rambal
23-01-2004, 02:30 PM
எழுத்தென்பது வன்முறை..
காயங்களில்
இருந்து வழிந்தோடுகிறது
என் குருதி..
சுவை பார்க்க
நீட்டிய நாவோடு
காத்திருக்கிறாய்
ஒரு வெறி கொண்ட
ம்ருகமாய்..
தனிமையின் கணங்களில்
மனப் படகில்
பயணம் போகும்
எனது எண்ணங்களை
திமிங்கலமாய்
விழுங்குகிறாய்..
ஒரு காட்டாறாய்
வெட்டும் மின்னலாய்
எப்போதும்
அவ்வப்போதும்
தவணை முறையில்
என்னைத் தாக்குகிறாய்..
நிச்சலணங்கள் அற்று
ஈர்ப்பு அற்று
பறக்க வைத்து
உயரே சென்றதும்
கீழே தள்ளுகிறாய்..
மிதிக்கிறாய்..
ஒரு போதையாய்
என் மூளையை ஆக்ரமித்து
எங்கோ தூக்கியெறிகிறாய்..
என் சுவாசத்தில்
கனவில், தனிமையில்
பயணத்தில், வெறுமையில்,
சந்தோச கணத்தில்,
ஏகாந்தத்தில் எங்கும்
குடிபுகுந்து
என் நிம்மதி
வேரறுக்கிறாய்..
நீ மாத்திரம்
இல்லையென்றால்
மரமெல்லாம் இல்லை..
ஒரு கிளையின் நுனி
கிடைத்தால் கூடப் போதும்..
சாசுவதமாய் அமர்ந்துவிடுவேன்..
காயங்களில்
இருந்து வழிந்தோடுகிறது
என் குருதி..
சுவை பார்க்க
நீட்டிய நாவோடு
காத்திருக்கிறாய்
ஒரு வெறி கொண்ட
ம்ருகமாய்..
தனிமையின் கணங்களில்
மனப் படகில்
பயணம் போகும்
எனது எண்ணங்களை
திமிங்கலமாய்
விழுங்குகிறாய்..
ஒரு காட்டாறாய்
வெட்டும் மின்னலாய்
எப்போதும்
அவ்வப்போதும்
தவணை முறையில்
என்னைத் தாக்குகிறாய்..
நிச்சலணங்கள் அற்று
ஈர்ப்பு அற்று
பறக்க வைத்து
உயரே சென்றதும்
கீழே தள்ளுகிறாய்..
மிதிக்கிறாய்..
ஒரு போதையாய்
என் மூளையை ஆக்ரமித்து
எங்கோ தூக்கியெறிகிறாய்..
என் சுவாசத்தில்
கனவில், தனிமையில்
பயணத்தில், வெறுமையில்,
சந்தோச கணத்தில்,
ஏகாந்தத்தில் எங்கும்
குடிபுகுந்து
என் நிம்மதி
வேரறுக்கிறாய்..
நீ மாத்திரம்
இல்லையென்றால்
மரமெல்லாம் இல்லை..
ஒரு கிளையின் நுனி
கிடைத்தால் கூடப் போதும்..
சாசுவதமாய் அமர்ந்துவிடுவேன்..