View Full Version : தலைப்பில்லாத கவிதை-2
lavanya
20-01-2004, 10:08 PM
உன்னிடம் பேச
தனிமையில் எடுத்துக்கொண்ட
ஒத்திகைகள் எல்லாம்
ஒருநாள் கூட அரங்கேறவே இல்லை
எழுதிப்பார்த்ததற்கு
மட்டும் அடையாளம் இருக்கிறது
என் கவிதைகளாய்....
ஜீவனுள்ள கவிதைகளாய் உயிராய் அவ(ர்)ன் அப்படித்தானேஏ?
தொடருங்கள்!தலைப்பில்லாத கவிதை தவிப்பைச்சொல்லுது அழகாய்!பாராட்டுகள்!
முத்து
20-01-2004, 10:16 PM
ஜீவனுள்ள கவிதைகளாய் உயிராய் அவ(ர்)ன் அப்படித்தானேஏ?
தொடருங்கள்!தலைப்பில்லாத கவிதை தவிப்பைச்சொல்லுது அழகாய்!பாராட்டுகள்!
ஏங்க நிலா நீங்க வேற ..
இந்த தவிப்பே அவரோடதுதான்...
அப்படித்தானே லாவண்யா அவர்களே ... :D
lavanya
20-01-2004, 10:19 PM
அடடா முத்து...இன்னைக்கு நான் தான் மாட்டினேனா...?
puppy
20-01-2004, 10:19 PM
அடடா : காத்திருக்கும் கவிதைகள்
மன்மதன்
21-01-2004, 09:47 AM
தலைப்பில்லாத கவிதை-2
உன்னிடம் பேச
தனிமையில் எடுத்துக்கொண்ட
ஒத்திகைகள் எல்லாம்
ஒருநாள் கூட அரங்கேறவே இல்லை
எழுதிப்பார்த்ததற்கு
மட்டும் அடையாளம் இருக்கிறது
என் கவிதைகளாய்....
ஆஹா..அந்த கவிதைகளை இப்போ மன்ற நண்பர்களுக்கு தர்றீங்களா? அருமையாக இருக்கிறது.
இன்னும் தாருங்கள்..
அந்த ஒத்திகைப் பிரதிகளை..
அருமை லாவ்..பாராட்டுகள்.
இக்பால்
22-01-2004, 08:14 AM
அருமையான உண்மைதான் தங்கை.
நீங்கள் அவரருகே சென்றவுடன் பேச்சு திசைமாறிவிட்டதா?
இது உண்மையே. நாம் பேச நினைப்பது வேறு ஆனால் பேசிவிட்டு வருவது வேறு. இது எப்பொழுதும் நடப்பதே.
அருமையாக உள்ளது, உங்களுடைய தலைப்பில்லாக் கவிதைகளின் தொகுப்பு. தொடருங்கள்.