Sabeekshana
25-07-2014, 12:20 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01550/TH14-OPED-ARTISTS__1550394f.jpg
தமிழ்த்தாய் எனைப்பார்த்து கேட்டாள்
"நீ ஏன் இன்னும் உன்னை தமிழ்ப்பெண் என்கிறாய்?" என்று
தயக்கமுடன் நான் பகர்ந்தேன்
"தமிழை நான் என்றும் பேசுவதால் என்று!!"
சட்டென அவள் உதட்டில் ஒரு கேலி சிரிப்பு
பட்டென அடுத்த வினாவினை தொடுத்தாள்.
"தூய தமிழை நீ என்றாவது
வாயாற பேசியது உண்டா பெண்ணே ?"
"தமிழ் நாட்டு மண்ணில் இன்று இங்கிலீசு இல்லை என்றால்
இல்லை ஒரு வாழ்க்கை அம்மா"
பதில் சொல்லிய வண்ணம் தமிழ் தாயையே பார்த்தேன்
அவள் கண்களில் தென்பட்ட காயத்தையும் தான்
தாயின் சினத்தீயும் சீறி பாயவே
மீண்டும் எனை பார்த்து கேட்டாள்
"எதனை நீ செய்தாய் உன் உயிர் தமிழர் வாழ
இந்த வையகத்தில்??" என்று...
"நான் தமிழ்க்கவி செய்தேன்; தமிழில் அனைத்தும் இயம்பினேன்;
அற்ற தமிழருக்கு உற்ற உதவி புரிந்தேன்"
என்று நான் விடை கூற இடைநடுவே என்னை
நிறுத்தினாள் என் தமிழ்த்தாய்
"2009 தனில் உனதருமை 50, 000 தமிழர்
ஈழ தேசத்தில் துடி துடித்து மாய்ந்தனரே..."
....வீறு கொண்ட உன் தமிழ் உணர்வு அவர்களுக்கு
விடி வெள்ளி காட்ட மறந்ததேன்?" என்றே வினவினாள்.
என் கண்ணில் பெருகிய கண்ணீர் ஒருபுறம்;
எம் மண்ணை நாம் தொலைத்த வேதனை மறுபுறம்;
"தாயே அது விதி செய்த மாயம்" என்றேன் - "மற்றும்
சதி செய்தார் சிங்களவர் " என்றேன்
குறுக்கிட்டாள் தாய் , "எனில் நீ செய்தது என்ன?"
உன் தொப்பூழ் கொடி உறவு காக்க ஏன் மறந்தாய்" என்றாள்
உதிர்ந்தேன் எனது ஆதங்கத்தை , "குமரி எனும் தமிழர் பூமியினை
குற்றுயிர் பெற்று ஆழியினுள் வீழ வைத்தது யார் தவறு தாயே?"
"தமிழ் காவியங்கள் பல செய்து வண்ண ஓவியர் என்ற பெயர் கொண்ட
தமிழரை தகர்த்தது அவ்விறைவனே" என சாடினேன்
"மூத்த மொழி எமது தமிழ் என இன்றும் நான் மார்பு தட்டி கொள்கிறேன்
ஆனால் மேற்குலக வாசிகள் எமை மதிப்பாரில்லை"
"புராதன மொழி அறிந்தவள் என்று மேற்குலகில் என்றும்
புதிய தொழில்கள் தருவாரில்லை"
"சர்வதேச மொழியே இன்று சர்வமாய் திகழ்கிறது
எனில் எனதுயிர் மூத்த தமிழ் வியாபகம் அடையாததேன்?"
"உன் கேள்விகளை நீயோ கேட்டு விட்டாய்- ஆனால் என்னுள்
இவ்வினாக்கள் என்றென்றும் ஆறாத ரணங்களாய்..." என்றேன்.
வேடிக்கையாகவே என்னை சிறு கணம் பார்த்தாள்
வேறேதும் பேசாமலே சென்றுவிட்டாள் என் உயிர்த்தாய்
தமிழ்த்தாய் எனைப்பார்த்து கேட்டாள்
"நீ ஏன் இன்னும் உன்னை தமிழ்ப்பெண் என்கிறாய்?" என்று
தயக்கமுடன் நான் பகர்ந்தேன்
"தமிழை நான் என்றும் பேசுவதால் என்று!!"
சட்டென அவள் உதட்டில் ஒரு கேலி சிரிப்பு
பட்டென அடுத்த வினாவினை தொடுத்தாள்.
"தூய தமிழை நீ என்றாவது
வாயாற பேசியது உண்டா பெண்ணே ?"
"தமிழ் நாட்டு மண்ணில் இன்று இங்கிலீசு இல்லை என்றால்
இல்லை ஒரு வாழ்க்கை அம்மா"
பதில் சொல்லிய வண்ணம் தமிழ் தாயையே பார்த்தேன்
அவள் கண்களில் தென்பட்ட காயத்தையும் தான்
தாயின் சினத்தீயும் சீறி பாயவே
மீண்டும் எனை பார்த்து கேட்டாள்
"எதனை நீ செய்தாய் உன் உயிர் தமிழர் வாழ
இந்த வையகத்தில்??" என்று...
"நான் தமிழ்க்கவி செய்தேன்; தமிழில் அனைத்தும் இயம்பினேன்;
அற்ற தமிழருக்கு உற்ற உதவி புரிந்தேன்"
என்று நான் விடை கூற இடைநடுவே என்னை
நிறுத்தினாள் என் தமிழ்த்தாய்
"2009 தனில் உனதருமை 50, 000 தமிழர்
ஈழ தேசத்தில் துடி துடித்து மாய்ந்தனரே..."
....வீறு கொண்ட உன் தமிழ் உணர்வு அவர்களுக்கு
விடி வெள்ளி காட்ட மறந்ததேன்?" என்றே வினவினாள்.
என் கண்ணில் பெருகிய கண்ணீர் ஒருபுறம்;
எம் மண்ணை நாம் தொலைத்த வேதனை மறுபுறம்;
"தாயே அது விதி செய்த மாயம்" என்றேன் - "மற்றும்
சதி செய்தார் சிங்களவர் " என்றேன்
குறுக்கிட்டாள் தாய் , "எனில் நீ செய்தது என்ன?"
உன் தொப்பூழ் கொடி உறவு காக்க ஏன் மறந்தாய்" என்றாள்
உதிர்ந்தேன் எனது ஆதங்கத்தை , "குமரி எனும் தமிழர் பூமியினை
குற்றுயிர் பெற்று ஆழியினுள் வீழ வைத்தது யார் தவறு தாயே?"
"தமிழ் காவியங்கள் பல செய்து வண்ண ஓவியர் என்ற பெயர் கொண்ட
தமிழரை தகர்த்தது அவ்விறைவனே" என சாடினேன்
"மூத்த மொழி எமது தமிழ் என இன்றும் நான் மார்பு தட்டி கொள்கிறேன்
ஆனால் மேற்குலக வாசிகள் எமை மதிப்பாரில்லை"
"புராதன மொழி அறிந்தவள் என்று மேற்குலகில் என்றும்
புதிய தொழில்கள் தருவாரில்லை"
"சர்வதேச மொழியே இன்று சர்வமாய் திகழ்கிறது
எனில் எனதுயிர் மூத்த தமிழ் வியாபகம் அடையாததேன்?"
"உன் கேள்விகளை நீயோ கேட்டு விட்டாய்- ஆனால் என்னுள்
இவ்வினாக்கள் என்றென்றும் ஆறாத ரணங்களாய்..." என்றேன்.
வேடிக்கையாகவே என்னை சிறு கணம் பார்த்தாள்
வேறேதும் பேசாமலே சென்றுவிட்டாள் என் உயிர்த்தாய்