பென்ஸ்
01-09-2013, 06:06 PM
அன்றொரு மாலை நேரம்
மீண்டுமொருமுறை
மாலை போட்டு விட்டிருந்தார்கள்
காலருகில் இருந்து இன்றுவரை சொல்லாத
இனியவைகளை புலம்பி
விம்மி கொண்டிருந்தாள் என்னவள்
புதிதாய் யாரும் வரவே
அடங்கியிருந்த ஒப்பாரியை
கிளப்பிவிட்டு கொண்டிருந்தாள்
நான் முகம் அறியாதோ யாரோ ஒருத்தி
லுங்கியை மடித்து கட்டி கொண்டு
"நல்லா தானே இருந்தான்.."
என்று வியந்து கொண்டிருந்தனர் சிலர்
கரை வேட்டியில்
என் முன் வாழ்க்கையை
அரசியலாக்கி கொண்டிருந்தார்கள் சிலர்...
மரத்தின் கீழ் நின்றபடி
"ச்சே ரொம்ப நல்லவன் , இப்படியா.." என்று சான்றிதள்
கொடுத்து கொண்டிருந்தார்கள் வேறு பலர்
கிடைத்த சாராயத்தின் வேகத்தில்,
பாடை எங்கே, பூ எங்கே என்று
அவசரமாய் இருந்தார்கள் இவர்கள்...
கண்டால் கொல்லுவேன் என்று
கதறி கொண்டிருந்தவன்,
வாசலின் பக்கத்தில் கை கட்டி கொண்டு
அமைதியாய் நின்று கொண்டிருந்தான்...
எங்கோ சிலர் தொலைப்பேசியிலும்,
முக புத்தகத்திலும் துக்கம் பரிமாறி கொண்டிருந்தார்கள்...
செய்தி கேட்டு தொண்டை வரை வந்த துக்கத்தை ,
"நல்லவேளை நான் பிழைத்தேன்" என்று
அமைதி படுத்தி கொண்டிருந்தாள் வேறொருத்தி...
நேரமாச்சு என்று யாரோ அலற,
கண்ணில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டு
அமைதியாய் நின்று கொன்டிருந்தன்
என் மகன்...
முதல் முறை மாலை இட்ட போது வந்தது போலவே
உண்டு உறவாடி கலைந்து சென்றது இந்த கூட்டம்...
துக்கங்கள் பரிமாறிய பக்கங்கள் அடியில் போனது,
கலங்கியவர்கள் கடந்து போனார்கள்
மகனின் காய்ந்த வயிறை நிரப்ப
கலயம் தேடி போனாள் என்னவள்
கலயம் நிரப்ப
கடை நோக்கி சென்றான் என் மகன்...
மீண்டுமொருமுறை
மாலை போட்டு விட்டிருந்தார்கள்
காலருகில் இருந்து இன்றுவரை சொல்லாத
இனியவைகளை புலம்பி
விம்மி கொண்டிருந்தாள் என்னவள்
புதிதாய் யாரும் வரவே
அடங்கியிருந்த ஒப்பாரியை
கிளப்பிவிட்டு கொண்டிருந்தாள்
நான் முகம் அறியாதோ யாரோ ஒருத்தி
லுங்கியை மடித்து கட்டி கொண்டு
"நல்லா தானே இருந்தான்.."
என்று வியந்து கொண்டிருந்தனர் சிலர்
கரை வேட்டியில்
என் முன் வாழ்க்கையை
அரசியலாக்கி கொண்டிருந்தார்கள் சிலர்...
மரத்தின் கீழ் நின்றபடி
"ச்சே ரொம்ப நல்லவன் , இப்படியா.." என்று சான்றிதள்
கொடுத்து கொண்டிருந்தார்கள் வேறு பலர்
கிடைத்த சாராயத்தின் வேகத்தில்,
பாடை எங்கே, பூ எங்கே என்று
அவசரமாய் இருந்தார்கள் இவர்கள்...
கண்டால் கொல்லுவேன் என்று
கதறி கொண்டிருந்தவன்,
வாசலின் பக்கத்தில் கை கட்டி கொண்டு
அமைதியாய் நின்று கொண்டிருந்தான்...
எங்கோ சிலர் தொலைப்பேசியிலும்,
முக புத்தகத்திலும் துக்கம் பரிமாறி கொண்டிருந்தார்கள்...
செய்தி கேட்டு தொண்டை வரை வந்த துக்கத்தை ,
"நல்லவேளை நான் பிழைத்தேன்" என்று
அமைதி படுத்தி கொண்டிருந்தாள் வேறொருத்தி...
நேரமாச்சு என்று யாரோ அலற,
கண்ணில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டு
அமைதியாய் நின்று கொன்டிருந்தன்
என் மகன்...
முதல் முறை மாலை இட்ட போது வந்தது போலவே
உண்டு உறவாடி கலைந்து சென்றது இந்த கூட்டம்...
துக்கங்கள் பரிமாறிய பக்கங்கள் அடியில் போனது,
கலங்கியவர்கள் கடந்து போனார்கள்
மகனின் காய்ந்த வயிறை நிரப்ப
கலயம் தேடி போனாள் என்னவள்
கலயம் நிரப்ப
கடை நோக்கி சென்றான் என் மகன்...