arun karthik
18-08-2013, 05:24 PM
வாளின்றிப் போராடும்
களமதுவே வாழ்க்கை...
வானகமே வெடித்தாலும்
மிளிரும் நம்பிக்கை...
இன்பங்கள் தந்திடுமே
இனிக்கின்ற கண்ணீரை..
துன்பங்கள் தந்திடுமே
கொதிக்கின்ற கண்ணீரை..
வீழ்ந்துவீழ்ந்து எழுந்தாலும்
வீழாது உன்தலையே...
துவண்டுபோய் தளர்ந்தாலும்
தாழாது உன்விலையே...
ஏதும் செய்யாமல்
ஒளிகின்ற வாழ்க்கையினும்,
முயன்றதை இயன்றுவிட்டு
முடியட்டும் உன்வாழ்க்கை...
அச்சமது அறிவின்மை
ஆகட்டும் உன்வழியில்...
துச்சமது தோல்வியென
சாகட்டும் கண்விழியில்...
வெற்றியது காணாமல்
சுற்றமது காணாது...
விட்டுவிட்டு போகாது
லட்சியத்தை எட்டிவிட்டால்...
கொச்சையென பேசும்வாய்
கோரமாய் பேசட்டும்...
பொருட்கொள்ளாமல் வெற்றியதன்
சாரமது வீசட்டும்...
களமதுவே வாழ்க்கை...
வானகமே வெடித்தாலும்
மிளிரும் நம்பிக்கை...
இன்பங்கள் தந்திடுமே
இனிக்கின்ற கண்ணீரை..
துன்பங்கள் தந்திடுமே
கொதிக்கின்ற கண்ணீரை..
வீழ்ந்துவீழ்ந்து எழுந்தாலும்
வீழாது உன்தலையே...
துவண்டுபோய் தளர்ந்தாலும்
தாழாது உன்விலையே...
ஏதும் செய்யாமல்
ஒளிகின்ற வாழ்க்கையினும்,
முயன்றதை இயன்றுவிட்டு
முடியட்டும் உன்வாழ்க்கை...
அச்சமது அறிவின்மை
ஆகட்டும் உன்வழியில்...
துச்சமது தோல்வியென
சாகட்டும் கண்விழியில்...
வெற்றியது காணாமல்
சுற்றமது காணாது...
விட்டுவிட்டு போகாது
லட்சியத்தை எட்டிவிட்டால்...
கொச்சையென பேசும்வாய்
கோரமாய் பேசட்டும்...
பொருட்கொள்ளாமல் வெற்றியதன்
சாரமது வீசட்டும்...