PDA

View Full Version : கேட்பவன் கேட்க



sarna
22-04-2014, 06:39 AM
கண்டங்களையும்
கடலையும் சூழ்ந்த
வெப்பமயம்
கடும் பனி

கட்டற்ற சுறாவளி
காட்டாற்று வெள்ளம்

எழுந்துகொண்டிருக்கும்
கடல் மட்டம்

அங்கங்கே முழங்கும்
போர் முரசுகள்

அங்கங்கே முழங்கும்
பொய் அரசுகள்

பயணிகளோடு காணாமல்
போன விமானம்

குழந்தைகளுடன்
கவிழ்ந்த கப்பல்

உலகை உலுக்கும்
வல்லுறவுக் கருமங்கள்

வளர்ச்சியின் பெயரால்
வளங்களை தொலைத்து

மனிதவளம்
மட்டும் வளர்க்கும்
தலைவர்கள்
சொல்கிறார்கள்

இது
வல்லரசுக்காலமாம்?!!

கேட்பவன் கேட்டால்
சொல்பவனுக்கு சுரக்குமாம்...

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 12:31 PM
உலை வைக்கும் உலகியலின் மறுபெயர்..கவிதை அருமை தொடரட்டும் ...