PDA

View Full Version : ஞாயிறு



பாவூர் பாண்டி
20-01-2014, 01:42 AM
சூரியனும் நிலவும்
நம்மை வழி
நடத்துபவை !!

இரவு பகல்
இல்லாமல் போனால்
உலகம் இயங்காது !

ஞாயிறு இல்லை யென்றால்
நவீனத்துவம்
விரைவில் முடிவு
கண்டு விடும் ..!!

ஞாயிறை
வரவேற்ப்போம்
மீண்டுமொரு திங்கள்
பிறக்க !!

M.Jagadeesan
20-01-2014, 07:22 AM
கவிதை நன்று பாவூர் பாண்டி அவர்களே! பாராட்டுக்கள்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
...நானிலம் வாழும் உயிர்கள் தழைக்க
தாயினும் மேலாம் பரிவைக் காட்டி
....தாவர வர்க்கம் செழித்து வளர்ந்திட
தூயநல் ஒளியை தினமும் உமிழ்ந்தே
...தூங்கா தியங்கும் தூமணி வண்ணனை
காய்கதிர்ச் செல்வனை கருணையின் மன்னனை
...கரங்கள் இரண்டும் கூப்பித் தொழுவோம்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
...திருவினும் திருவாய் ஜொலிக்கும் தீபம்!
பொங்கும் கடலும் அலைக்கரம் நீட்டியே
....போகம் துய்க்க நிலவை அழைக்கும்.
மங்கும் நிலவின் ஒளியில் காதலர்
...மயங்கிக் கிடப்பது தேன்நில வாகும்.
எங்கும் குளிர்ச்சி எங்கும் இன்பம்
...எல்லாம் தருவது நிலவின் ஒளியாம்!

பாவூர் பாண்டி
20-01-2014, 08:42 AM
பாராட்டுகளுக்கு நன்றி அய்யா !!