முரளி
01-08-2013, 03:59 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRHrvCRn3O7qPELhmVNFhmm5lYBQKvFgigJGErzO3MumCUeJP0uhQ
“ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி
“நாலு மாசம், ஆறு நாள், எட்டு மணி, இருவது நிமிஷம்” – ராதா அவனை திருத்தினாள்.
“இப்படியே எவ்வளவு நாள்? நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கிறது? உங்க வீட்டிலே சொல்லிட்டியா?”
“இன்னும் இல்லே பாலாஜி, சீக்கிரமே சொல்லிடறேன். உங்க வீட்டிலே நீ சொல்லிட்டியா?”
“ம். அம்மாக்கு ஓகே. அப்பாதான் கொஞ்சம் நல்ல இடமா பாக்கலாமே! அரசாங்க குமாஸ்தா பொண்ணு வேண்டாமேன்னு பாக்கிறார்.”
“ஏய்! ”
“இல்லே இல்லே! சும்மா தமாஷுக்கு சொன்னேன். அப்பாவுக்கும் ஓகே தான்”
“அதானே பார்த்தேன்! நானும் எங்க அம்மாகிட்டே இன்னிக்கே சொல்லிடறேன்”- ராதா வெட்கத்தோடு.
“அப்புறம் என்ன! நான் போய் நாளைக்கே உனக்கு ஒரு நிச்சயதார்த்த ப்ரெசென்ட் வாங்கிடறேன். ஒரு நல்ல நாளா பாக்க சொல்லு உங்க வீட்டிலே. நாங்க வந்துடறோம், நிச்சயம் பண்ண.”
“பாலாஜி, எனக்கு ஒரு ஆசை. ஒரு நல்ல வைர மோதிரம் வேணும்.”
“நிச்சயத்திற்கு, உங்கப்பா தான் எனக்கு மோதிரம் போடணும். உனக்கு என்ன ஆசை?”
“அவர் உனக்கு போடத்தான் கேக்கிறேன். எங்கப்பாவாலே அவ்வளவு செலவு பண்ண முடியாதே”
“ஆனா, ராதா, அது ரொம்ப விலையாகுமே? எனக்கு கட்டுப்படி ஆகாதே?”
‘உன்னை யாரு இங்கே வாங்கி தர சொல்லறா?”
“பின்னே! என்னை என்ன திருட சொல்றியா?”
“அட ! எப்படி கண்டு பிடிச்சே? சுப்பர் பாலாஜி !எனக்காக நீ நகைக் கடைலேருந்து மோதிரத்தை நைசா அபேஸ் பண்ணணும். ”
“அடி பாவி! என்னடி! விளையாடறியா? என் கையிலே மோதிரம் போடறேன்னு, விலங்கு போட்டுடுவே போலிருக்கே?”
“அவசரப் படாதே பாலாஜி, நான் சொல்லறதை கேளு! நான் இதுக்கு முன்னாடி அண்ணா சாலை ஸ்ரீமதி நகைக்கடையிலே தான் வேலை செஞ்சிக் கிட்டிருந்தேன்! அங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு அத்துபடி. மாட்டிக்காம, எப்படி நகையை லவுட்டனும்ன்னு எனக்கு தெரியும்!”
“இதோ பாரு, அந்த ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ்லே, எங்கே பாத்தாலும் சி.சி.டிவி கேமரா இருக்கு. நானே பார்த்திருக்கேன். பத்தடிக்கு ஒரு செகூரிடி. நான் சொல்றதை கேளு ராதா, நான் கடன் வாங்கியாவது மோதிரம் வாங்கிடறேன். இந்த திருட்டு எல்லாம் வேண்டாமே?”
“சாதா நகை யாருக்கு வேணும் ? லைப்லே ஒரு த்ரில் வேணுண்டா. நான் சொல்றபடி கேட்டா, ஒரு ப்ளூ ஜாகர் டைமன்ட் மோதிரம் உனக்கு” - ராதா
“எதுக்கு இந்த வேண்டாத த்ரில்? இந்த அட்வென்ச்சர் தேவையா? மாட்டின்டா எவ்வளவு பிரச்னை? அவமானம்?”
“இவ்வளவு தானா உனக்கு என் பேரிலே நம்பிக்கை, பாலாஜி? நான் சொல்லற பிளான் கேளு. ரொம்ப ரொம்ப சிம்பிள். அப்புறமா முடியுமா முடியாதான்னு முடிவு பண்ணிக்க. நானும் முடிவு பண்ணிக்கறேன், நம்ப கல்யாணம் வேணுமா வேண்டாமான்னு? ”
“சரி சொல்லு. ரொம்ப ரிஸ்க் எடுக்ககச்சொல்றே. எனக்கென்னவோ இந்த விபரீத விளையாட்டு வேண்டாமுன்னு தோணறது.”
ராதா சொன்னாள். பாலாஜி, உன்னிப்பாக ராதாவின் நகை திருடும் ஐடியா கேட்டான். “அட, பிளான் நல்லா இருக்கே, நடக்கும் போலிருக்கே. கேடி, உனக்கு எப்படி இப்படிஎல்லாம் ஐடியா தோணறது?”
“நான் தான் அப்பவே சொன்னேனே! இது நடக்கும். நீ நாளைக்கே போறே! காரியத்தை கச்சிதமா முடிக்கறே. அப்புறம் நான் உனக்கு சூப்பரா ஒரு பரிசு தரேன்.” கண் சிமிட்டினாள்.
****
அண்ணா சாலை ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ்
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTT9MJFmtAwGc2KiUYejbuI-j6UaGcj-AIWxTrtacu5-MM5JtfItQhttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTLzl77KmJ9SKL99I1PkTBFJ2rBmFpBPEJkeOyeK2XmZp76ZGhJ
காலை 11 மணி. பெரிய நகைக் கடை. குளிரூட்டப் பட்டது. வெள்ளி நகை, பாத்திரங்கள் ஒரு பக்கம், பிளாட்டினம் நகைகள் இன்னொரு பக்கம், தங்க சங்கிலி, மாங்கல்யம் போன்றவை வேறொரு பக்கம் என பிரிந்திருந்தது. வைர நகைகள் தனியாக உள்ளே ஒரு அறையில்.
கடையில், எங்கே திரும்பினாலும், ஒரு சி சி டிவி கேமரா. போவோர் வருவோரை படம் பிடித்துக் கொண்டிருந்தது. பத்தடிக்கு ஒரு மீசை வெச்ச செக்யூரிட்டி. பயமுறுத்தற மாதிரி, பான்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு. யம்மாடி! மாட்டினா டின் கட்டிடுவாங்களே.
பாலாஜி உள்ளே நுழைந்தான். ராதாவின் அறிவுரையின் பேரில், டிப் டாப் உடை. இடது வலது கையில் மோதிரம். நல்லா தெரியற மாதிரி, ஒரு பிரேஸ்லெட். கழுத்தில் செயின்.
வாசல் செக்யூரிட்டி வணக்கம் சொல்லி, கதவை திறக்க, நேராக வைர நகை பகுதிக்கு போனான்.
தலைக்கு நேரே, ரெண்டு கேமரா இவனையே பார்த்துக் கொண்டிருந்தது. வைர நகை பகுதியில், மூன்று நான்கு சிப்பந்திகள் வாடிக்கையாளருக்கு நகைகளை காண்பித்து கொண்டிருந்தனர். பாலாஜிக்கு, அந்த குளிரிலும் கொஞ்சம் வியர்த்தது. இரண்டு சிவிங்கம் எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான். டென்ஷன் கொஞ்சம் குறைந்தது
“சார்! சொல்லுங்க! என்ன வேணும்”
“நல்ல, உசந்த வைர மோதிரம் காட்டுங்க. பெஸ்ட் டைமன்ட் தான் வேணும்”
“இதோ! இத பாக்கறீங்களா”
கடை சிப்பந்தி மரியாதையுடன், வைர மோதிரங்களை எடுத்து வைத்தான்.
“இல்லேயில்லே, எனக்கு ரூபா இரண்டு லட்சம் ரேஞ்சுக்கு மேலே காமிங்க”
“சார், அப்போ ஒரு நிமிஷம் இருங்க சார், மேனேஜரை வர சொல்லறேன்”
“பரவாயில்லே. நீங்களே காமியுங்க’
தொடரும்.... இதே திரியில் கீழே பார்க்கவும்.....
“ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி
“நாலு மாசம், ஆறு நாள், எட்டு மணி, இருவது நிமிஷம்” – ராதா அவனை திருத்தினாள்.
“இப்படியே எவ்வளவு நாள்? நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கிறது? உங்க வீட்டிலே சொல்லிட்டியா?”
“இன்னும் இல்லே பாலாஜி, சீக்கிரமே சொல்லிடறேன். உங்க வீட்டிலே நீ சொல்லிட்டியா?”
“ம். அம்மாக்கு ஓகே. அப்பாதான் கொஞ்சம் நல்ல இடமா பாக்கலாமே! அரசாங்க குமாஸ்தா பொண்ணு வேண்டாமேன்னு பாக்கிறார்.”
“ஏய்! ”
“இல்லே இல்லே! சும்மா தமாஷுக்கு சொன்னேன். அப்பாவுக்கும் ஓகே தான்”
“அதானே பார்த்தேன்! நானும் எங்க அம்மாகிட்டே இன்னிக்கே சொல்லிடறேன்”- ராதா வெட்கத்தோடு.
“அப்புறம் என்ன! நான் போய் நாளைக்கே உனக்கு ஒரு நிச்சயதார்த்த ப்ரெசென்ட் வாங்கிடறேன். ஒரு நல்ல நாளா பாக்க சொல்லு உங்க வீட்டிலே. நாங்க வந்துடறோம், நிச்சயம் பண்ண.”
“பாலாஜி, எனக்கு ஒரு ஆசை. ஒரு நல்ல வைர மோதிரம் வேணும்.”
“நிச்சயத்திற்கு, உங்கப்பா தான் எனக்கு மோதிரம் போடணும். உனக்கு என்ன ஆசை?”
“அவர் உனக்கு போடத்தான் கேக்கிறேன். எங்கப்பாவாலே அவ்வளவு செலவு பண்ண முடியாதே”
“ஆனா, ராதா, அது ரொம்ப விலையாகுமே? எனக்கு கட்டுப்படி ஆகாதே?”
‘உன்னை யாரு இங்கே வாங்கி தர சொல்லறா?”
“பின்னே! என்னை என்ன திருட சொல்றியா?”
“அட ! எப்படி கண்டு பிடிச்சே? சுப்பர் பாலாஜி !எனக்காக நீ நகைக் கடைலேருந்து மோதிரத்தை நைசா அபேஸ் பண்ணணும். ”
“அடி பாவி! என்னடி! விளையாடறியா? என் கையிலே மோதிரம் போடறேன்னு, விலங்கு போட்டுடுவே போலிருக்கே?”
“அவசரப் படாதே பாலாஜி, நான் சொல்லறதை கேளு! நான் இதுக்கு முன்னாடி அண்ணா சாலை ஸ்ரீமதி நகைக்கடையிலே தான் வேலை செஞ்சிக் கிட்டிருந்தேன்! அங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு அத்துபடி. மாட்டிக்காம, எப்படி நகையை லவுட்டனும்ன்னு எனக்கு தெரியும்!”
“இதோ பாரு, அந்த ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ்லே, எங்கே பாத்தாலும் சி.சி.டிவி கேமரா இருக்கு. நானே பார்த்திருக்கேன். பத்தடிக்கு ஒரு செகூரிடி. நான் சொல்றதை கேளு ராதா, நான் கடன் வாங்கியாவது மோதிரம் வாங்கிடறேன். இந்த திருட்டு எல்லாம் வேண்டாமே?”
“சாதா நகை யாருக்கு வேணும் ? லைப்லே ஒரு த்ரில் வேணுண்டா. நான் சொல்றபடி கேட்டா, ஒரு ப்ளூ ஜாகர் டைமன்ட் மோதிரம் உனக்கு” - ராதா
“எதுக்கு இந்த வேண்டாத த்ரில்? இந்த அட்வென்ச்சர் தேவையா? மாட்டின்டா எவ்வளவு பிரச்னை? அவமானம்?”
“இவ்வளவு தானா உனக்கு என் பேரிலே நம்பிக்கை, பாலாஜி? நான் சொல்லற பிளான் கேளு. ரொம்ப ரொம்ப சிம்பிள். அப்புறமா முடியுமா முடியாதான்னு முடிவு பண்ணிக்க. நானும் முடிவு பண்ணிக்கறேன், நம்ப கல்யாணம் வேணுமா வேண்டாமான்னு? ”
“சரி சொல்லு. ரொம்ப ரிஸ்க் எடுக்ககச்சொல்றே. எனக்கென்னவோ இந்த விபரீத விளையாட்டு வேண்டாமுன்னு தோணறது.”
ராதா சொன்னாள். பாலாஜி, உன்னிப்பாக ராதாவின் நகை திருடும் ஐடியா கேட்டான். “அட, பிளான் நல்லா இருக்கே, நடக்கும் போலிருக்கே. கேடி, உனக்கு எப்படி இப்படிஎல்லாம் ஐடியா தோணறது?”
“நான் தான் அப்பவே சொன்னேனே! இது நடக்கும். நீ நாளைக்கே போறே! காரியத்தை கச்சிதமா முடிக்கறே. அப்புறம் நான் உனக்கு சூப்பரா ஒரு பரிசு தரேன்.” கண் சிமிட்டினாள்.
****
அண்ணா சாலை ஸ்ரீமதி ஜ்வேல்லேர்ஸ்
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTT9MJFmtAwGc2KiUYejbuI-j6UaGcj-AIWxTrtacu5-MM5JtfItQhttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTLzl77KmJ9SKL99I1PkTBFJ2rBmFpBPEJkeOyeK2XmZp76ZGhJ
காலை 11 மணி. பெரிய நகைக் கடை. குளிரூட்டப் பட்டது. வெள்ளி நகை, பாத்திரங்கள் ஒரு பக்கம், பிளாட்டினம் நகைகள் இன்னொரு பக்கம், தங்க சங்கிலி, மாங்கல்யம் போன்றவை வேறொரு பக்கம் என பிரிந்திருந்தது. வைர நகைகள் தனியாக உள்ளே ஒரு அறையில்.
கடையில், எங்கே திரும்பினாலும், ஒரு சி சி டிவி கேமரா. போவோர் வருவோரை படம் பிடித்துக் கொண்டிருந்தது. பத்தடிக்கு ஒரு மீசை வெச்ச செக்யூரிட்டி. பயமுறுத்தற மாதிரி, பான்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு. யம்மாடி! மாட்டினா டின் கட்டிடுவாங்களே.
பாலாஜி உள்ளே நுழைந்தான். ராதாவின் அறிவுரையின் பேரில், டிப் டாப் உடை. இடது வலது கையில் மோதிரம். நல்லா தெரியற மாதிரி, ஒரு பிரேஸ்லெட். கழுத்தில் செயின்.
வாசல் செக்யூரிட்டி வணக்கம் சொல்லி, கதவை திறக்க, நேராக வைர நகை பகுதிக்கு போனான்.
தலைக்கு நேரே, ரெண்டு கேமரா இவனையே பார்த்துக் கொண்டிருந்தது. வைர நகை பகுதியில், மூன்று நான்கு சிப்பந்திகள் வாடிக்கையாளருக்கு நகைகளை காண்பித்து கொண்டிருந்தனர். பாலாஜிக்கு, அந்த குளிரிலும் கொஞ்சம் வியர்த்தது. இரண்டு சிவிங்கம் எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான். டென்ஷன் கொஞ்சம் குறைந்தது
“சார்! சொல்லுங்க! என்ன வேணும்”
“நல்ல, உசந்த வைர மோதிரம் காட்டுங்க. பெஸ்ட் டைமன்ட் தான் வேணும்”
“இதோ! இத பாக்கறீங்களா”
கடை சிப்பந்தி மரியாதையுடன், வைர மோதிரங்களை எடுத்து வைத்தான்.
“இல்லேயில்லே, எனக்கு ரூபா இரண்டு லட்சம் ரேஞ்சுக்கு மேலே காமிங்க”
“சார், அப்போ ஒரு நிமிஷம் இருங்க சார், மேனேஜரை வர சொல்லறேன்”
“பரவாயில்லே. நீங்களே காமியுங்க’
தொடரும்.... இதே திரியில் கீழே பார்க்கவும்.....