M.Jagadeesan
23-11-2013, 02:53 AM
கண்கள் பெரிதானால் முட்டைக்கண் என்பார்கள்
மண்பார்த்து நடந்தால் கோழை என்பார்கள்
மூக்கு பெரிதானால் குடைமிளகாய் என்பார்கள்
நாக்கு பெரிதானால் வாயாடி என்பார்கள்
கறுப்பு நிறமென்றால் கருப்பாயி என்பார்கள்
மறுத்துப் பேசினால் திமிர்பிடித்தவள் என்பார்கள்
படிப்பு அதிகமெனில் கர்வி என்பார்கள்
படிப்பு இல்லையெனில் கைநாட்டு என்பார்கள்
குள்ளமாய் இருந்தாலோ " குள்ளி " என்பார்கள்
மெல்ல நடந்தாலோ " நொண்டி " என்பார்கள்
இந்தக் குறையெல்லாம் திருமணச் சந்தையிலே
வந்தவழி போகுமடா கோடிகள் கொடுத்தாலே!
மண்பார்த்து நடந்தால் கோழை என்பார்கள்
மூக்கு பெரிதானால் குடைமிளகாய் என்பார்கள்
நாக்கு பெரிதானால் வாயாடி என்பார்கள்
கறுப்பு நிறமென்றால் கருப்பாயி என்பார்கள்
மறுத்துப் பேசினால் திமிர்பிடித்தவள் என்பார்கள்
படிப்பு அதிகமெனில் கர்வி என்பார்கள்
படிப்பு இல்லையெனில் கைநாட்டு என்பார்கள்
குள்ளமாய் இருந்தாலோ " குள்ளி " என்பார்கள்
மெல்ல நடந்தாலோ " நொண்டி " என்பார்கள்
இந்தக் குறையெல்லாம் திருமணச் சந்தையிலே
வந்தவழி போகுமடா கோடிகள் கொடுத்தாலே!