PDA

View Full Version : கவிதைகள் நாம்



kulakkottan
08-06-2014, 06:58 PM
புரிந்துகொள்ள முடியா கவிதைகள் நாம்
தெரிந்து கொள்ள முடியா நாளை

தினம் தினம் வரிகள் மாறும்
வலிகளும் ஆறும்

நயமும் கொடுக்கிறோம்
நரியாயும் கெடுகிறோம்..

புரிந்து கொள்ள முன் கொன்று விடுகிறோம்
புரியப்படும் நேரம் சென்று விடுகிறோம்..

-- குளக்கோட்டன் --

கீதம்
23-06-2014, 12:20 AM
புரிந்துகொள்ளுமுன் கொல்வதும் புரியப்படுமுன் கொல்லப்படுவதும் வாழ்க்கையின் துரதிர்ஷ்டம்.

புரிந்துகொள்ளப்படாத கவிதையோடு புரிந்துகொள்ளப்படாத வாழ்நாட்களை ஒப்பிட்டமை அருமை.

பாராட்டுகள் குளக்கோட்டன்.