PDA

View Full Version : அவலம்



inban
17-07-2014, 08:26 AM
அவலம்.
--------

உச்சி வெயிலில்
நுரை தள்ளும்போதும்
செவலைக்கு
உழவென்றால் மட்டும்
உற்சாகம் வந்துவிடும்.

கதிர்களைப் போரடிக்க
பிணை பூட்டினால்
ஈடுகொடுக்கும் இணைக்கு
பெரிய அவதிதான்.

பசிக்கென,
பாதி இராத்திரியில்
கட்டவிழ்த்தாலும்,
வேண்டிய மட்டும் தின்று
மீண்டும் கட்டுத்தறிக்கே வந்து
கண்மூடும்.

பொங்கலுக்கு
வண்ணமடித்து பலூன் கட்டி
கோவிலுக்கு கூட்டிப் போனால்
அத்தனைக் கண்களும்
என் செவலை மீதுதான்.

நிறைந்த நெல்வயலில்
வாய்வைத்ததால்
அதட்டிய பாவத்துக்கு
ஆறுவரை துறத்திய
கோயில் காளையை
செவலை வந்து
சீமைக்கே விரட்டியது.

பச்சையோடு
செவலையின்
பசையும் கரைந்துபோக

வாழ்வை
என்னோடு தொடங்கி
மண்ணோடு கழித்த
என் செவலை

நேற்றுதான்
கட்டாயப்படுத்தி ஏற்றப்பட்டது
லாரியில்;
கேரளாவுக்கு...

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 04:06 AM
தேவை முடிந்த்ததென வெட்டி விடுவதை போல் போன்ற அவலம் வேறொன்றும் இல்லை .இது தவிர்க்க படவேண்டும் ..கவிதை நன்று ..