பாவூர் பாண்டி
20-01-2014, 01:41 AM
பெய்யும் மழையின்
துளி பூமியில்
விழுந்துச் சிதறும்
ஒரு சிதறலின்
அளவே
மனித உயிரினம் !!
M.Jagadeesan
20-01-2014, 05:51 AM
கவிதையும், கற்பனையும் நன்று!
அண்டத்தில் ஒருதுளி சூரிய மண்டலம்
...அத்துளி சிதறலில் சூரிய விண்மீன்
பண்டு தோன்றிய பிசிறே ஆகும்
...பக்கலில் சுற்றும் பூமிக் கிரகம்
கண்களில் காண இயலா அணுவென
...கட்டுரை செய்வோர் உரைத்தனர் ஆங்கே.
புண்பட் டுழலும் மனிதனை இங்கு
...மழையின் துளியென செப்புதல் முறையோ?
பாவூர் பாண்டி
20-01-2014, 08:39 AM
பாராட்டுகளுக்கு நன்றி அய்யா !!
மனிதன் மழைத் துளிக்கு
ஒப்பில்லைதான்
நான் அந்த சிறு துளியின் அளவில்
நிறுத்திவிட்டேன் மனித
உயிரினத்தை...