PDA

View Full Version : என்னில் யாவுமானவன் அவனே..!



விஜய லெட்சுமி
11-07-2014, 06:40 PM
நிஜத்தின் காதலியாக
என்னை கவிவடித்தவன்..
அகமிளிர் வார்த்தைகள்
உண்மையாக்க உயிர்த்தவன்..!

நம்பிக்கையோடு எனக்காக
என்னோடு வாழ்பவன்..
சோகத்தில் கைக்கோர்த்து
நண்பனாக நடப்பவன்..!

அவனிழப்பிடம் நிரப்பாது
வெற்றிடம் ஆக்குபவன்..
அவன் மட்டுமே
உறவுகள் முழுமையாக்கியவன்..!

என்னை தேடுமிடம்
தாயென்று உணருபவன்..
வெறுத்தாலும் குழந்தையாய்
என்னை அணைப்பவன்.!

கொண்டவன் இன்பம்
சொர்க்கமென காட்டியவன்..
கொண்டிடா இன்பம்
இல்லையென்று உணர்த்தியவன்..!

கடவுளோடும் கிடைத்திடாத
தரிசனம் கொடுத்தவன்..
கண்கண்ட கடவுளென
எனக்காய் வந்தவன்..!

கடவுள் தயவிருந்தால்
எத்தாய்மடியிலும் நாம்..
கணவன் மனைவியென
உன்னத உறவாவோம்..!

நின்னிணை அன்று
இறைவா.. அவன்..!
உனக்கு நெல்லிடைமேல்
எனக்கு என்கணவன் ..!

...கவிபாரதி...

dellas
15-07-2014, 11:19 AM
நன்று ..

ramasubburam
21-07-2014, 06:44 AM
nice feeling........

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 03:56 AM
கவிதை நன்று...

விஜய லெட்சுமி
31-07-2014, 10:09 AM
நன்றி...தோழமையே