PDA

View Full Version : அழகின் மர்மம்



Vinoth Kumar
13-07-2013, 04:18 PM
கார் மேக கூட்டமொன்று நீராட
விழையும் பொழுது -மலர்ந்த
புலோக தாமரையின் அழகை
கண்டு அந்த குளத்தை நிரப்ப,
அது பட்டும் படாமல் மேல
போனதன்றோ !

கார் மேகம் கடுகடுக்க
இடி பலபல வேகத்தொடருடன்
அங்கிடிக்க -சுற்றி இருந்த பாட்டன்
மரங்களெல்லாம் கருக -அதுவோ
சிரித்ததென்ன !கார் ஐயப்பட -
அது புன்னகைத்து ஆண்டியின்
பூக்கூடையில் நகரும் பொழுது
சொன்னதாம் -நான் தான்
எதுவும் செய்யவில்லையே !

கீதம்
19-07-2013, 12:23 AM
அழகின் மர்மம் கவிதையைப் புரிந்துகொள்வதிலும் நீடிக்கிறது. நெடிய முயற்சிக்குப் பின் நாணலும், ஆலமரமும் கதையையும் ஒருவகையில் நினைவூட்டிப்போகிறது.

நன்று. தொடர்ந்து எழுதுங்கள் வினோத்.