PDA

View Full Version : பொங்கலோ பொங்கல் !!



பாவூர் பாண்டி
11-01-2014, 04:03 AM
ஆதவனை வாழ்த்தி வணங்கிட வரும்
ஒருநாள் இத் தைத் திருநாள் !
உழவன் இன்பம் பல்கும் இனிய
ஒருநாள் இப் பொங்கல் திருநாள் !

அதி காலை வண்ணக்கோல மிட்டு
இல்லம் அழகுபெறச் செய்யும் திருநாள் !
பொங்கல் சமைத்து கோமா தாவை
வணங்கும் ஒருநாள் இத் திருநாள் !

கரும்பின் தித்திப்பை சுவைத்து இனிய
சொல் உறவாடும் நல்லோர் திருநாள் !
மஞ்சள் மிளகுடன் பனங் கிழங்கு
சமைத்து புசிக்கும் இத் திருநாள் !

நெஞ்சில் விதைத்த வீரம் களத்தில்
அறுவடை செய்யும் இத் திருநாள் !
வள்ளுவம் போற்றும் தமிழ் புலவர்
திரு வள்ளுவருக்கு ஒரு திருநாள் !

இத் திருநாளை போற்றி நல்லோர்
வழங்கும் தமிழ் உலகு செழித்து
உழவர்களின் கை இந்தத் தையில்
சிறக்கச் செய்வோம்!

வீரத் தமிழுக்கும் தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல் !!

கீதம்
11-01-2014, 09:16 PM
சுவையான பொங்கல் கவிதை. பாராட்டுகள் பாவூர் பாண்டி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

முரளி
12-01-2014, 04:34 AM
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

ஸ்ரீசரண்
12-01-2014, 08:03 AM
கவிதை அருமை.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

vasikaran.g
12-01-2014, 09:53 AM
பொங்கல் இனிக்கிறது கவிதையில் ...
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..

பாவூர் பாண்டி
13-01-2014, 12:45 AM
நன்றி அன்பர்களே

இராஜேஸ்வரன்
14-01-2014, 01:11 AM
அருமையான கவிதை.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.