Arudkavi Ganesh
10-02-2014, 06:12 PM
உற்றதோழி உன்மனையாள் ஒருத்தியே!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கற்றவர் யாவரும் கவிதையிற் பாடுவர்
பெற்றவள் அன்பே பெரிதென வாழ்வில்!
பற்றிய கணவன் பாதை மாறியே
தொற்று நோயொடு தொழுநோய்; காணினும்
கற்பக தருதரும் கள்ளொடு மதுவகை
மற்றவை தொட்டு மடியினும் உனக்குப்
பற்றுடன் பேணிப் பணிவிடை செய்வது
உற்ற தோழி உன்மனை யாளே!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கற்றவர் யாவரும் கவிதையிற் பாடுவர்
பெற்றவள் அன்பே பெரிதென வாழ்வில்!
பற்றிய கணவன் பாதை மாறியே
தொற்று நோயொடு தொழுநோய்; காணினும்
கற்பக தருதரும் கள்ளொடு மதுவகை
மற்றவை தொட்டு மடியினும் உனக்குப்
பற்றுடன் பேணிப் பணிவிடை செய்வது
உற்ற தோழி உன்மனை யாளே!