PDA

View Full Version : மதிகெட்ட மூடன்......................



sukhan
27-11-2013, 04:09 PM
நீள் வானாய் நிறைந்தவள்,
என்னுள் எழுந்து
எழுத்தாய் மாறாது
கருமேகம் ஒளித்த
மழைத்துளி ஆனாள்..............

காரணம் கேட்க
பொய் உரைத்தாள்........

ஓடும் நேரம் விரைந்து
ஒரு நொடியும் சிக்காது
கால ஓட்டத்தின் மாற்றத்தில்
மனித இயந்திரமாய்
மாற்றங்கள் நிறைந்து
ஊமை ஆனதாய்
என் எழுத்துக்கள்.........................

சிந்திக்க சொல்ல
உண்மை உரைத்தால்
மதிகெட்ட மூடன்
அந்த சோம்பல்
காரணமென்றாள்.............

விலகி போகச் சொல்ல
விழித்துக்கொண்டாள்
ஊற்றெடுக்கும் எண்ணங்கள்
எழுத்தாய் பதிவானது..................................

கீதம்
28-11-2013, 01:43 AM
கருமேகம் ஒளித்த மழைத்துளி என்றேனும் வானம் விட்டு இறங்கியே ஆகவேண்டும்.

கனமழையாய்ப் பொழியவிருக்கும் கவித்தருணங்களை இனிதே வரவேற்கிறேன்.

மனவோட்டத்தை கவியோட்டமாக்கியமை அழகு. பாராட்டுகள் சுகன். தொடர்ந்து எழுதுங்கள்.