பாவூர் பாண்டி
20-01-2014, 01:44 AM
பணம்
படைத்தவன் பத்திரம்
எழுதுகிறான்
பாட்டாளியின் நிலத்திற்கு !!
M.Jagadeesan
20-01-2014, 02:57 AM
பாட்டாளி நிலத்திற்கு பட்டா எழுதுவான்
...படிப்பில்லா மக்களை ஏமாற்ற எண்ணுவான்
ஆட்சியில் இருக்கின்ற ஆணவம் தலைக்கேற
...அடிதடி செய்தே அபகரிக்க எண்ணுவான்
கோட்டான்கள் குடியிருக்கும் மரத்தை வேரோடு
...கோடாலி கொண்டே வெட்டிச் சாய்த்திடுவோம்
வீட்டுக்கு அனுப்பவே சூளுரை செய்திடுவோம்
...விரைவில் வருகின்ற தேர்தலில் சாதிப்போம்.