PDA

View Full Version : உணர்வுகள்..



பாவூர் பாண்டி
18-12-2013, 08:23 PM
உணரத் தோணவில்லை
நினைந்து கிடக்கவில்லை
உற்று நோக்கியதுமில்லை
உச்சி நுகர்ந்ததுமில்லை

நினைந்து நனைந்துதான்
போனேன்
உனையுணர்ந்தபோது

விலகிச்சென்றிருந்தாய்!!

M.Jagadeesan
20-12-2013, 01:11 AM
படைப்புகள் கவிதை வடிவில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


உன்னைப் பார்த்த பொழுதுகளில்
...உலகம் மறந்து போனேனே!
கன்னக் குழியின் அழகினிலே
...காதல் கதவு திறந்ததடி!
பின்னிய சடையின் பேரழகு
...பிரமன் கொடுத்த சீதனமோ?
என்னை உனக்குத் துணையாக
...இருக்க இறைவன் படைத்தானே!