tnkesaven
05-12-2013, 04:23 PM
மகாத்மாவுக்கு மரியாதை.
மகத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்களை நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். அந்த்ப் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.
மகாத்மா காந்தியும், அவரது தொண்டர்களும் 1913-ஆம் ஆண்டு நடத்திய டிரான்ஸ்வால் யாத்திரை தென் ஆப்பிரிக்காவில் உள்ள வாக்ஸ்ரஸ்ட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் நடத்திக் காண்பிக்கப்பட்டது.
பாரபட்சமான சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாத்மாவும், அவரது தொண்டர்களும் சார்லஸ்டவுனிலிருந்து வாக்ஸ்ரஸ்ட் சிறை வரை 1913-இல் நடத்திய 6 கிலோ மீட்டர் யாத்திரையை ஏராளமானோர் மீண்டும் நடத்திக் காண்பித்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்வை நடத்துவதற்காக டர்பன் நகரில் இருந்து பீட்டர்மாரிட்ஸ்பர்க், லேடிஸ்மித் மற்றும் பல நகரங்களின் வழியாக நியூகேஸில் நகருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகாத்மாவுக்கு மரியாதை செலுத்தும் அந்நாட்டினருக்கு நாம் வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவிப்போம்.
மகத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்களை நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். அந்த்ப் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.
மகாத்மா காந்தியும், அவரது தொண்டர்களும் 1913-ஆம் ஆண்டு நடத்திய டிரான்ஸ்வால் யாத்திரை தென் ஆப்பிரிக்காவில் உள்ள வாக்ஸ்ரஸ்ட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் நடத்திக் காண்பிக்கப்பட்டது.
பாரபட்சமான சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாத்மாவும், அவரது தொண்டர்களும் சார்லஸ்டவுனிலிருந்து வாக்ஸ்ரஸ்ட் சிறை வரை 1913-இல் நடத்திய 6 கிலோ மீட்டர் யாத்திரையை ஏராளமானோர் மீண்டும் நடத்திக் காண்பித்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்வை நடத்துவதற்காக டர்பன் நகரில் இருந்து பீட்டர்மாரிட்ஸ்பர்க், லேடிஸ்மித் மற்றும் பல நகரங்களின் வழியாக நியூகேஸில் நகருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகாத்மாவுக்கு மரியாதை செலுத்தும் அந்நாட்டினருக்கு நாம் வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவிப்போம்.