arun karthik
09-08-2013, 05:53 AM
பொன்னொளி வீசும் கதிரவனும்,
காலையில் பூத்த புதுமலரும்,
மகரந்த வாச வசப்பட்ட பொன்வண்டுகளும்,
வெண்புகை பரப்பிய பனிப்பொழிவும்,
ஆனந்தக் கூத்தாடும் அணில்களும்,
ஆரவாரமாய் பாடும் பறவைகளும்,
விளக்கணைக்காமல் சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல் கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள் முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டன என் குளிர் காலக் காலையை!!!
காலையில் பூத்த புதுமலரும்,
மகரந்த வாச வசப்பட்ட பொன்வண்டுகளும்,
வெண்புகை பரப்பிய பனிப்பொழிவும்,
ஆனந்தக் கூத்தாடும் அணில்களும்,
ஆரவாரமாய் பாடும் பறவைகளும்,
விளக்கணைக்காமல் சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல் கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள் முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டன என் குளிர் காலக் காலையை!!!