PDA

View Full Version : சொன்னாலும்



Vinoth Kumar
14-02-2014, 09:52 AM
பிழை செய்த ஆத்மா பரலோகம்
சென்றது. நன்மையறியா உள்ளத்தை
உடைத்தெறிந்தது தேவகனங்கள். அங்கே
கதறி அழுதது நன்மை உண்மையென்றால் என்ன ?

பூலோகம் சென்று கற்று வா ஆணை இட்டாவன்
அங்கேயே இருந்து விட்டான்
ஒளி ஒலி காற்று அனல் நீர்த்துளி
புகை அண்டங்களா இவை?
இருவரின் ஆனந்தத்தில் உட்புகுந்தது அது
கற்றுக்கொள்ள கருத்தரித்தது
எத்தனை கடவுள்கள் இருந்தென்ன
என் கண்களில் நீர் மலர்ந்தால்
அதை துடைத்து அதை உன்

கண்களில் யாருக்குக் தெரியாமல்
வரவழைக்கும் தாயே !!
நாத்திகனென்ன சொல்லி கொள்ளும்
உயிரும் இதில் தோற்று தான் போகும்
தெய்வம்,கடவுள் எப்படி சொன்னாலும்
ஷக்தி உண்டு உன் தன் வடிவினிலே

பாவூர் பாண்டி
17-02-2014, 09:29 PM
நாத்திகனும் ஆத்திகனாவான்
தாயன்பில்..!!

அழகாக் சொன்னீர்கள்