View Full Version : மழலைச் சிரிப்பு...
arun karthik
01-12-2013, 10:19 AM
அறிவும் வயதும் இணைந்து,
கர்வத்தால் கட்டுவித்த,
இறுமாப்பை உடைத்தெறிந்து விடுகிறது,
மழலையின் வெள்ளந்த்திச் சிரிப்பு...
ஆர்.ஈஸ்வரன்
02-12-2013, 08:42 AM
நன்று
இதுபோன்ற கவிதைகளில் நேரடியாகப் பண்புகளைக் கூறாமல் ஓர் உதாரணத்தின் மூலம் காட்டினல் இன்னும் சிறக்கும்.
இதுபோல:
கண்டோர் நடுங்கும்
கல்வியிற் சிறந்த
பத்துத் தலையும் செருக்கேறி
செத்துத் தொலந்த
இராவணனும் தன்
குழந்தையின் மழலைமுன்
குழந்தையே!
--ரமணி
*****
M.Jagadeesan
02-12-2013, 02:13 PM
சொல்லும் மழலையிலே கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!
என்ற பாரதியின் வரிகள் ஈண்டு நோக்கத்தக்கது.
arun karthik
07-12-2013, 05:14 AM
அடுத்த முறை நிச்சயம் முயற்சி செய்கிறேன் ஐயா... தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி....
ஸ்ரீசரண்
08-12-2013, 01:59 PM
கவிதை நன்று.
தொடர வாழ்த்துக்கள்..
கீதம்
16-01-2014, 01:55 AM
மழலையின் சிரிப்புக்கு மயங்காதவரை மனிதரென்று சொல்லலும் தகுமோ? அழகான கவிதை. பாராட்டுகள் அருண் கார்த்திக்.