PDA

View Full Version : பணம்



sarna
22-04-2014, 07:11 AM
பணமறியா
பல லட்சம் உயிர்கள்

பரம சுகமாய்
பதறாமல் சுவாசிக்கும்

இதே
பூமியில்

இதே
வேளையில்

பரம சிரமத்தில்
சிக்கித் தவிக்கிறான்

சூதின் பிடியில்

பதறிச் சிதறுகிறான்
சிதறிப் பிதற்றுகிறான்

மனிதன் மட்டும்?

பணத்தை
(வி)சுவாசிப்பதால்...

ravisekar
11-08-2015, 12:16 PM
நல்ல சிந்தனை.

பண்டமாறில் தொடங்கிய பெருநோய் இது

சர்ணாவுக்கு பாராட்டுக்கள்.