க வேண்டியிருக்கும். அது நாமா அல்லது வந்தவரா என்பதிலும் குழப்பம் வரும்.
2-bed roomல் இருப்பது Desirable. வந்தவர்கள் தங்கலாம். மற்ற நாட்களில் இன்னொரு படுக்கையறை குழந்தையின் அறையாக விளையாட்டு பொருட்களுடன் அலங்கரிக்கலாம்.
3-bed room கிடைத்தால் பலே ஜோராக இருக்கலாம்.
இப்போது நீங்கள் உங்களுடைய முதல் வீட்டையே பங்கு வர்த்தகத்தின் வருமானத்தில் வாங்க நினைப்பது ஆபத்து. உங்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் வீடு வாங்க வேண்டும் நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் நல்ல நிலையில் இருக்கிறது இன்னும் சிறிது ஏறினால் விற்றுவிட தயாராக இருக்கிறீர்கள் ஆனால் திடீரென்று சந்தை சரிகிறது. உங்கள் கனவுகளை சேர்த்து கொண்டு தான்.
இது உங்களுக்கு பேரிடியாக இருக்கும். இப்போது என்ன செய்வீர்கள் வீட்டிற்கு முன்பணம் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, கையில் இருக்கும் பங்குகளை விற்று மேலும் கடன் வாங்கி வீட்டுக் கடன் வாங்கி ஏதோ செய்து வீடு வாங்கிவிடுவீர்கள். 15 வருடம் தவணை கட்ட வேண்டும். ஆனால் இந்த வீடு வாங்கும் நிலையை இன்னும் நான்கு வருடங்கள் தள்ளி வைக்க வாய்ப்பிருந்திருந்தால், விழுந்து போன நல்ல பங்குகளை அடிமாட்டு விலையில் நீங்கள் மேலும் வாங்கிக் குவித்திருந்தால் நான்கு வருடதிற்கு பிறகு நீங்கள் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளும் அடிமாட்டு விலைக்கு வாங்கிய பங்குகளும் சேர்ந்து மளமளவென்று ஏறும் போது ஆஹா இப்போது எந்த கடனும் இல்லாமலே வீடு வாங்கி விடலாமே என்ற நிலைக்கு வரும்.
இரண்டு பெரிய கேள்விகள்
எப்போது வாங்க வேண்டும்?
எப்போது விற்க வேண்டும்?
மேலும் பேசுவோம்…..
நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 12:18 PM
தொடர்ந்து வரட்டும் தகவல்கள் சேகரிக்க காத்திருக்கிறேன்...
leomohan
01-09-2014, 06:36 PM
பங்கு வர்த்தகம் ஏமாற்று வேலையா?
இருக்கலாம். இதை வெளியாளாக இருந்துக் கொண்டு சொல்வது மிகவும் கடினம்.
நாம் அறிந்த எத்தனையோ பெரிய நிறுவனங்கள் மூழ்கிப் போயிருக்கின்றன.
பல முறை கையாடல்கள் உள்குத்து பெரிய தலைகள் மாட்டிக் கொள்வது என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைப்பு செய்திகள் வருகிறது.
நமக்கு தெரிந்த நிறுவனங்களிலேயே கணக்கு புத்தகங்களை படித்த CA க்கள் மாற்றி அமைக்கிறார்கள். லாப நட்டங்களை திரித்துக் காட்டுகிறார்கள். இறந்துக் கொண்டிருக்கும் நிறவனங்களை கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களாக காட்டுகிறார்கள்.
சில பெரிய நிறுவனங்கள் Public Relations Officer – PRO அமர்த்தி இணையத்திலும் செய்தி தாட்களிலும் தொலைகாட்சிகளிலும் அவர்களின் பங்குகளை வாங்கினால் நல்ல விலையில் விற்று லாபம் பெறலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
பணக்காரர்கள் ஏற்படுத்திய இந்த உலகக்தில் நடுத்தர வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கு எங்கே இடம் என்றும் தோன்றுகிறது.
பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைந்தவர்கள் காண்பதே அரிதாக இருக்கிறது.
பெரிய நிறுவனங்கள் பல கோடி ரூபாயில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறைய Demand இருப்பதாக ஒரு போலி தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பிறகு பங்கின் விலை உயரத்துவங்கியதும் அவர்களே விற்று Supply லாபம் சம்பாதிக்கிறார்கள்.
தனி மனித கோடிஸ்வரர்களும் இவ்வாறாக நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் அடிப்பதும் நடக்கிறது.
பல இடைத்தரகர்கள் தற்கொலை செய்துக் கொண்டதையும் நாம் அறிந்திருக்கிறோம் செய்திகள் மூலமாக.
ஐயோ ஏமாற்று வேலையாக இருக்கலாமா? என்னங்க சொல்றீங்க அப்ப இந்த வலைப்பூவை படிப்பதே வேஸ்ட் என்று நீங்கள் நினைப்பது சகஜமே.
சில விளக்கங்கள்
சட்டங்கள் வரையறுக்கப்படுவது அதை சாமார்த்தியமான சிலர் மீறுவது நடந்துக் கொண்டிருக்கின்றன. அதனால் வாழ்கை சக்கரம் ஓய்வதில்லை.
விமானம் கடத்தப்படுகிறது என்று யாரும் விமானப் பிரயாணம் செய்யாமல் இருப்பதில்லை.
உணவில் கலப்படம் நடக்கிறது என்பதால் உணவகங்களுக்கு மக்கள் போகாமல் இல்லை.
உடலில் தங்கங்களை போதை மருந்தை பதுக்கி வைத்து சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிலிருந்து வந்து மாட்டிக் கொள்பவர்களின் கதைகளையும் கேட்கிறோம்.
இந்தியாவில் பெரிய ஊழல் வாதிகளையும் ஊழல் அரசாங்கங்களையும் மீறி இந்தியாவின் பொருளாதாரமும் வங்கித்துறையும் பங்கு வர்த்தகமும் அதற்கான சட்டதிட்டங்களும் மிகவும் கடினமாகவும் பொதுமக்களை பாதுகாப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் Reserve Bank of India (RBI), Securities and Exchange Board of India (SEBI), மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்களுக்கான விதிமுறைகளும் வழிமுறைகளும் நல்ல Maturity பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் ஒரு சட்ட மீறல் நடக்கும் போது சட்டத்திற்கு உட்பட்டு நடந்தவர்களை காப்பாற்ற இந்த நடுநிலை நிறுவனங்களும் அரசாங்கமும் பல முயற்சிகள் எடுத்திருக்கின்றன.
அதாவது நீங்கள் State Bank of Indiaவில் பணம் போட்டு அது மூழ்கிப் போனால் உங்கள் பணத்திற்கு அராசங்கமே உத்திரவாதம் தருகிறது. அந்த வங்கியை வேறு ஒரு வங்கியுடன் இணைத்து மீண்டும் உயிர் பெற செய்யும்.
ஆனால் 20 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு உங்கள் தெருவோரத்தில் அரசாங்கம் அங்கீகரிக்காத ஒரு நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தால் நீங்கள் காவல்துறையிடம் தஞ்சம் அடையலாமே ஒழிய அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாது. அதாவது காவலர் குற்றவாளிகளை பிடித்தால் அவர்களும் பணம் செலவு செய்யாமல் இருந்தால் ஒரு வேளை உங்கள் பணம் கிடைக்கலாம். ஏன். ஏனென்றால் அரசாங்கம் Investor Awareness முதலீடு செய்வர்களுக்கான விழிப்புணர்ச்சி திட்டங்களை மீறி அவர்கள் சொன்னதை கேட்காமல் கண்டவர்களின் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதால் அவர்கள் உங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை.
மேலும் அபரிமிதமான பேராசை எந்த தொழிலுக்குமே ஆபத்து தரும். அது பங்கு வர்த்தகத்திற்கும் தகும்.
மேலும் பேசுவோம்…..
leomohan
01-09-2014, 06:38 PM
வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்
முதலில் பங்குகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி பார்ப்போம்.
முன்பு சொன்னது போல moneycontrol தளத்தில் ஒரு கணக்கை துவக்கி விட்டீர்கள்.
பிறகு நீங்கள் ஒரு Portfolio வை உருவாக்க வேண்டும். இது நீங்கள் பங்குகளை வைத்திருக்கும் ஒரு கோப்பு என்று கொள்ளுங்கள். இதற்கு ஒரு பெயரை கொடுங்கள்.
கீழே படத்தில் காட்டியுள்ளது போல Transact எனும் தொடுப்பை தட்டுங்கள்.
பிறகு பங்குகளை வாங்குவதற்கான பகுதி திறக்கும். நான் முதல் சில எழுத்துக்களை எழுதி Reliance எனும் நிறுவனத்தின் பங்குகளை தேடுகிறேன்.
இது பல Scrips களை பட்டியலிடும். அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட பல பங்குகளின் பெயர்களை பட்டியலிடும்.
இதில் நாம் எந்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவோம் என்று பார்க்கலாம். ஒன்றும் பயம் வேண்டாம். இ-பணம் தானே. தைரியமாக வாங்குவோம். ஒரு கோடி ரூபாய் இருக்கிறதே.
பிறகு ரிலையன்ஸ் எனும் Scrip ஐ தேர்தெடுத்து எத்தனை வேண்டும் என்று இட்டு Buy எனும் பொத்தானை அமுக்கவும்.
http://i57.tinypic.com/2ce2og2.jpg
பங்குகளை தேடும் முறை
http://i58.tinypic.com/2vskfvn.jpg
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கை தேர்ந்தேடுத்தேன்
இந்த வாங்கும் பக்கத்தில் உள்ளை என்னென்ன என்று அறியலாம்.
1. முதலில் இடது மேல் புறத்தில் நாம் காண்பது அந்த பங்கின் பெயரும், அதன் தற்போதைய விலையும் அது எத்தனை புள்ளிகள் நேற்றிலிருந்து இன்றைக்கு மாறியிருக்கறது, எத்தனை சதவீதம் ஏற்றம் அல்லது இறக்கம் மற்றும் எத்தனை பங்குகளை வியாபரத்தில் உள்ளன என்பதை காட்டும்.
2. வலது புறத்தில் Drop-down Menu ஒன்று கிடைக்கும். அதில் Cash அல்லது intra-day என்று இரண்டு உண்டு. முதலாவது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்திலிருந்து வாங்கவது. இந்த விளையாட்டில் உங்களிடம் ஒரு கோடி உள்ளது.
மேலும் பேசுவோம்…
leomohan
07-09-2014, 10:34 AM
வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்–2
முதலில் சில பங்கு சந்தை கலைச்சொற்களின் பொருளை அறிவோம். இது குறிப்பாக ரொக்க சந்தையில் நாம் பங்குகளை வியாபாரம் செய்யும் போது அறிய வேண்டிய சொற்கள். ரொக்க சந்தை என்றால் Cash Market அதாவது வியாபாரம் தொடங்கும் முன் தேவையான பணம் உங்கள் வங்கி கணக்குகளில் இருக்க வேண்டும். வாங்குவதற்கு தேவையான ஒரு பகுதி பணம் மாத்திரம் வைத்துக் கொண்டும் பங்கு வியாபாரம் செய்யலாம் அது என்ன என்று பிறகு பார்க்கலாம்.
Brokerage – தரகர் கட்டணம்
உங்களிடமிருந்து வசூலிக்கப்படும் தரகர் கட்டணம். இது 0.50 சதவீதத்தலிருந்து 2.5 வரை இருக்கலாம். நீங்கள் ICICI Directன் மூலம் Demat கணக்கு வைத்திருந்தால் நீங்கள் பங்குகளை வாங்கும் போது விற்கும்போது இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
GTC Order – Good Till Cancelled
இம்முறையில் நீங்கள் வாங்குவதற்காக இருந்த பங்கு நீங்களாகவே நிறத்தும் வரையில் தானாக நிறத்தாது. அதாவது Online Stock Trading என்பது இணையம் மூலமாக தாமாக இயங்கும் ஒரு மென்பொருளாகும். அதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கை வாங்குமாறு கட்டளை இடுகிறீர்கள். அந்த விலையில் பங்குகள் கிடைக்கும் வரையில் இந்த மென்பொருள் முயன்றுக் கொண்டே இருக்கும்.
GTD Order – Good Till Day
மேல் சொன்னதற்கு மாறாக சந்தை நாளிலேயே நீங்கள் இட்ட கட்டளை காலாவதியாகிவிடும். மீண்டும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு கட்டளையிட வேண்டும்.
Limit Order
வாங்கும் போது அதிக பட்ச விலையும் விற்கும்போது நீங்கள் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச விலையிலும் வியாபாரம் செய்ய விரும்புவதையே குறிக்கிறது. சந்தையின் விலை நமக்கு சாதமாக கூட இருக்கலாம்.
Market Order
சந்தையின் தற்போதைய விலைப்படி பங்குகளை வாங்குவதோ அல்லது விற்பதோ இது குறிக்கிறது.
Stop Loss
உங்கள் நட்டத்தை கட்டுப்படுத்த உதவும் ஒரு சாதனம். நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு அதிக விலையில் வாங்காமலும் நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு குறைந்த விலையில் விற்காமலும் இருக்க நீங்கள் இந்த அம்சத்தை உபயோகிக்கலாம்.
STT – Securities Transaction Tax
பங்குகளை வாங்கும் விற்கும் முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒரு வரி. சதவீதம் 0.125.
Target Price
ஒரு பங்கை வாங்கிவிட்டு நீங்கள் சில சதவீத லாபத்துடன் விற்க நினைப்பீர்கள் அல்லவா. அவ்வாறாக நீங்கள் எதிர்பார்க்கும் இல்க்க விலை தான் இது.
மேலும் பேசுவோம்....
leomohan
15-09-2014, 08:11 AM
வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம் - 3
http://i58.tinypic.com/2vskfvn.jpg
முந்தைய பதிவில் கூறியிருந்ததைப் போல நீங்கள் Reliance நிறுவனத்தை தேர்ந்தெடுத்தீர்கள்.
உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இ-பணம் இருக்கிறது.
இதை நல்லப்படியாக பன்மடங்காக ஆக்க வேண்டும்.
சரி. இப்போது இந்த வாங்கும் பகுதியில் ஒரு எண்ணை இடுங்கள். நீங்கள் இப்போது பங்கு சந்தை பயிலும் மாணவரல்லவா கணக்கு அதிகம் பார்த்து நேரம் கிடத்த வேண்டாம். 1, 10, 100 அல்லது 1000 என்ற அளவில் பங்குகளை வாங்குங்கள். கணக்கிற்கு சுலபமாக இருக்கும்.
Current Price அல்லது Limit Price தேர்ந்தெடுங்கள். இப்போதைக்கு சந்தை விலையான Current Price தேர்ந்தெடுங்கள். மொத்த முதலீட்டு தொகை அதுவாகவே கண்க்கிட்டுக்கொள்ளும். உங்கள் வாங்கும் கட்டளை எது வரையில் காலாவதியாகாமல் இருக்க வேண்டும் என்பதை தேரந்தெடுங்கள். GTD யில் விட்டு விடுங்கள்.
Stop loss பற்றி பிறகு பேசுவோம். முதலில் சிலவற்றை வாங்கி விற்று பயில்வோம்.
என்ன பங்குகளை வாங்க வேண்டும்…..
மேலும் பேசுவோம்…
leomohan
15-09-2014, 08:12 AM
BSE SENSEX 30 Companies
இந்த பட்டியல் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டை தினமும் நிர்ணயிக்கும் முப்பது பங்குகளின் பட்டியலாகும்.
http://i57.tinypic.com/vrsjmh.jpg
இந்த தொடுப்பில் காணலாம் http://www.bseindia.com/markets/Equity/newsensexstream.aspx
இந்த முப்பது நிறுவனங்களின் பங்கை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன். எவ்வாறு இவற்றின் வியாபாரம் குறியீட்டு எண்ணை மேலே கீழே போகச் செய்கிறது என்பதை விரைவில் காண்போம்.
தற்போது நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது இந்த முப்பது பங்குகளின் அன்றைய வியாபாரத்தை ஓட்டியே குறியீட்டு எண் மாறுபடும்.
இது மட்டுமல்லாமல் இன்னும் பல குறியீட்டு எண்கள் உள்ளன. அவற்றையும் விரைவில் பார்ப்போம்.
முதலில் நீங்கள் பங்குச் சந்தையில் இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிப் பழகுங்கள்.
மேலும் பேசுவோம்…..
leomohan
19-10-2014, 05:45 AM
இந்த பகுதியை மேலும் படிக்க எனது வலைப்பூவிற்கு (http://tamililvarthagam.blogspot.com/) வருகை தரவும். நன்றி.
leomohan
17-02-2015, 10:25 AM
இதை காணொளி தொடராக மாற்றி என்னுடைய சானலில் ஏற்றியுள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கு (http://www.youtube.com/leomohan)செல்லவும்.