PDA

View Full Version : கவிஞர்களே விதைப்போம் விதையொன்றை..!!!



சுதா
14-11-2013, 11:35 AM
http://fitforlifepledge.com/sites/default/files/styles/large/public/articles/images/hand%20with%20plant.jpg
புலவர்களே புலவர்களே

ஒன்றுகூடி எழுப்புங்கள்
எழுத்திலோர்
ஓலைக் குடிசையை...!!!

தமிழனில்லை தமிழகத்தில்
தமிழன்னையும் தமிழினமும்
நிழலின்றி அலைகிறது ..!!!


கவிஞர்களே கவிஞர்களே

கவிதையிலே கண்டறியுங்கள்
நவீன
பாதுகாப்பு ஆயுதமொன்றை ...!!!

அரசியல் நரிகள் ஊளையிடுகிறது
பயந்து
நடுங்குகிறாள் பாரதத்தாய் ..!!!


கவித் தோழிகளே தோழிகளே

கவி ஏடுகளை இணைத்து
ஆடையொன்றை
கச்சிதமாய் தைத்திடுங்கள்

அயலார் கலாச்சாரத்தில்
தமிழர்களின்
அங்கம் தெரிகிறது !!!


கவித் தோழர்களே தோழர்களே

கவிக்கோலைத் தூண்டு கோலாக்கி
கவி வரிகளை
தீயதை தீய்க்கும் நெய்யாக்குங்கள்...!!l

தேசத் தீபங்கலெல்லாம்
போதை இருளில்
ஆனந்தமாக உறங்குகிறது...!!!


எழுத்தாளர்களே எழுத்தாளர்களே

எழுதுகோலின் மையிலே
மகத்தான மருந்தொன்றை
உருவாக்குங்கள்...!!!

செயற்கையெனும் கிருமிகளால்
இயற்க்கை அன்னை
நோயுற்று இன்னல்படுகிறாள்...!!!


கவித் தோழர்களே தோழிகளே

ஊன்றுவோம் ஊன்றுவோம்
நாளும்
நற்க் கருவொன்றை ஊன்றுவோம்...!!!

நாளை
விருட்சமாகி தோப்பாகி
தூய்மைப் படுத்தட்டும்
மாசடைந்த மானுடத்தை...!!!




--Sutha--

மும்பை நாதன்
18-11-2013, 01:09 AM
அறுவடைக்கு மட்டும் வரத்தயாராய் பெரும்பான்மையினர் இருக்கும் நிலையில் விதைப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டிய படைப்பிற்கு நன்றி.

சுதா
18-11-2013, 07:53 AM
நன்றி தோழமையே