PDA

View Full Version : கண்வீச்சு



கும்பகோணத்துப்பிள்ளை
17-12-2013, 07:18 PM
கதவு திறந்ததும் காற்றும் வந்தது
கூடவே உன் கண்வீச்சும்
கால்பார்த்து நடக்கும் உண்
கண்வீச்சு என் வீட்டுக்கதவைக் கடக்கும்
கலையாத தலையை என் கை தடவும்
கலைந்த என் மனதை உண் பார்வை தடவும்
கடைப்புழக்கில் என் தந்தையின்
கனைப்புச்சத்தம் கேட்கையில்
கதவிடுக்கில் என் காதலும் ஒடுங்கும்
காலம் வரும் கண்னே! நம்
கண்கள் பிரிந்தாலும் கனவுகள் பிரியாமல்
வாழ்வோம் கணவன் மனைவியாய்!

M.Jagadeesan
18-12-2013, 01:25 AM
காதல் கவிதை அற்புதம் பிள்ளை அவர்களே!

தந்தையின் கனைப்பொலி கேட்டாலும் அஞ்சாது
...தையலவள் திருமுகத்தைத் தினமும் பார்த்திடுவீர்!
நிந்தனைகள் ஆயிரம் வந்தாலும் துவளாது
...நீள்விழியாள் காதலை நிலைநிறுத்த முற்படுவீர்!
குந்தியே பொழுதை வீணாகக் கழிக்காதீர்!
...குவளைக் கண்ணாளை கைப்பிடிக்கும் வழிகண்டால்
வந்தனை செய்தே இருவரையும் இவ்வுலகு
...வாழ்க! மணமக்கள்! என்றே வாழ்த்திடுமே!